News March 21, 2025
அதிகாரமிக்கவர்களுக்கு தனி நீதியா?

டெல்லி ஐகோர்ட் நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் <<15836861>>₹100 கோடிக்கும்<<>> அதிகமாக பணமும் தங்கமும் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து, அவரை அலகாபாத் ஐகோர்ட்டுக்கு பணிமாற்றம் செய்து கொலீஜியம் உத்தரவிட்டுள்ளது. இதுவே சாதாரண மக்களாக இருந்தால், பணமோசடி வழக்குப் போட்டு சிறையில் தள்ளப்படுவர். ஆனால், நீதிபதிகளாக இருந்தால் வேறு கோர்ட்டுக்கு மாற்றப்படுவார்கள். இது எப்படி நீதியாகும் என்று கேட்கின்றனர் நெட்டிசன்கள்.
Similar News
News September 15, 2025
கமல் சொன்ன ‘கிரியா ஊக்கி’ அர்த்தம் தெரியுமா?

‘கிரியா ஊக்கி’ – இன்று அதிகம் தேடப்படும் சொல்லாக உள்ளது. அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, கமல்ஹாசன் வெளியிட்ட பதிவில், இச்சொல்லை பயன்படுத்தியுள்ளார். கிரியை என்பதற்கு செயல் என்று பொருள். அப்படியானால், ‘கிரியா ஊக்கி’ என்பதை செயல்படுவதற்கான ஊக்கம், செயலூக்கம் என பொருள் கொள்ளலாம். அரசியலில் தனக்கு உந்துதலாக, தொடர்ந்து உழைக்க உத்வேகம் கொடுப்பவர் அண்ணா எனக் குறிப்பிட்டு இச்சொல்லை பயன்படுத்தியுள்ளார் கமல்.
News September 15, 2025
வாரத்தின் முதல் நாளிலேயே சரிவுடன் முடிந்த பங்குச்சந்தை

இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் 118 புள்ளிகள் சரிவுடன், 81,785-ல் நிறைவடைந்தது. அதே நேரத்தில் நிஃப்டி 44 புள்ளிகள் சரிந்து 25,069-ல் வர்த்தகம் முடிந்துள்ளது. DLF, ஏபிபி இந்தியா, HDFC வங்கி உள்ளிட்ட நிறுவங்களின் பங்குகள் சரிந்துள்ளன. அதேநேரம் ஸ்ரீராம் ஃபைனான்ஸ், இன்ஃபோசிஸ், வோடபோன் ஐடியா, ரிலையன்ஸ் உள்ளிட்டவைகளின் பங்குகள் உயர்ந்துள்ளன.
News September 15, 2025
புதிய போட்டோ.. மீண்டும் விஜய் – திரிஷா சர்ச்சை

இன்ஸ்டாகிராமில் திரிஷா பதிவிட்டுள்ள புகைப்படத்தால், விஜய் உடனான கிசுகிசுவில் மீண்டும் அவர் சிக்கியுள்ளார். விமானத்தில் இருக்கும் புகைப்படத்தை அவர் பதிவிட்டுள்ளார். ஆனால், விஜய்யின் பரப்புரை வாகனத்தில் அவர் இருப்பதாக பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், தேர்தல் வரை கொஞ்சம் சும்மா இருங்க என்றும் தவெகவினர் சிலர் பதிவிட்டு வருகின்றனர். இப்படியெல்லாம் கமெண்ட் செய்வது தேவை தானா?