News February 23, 2025
ஏழைகளின் ஆப்பிளில் இவ்வளவு நன்மையா?

கொய்யாப் பழத்தை ஏழைகளின் ஆப்பிள் என்று அழைப்பதுண்டு. காரணம், ஆப்பிளை விட அதிகமான சத்துக்கள் இதில் இருக்கின்றன. குறிப்பாக, இதிலிருக்கும் அதிகப்படியான நார்ச்சத்து மலச்சிக்கலை தவிர்த்து, வயிற்றை நலமாக வைக்க உதவுகிறது. இதில் இருக்கும் பொட்டாசியம், ரத்தத்தில் கொலஸ்டிரால் அளவை குறைத்து இதயத்தை பாதுகாக்கிறது. அதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் கூட்டுகிறது.
Similar News
News February 23, 2025
பல்ப் வாங்கிய IIT பாபா

இன்றைய இந்தியா vs பாகிஸ்தான் போட்டியில் பாகிஸ்தான்தான் வெற்றி பெறும் என்று IIT பாபா கணித்திருந்தார். அந்த கணிப்பை பொய்யாக்கி, இந்திய அணி வெற்றி பெற்றதையடுத்து சோசியல் மீடியாவில் பாபாவை ரசிகர்கள் பஞ்சராக்கி வருகின்றனர். ஐஐடியில் படித்து முடித்துவிட்டு சன்னியாசியான பாபா, கும்பமேளாவில் புகழடைந்தார். ஆனாலும், வருங்கால கணிப்புகள் அவருக்கு கை வராத கலை போல.
News February 23, 2025
மதத்தை கேலி செய்வதா? மோடி கொதிப்பு

கும்பமேளா குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சித்து வரும் நிலையில், சில தலைவர்கள் குழு, மதத்தை கேலி செய்தும், மக்களை பிளவுபடுத்தவும் முயற்சி செய்து வருவதாக PM மோடி குற்றஞ்சாட்டியுள்ளார். பல நேரங்களில் அந்நிய சக்திகள் அவர்களுக்கு உதவி செய்து இந்தியாவையும் அதன் மதத்தையும் பலவீனப்படுத்துவதாக சாடினார். இந்து நம்பிக்கைகளை வெறுப்பவர்கள், பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வருவதாகவும் கூறினார்.
News February 23, 2025
அடிதடி வழக்கு: பாஜக எம்எல்ஏக்கு 3 மாதம் சிறை

பீகார் பாஜக எம்எல்ஏக்கு அடிதடி வழக்கில் 3 மாதம் சிறை தண்டனை விதித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அலிநகர் தொகுதி எம்எல்ஏவான மிஸ்ரி லால் மற்றும் அவரின் உதவியாளர், உமேஷ் என்பவரை தகராறின்போது தாக்கி மண்டையை உடைத்ததாக வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் மிஸ்ரி லால், உதவியாளருக்கு 3 மாதம் சிறை, தலா ரூ.500 அபராதம் விதித்து கோர்ட் உத்தரவிட்டது. எனினும், பிணைத் தொகையில் ஜாமீன் அளித்தது.