News November 25, 2024
அமைகிறதா குடியரசுத் தலைவர் ஆட்சி?

மகாராஷ்டிராவில் நாளையுடன் சட்டசபை பதவிக்காலம் நிறைவடைகிறது. இதனால், உடனடியாக ஆட்சியமைக்க வேண்டிய கட்டாயத்தில் BJP உள்ளது. ஆனால், இதுவரை கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தை நிறைவு பெறாததால் இன்னும் முதல்வர் தேர்வு செய்யப்படவில்லை. இதனால், புதன்கிழமை ஜனாதிபதி ஆட்சி அமையலாம் என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். அதேநேரம், சில நாள் அவகாசம் அளிக்க ஆளுநருக்கு அதிகாரம் உண்டு என்றும் சொல்லப்படுகிறது.
Similar News
News December 18, 2025
தீக்குளித்து உயிரிழந்த பக்தர்: அண்ணாமலை வருத்தம்

மதுரை, நரிமேடு பகுதியை சேர்ந்த பூர்ண சந்திரன் என்பவர் தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். இந்நிலையில், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை தடை செய்த திமுக அரசை கண்டித்து பூர்ண சந்திரன் என்ற முருக பக்தர் உயிரிழந்தது வருத்தம் அளிப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். வழக்கு கோர்ட்டில் உள்ளது, கோர்ட் மீது அனைவருக்கும் நம்பிக்கை இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். *தற்கொலை எதற்கும் தீர்வல்ல
News December 18, 2025
நிதிஷ் ஹிஜாப்பை இழுத்தது சரி தான்: மத்திய அமைச்சர்

பிஹார் CM நிதிஷ்குமார், பெண் டாக்டரின் <<18575369>>ஹிஜாப்பை<<>> பிடித்து இழுத்தது சரி தான் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார். அரசு திட்டத்தில் சரியான நபர்தான் பயனடைகிறாரா என்பதை தெரிந்து கொள்வது அவசியம். விமான நிலையத்திற்கோ, பாஸ்போர்ட் விண்ணப்பிக்கவோ சென்றால், முகத்தை மூடியா வைத்திருப்பீர்கள், இது என்ன இஸ்லாமிய நாடா, இது இந்தியா, சட்டத்தின் ஆட்சியே இங்கு நடக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
News December 18, 2025
கலை நாயகன் காலமானார்… PM மோடி உருக்கமாக இரங்கல்

உலகின் உயரமான சிலையை வடிவமைத்தவரும், பத்ம பூஷன் விருது வென்ற சிற்பியுமான <<18599857>>ராம் சுதரின்<<>> மறைவு கலைத் துறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த PM மோடி, தனித்துவமான சிற்பங்களின் மூலம் இந்தியாவுக்கு பல மதிப்புமிக்க சின்னங்களை ராம் சுதர் வழங்கியுள்ளதாக புகழாரம் சூட்டியுள்ளார். அவரது படைப்புகள் கலைஞர்களுக்கு எப்போதும் உத்வேகம் அளிக்கும் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.


