News September 12, 2025
வீட்டில் பச்சிளம் குழந்தை இருக்கா? கவனமா இருங்க!

10 மாதம் தவமிருந்து பெற்ற குழந்தையை பேணி பாதுகாப்பது பெற்றோரின் கடமை. மகாராஷ்டிராவில் 7 மாத குழந்தை, கீழே கிடந்த சாக்லேட்டை எடுத்து சாப்பிட, அது தொண்டையில் சிக்கி, மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. தவழும் வயதில் எதை பார்த்தாலும், குழந்தைகள் வாயில் எடுத்து போட்டுக் கொள்ளும் பழக்கம் கொண்டிருப்பார்கள். ஆனால், விழிப்புடன் இருக்க வேண்டியது பெற்றோர்கள்தான். இதனை அனைவரும் ஷேர் பண்ணுங்க.
Similar News
News September 12, 2025
பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச AI படிப்புகள்

அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் இலவசமாக AI படிப்புகளை வழங்கவுள்ளதாக IIT மெட்ராஸ் அறிவித்துள்ளது. வகுப்பறை கற்பித்தலில், தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்கும் திறன்களை ஆசிரியர்களுக்கு வழங்குவதே இதன் நோக்கமாகும். கால அளவு: 25 – 45 மணி நேரம். சான்றிதழ் பெற விரும்புவோர் குறைந்த தொகையை செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்.10. இதற்கு விண்ணப்பிக்க இங்கே <
News September 12, 2025
Asia Cup: பாதியில் விலகிய இந்திய ஆல்ரவுண்டர்!

ஆசிய கோப்பைக்கான இந்திய அணியின், ரிசர்வ் பட்டியலில் இடம் பெற்றிருந்த வாஷிங்டன் சுந்தர், தொடரில் இருந்து விலகியுள்ளார். அவர் இங்கிலாந்தின் கவுண்டி அணியான ஹேம்ஷேர் அணிக்காக விளையாடவுள்ளதால், தொடரில் இருந்து விலகியுள்ளார். சமீபத்தில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், 4 போட்டிகளிலும் ஒரு சதம் உள்பட 284 ரன்கள் குவித்து, 7 விக்கெட்களையும் சுந்தர் கைப்பற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
News September 12, 2025
டெல்லியை புறக்கணிக்கிறாரா அண்ணாமலை?

துணை ஜனாதிபதி பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும் அண்ணாமலை பங்கேற்காதது பேசுபொருளாகியுள்ளது. முன்னதாக, டெல்லியில் அமித்ஷா தலைமையில் நடந்த உயர்மட்ட குழு கூட்டத்திற்கும் அண்ணாமலை செல்லவில்லை. அதிகமான திருமண நிகழ்வுகள், வேலைகள் இருந்ததால் போகவில்லை என விளக்கமும் கொடுத்திருந்தார். இது உள்கட்சி உரசலாக இருக்கக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். உங்க கருத்தை கமெண்ட் பண்ணுங்க.