News June 25, 2024
பிறருக்கு டிக்கெட் முன்பதிவு செய்தால் அபராதமா? விளக்கம்

ரயில்களில் பயணம் செய்ய, உறவினர்கள் தவிர வேறு யாருக்காவது ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தால் ₹10,000 அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்ற தகவல் வேகமாக பரவியது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ரயில்வே நிர்வாகம், யாருக்கு வேண்டுமானாலும் டிக்கெட் பதிவு செய்யலாம். ஆதார் அடையாளத்தை உறுதிப்படுத்தி தனிநபர் ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 24 டிக்கெட்டுகளை பதிவு செய்யலாம் என விளக்கமளித்துள்ளது.
Similar News
News March 2, 2026
பெரம்பலூர்: வாக்கு சேகருப்பில் ஈடுபட்ட மகளிரணி

பெரம்பலூர், சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் நகரம் 1வது வார்டு பகுதியில், திமுக மகளிர் அணியை சேர்ந்தவர்கள் பொதுமக்களிடம் வீடு வீடாக சென்று, திமுகவின் ஐந்தாண்டு சாதனைகளை விளக்கி வாக்கு சேகரித்தனர். இதில், ஏராளமான மகளிர் கலந்துகொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
News March 2, 2026
CINEMA 360°: பழைய டெக்னிக்கை தூசி தட்டும் KHxRK

டிஜிட்டல் கேமராவை பயன்படுத்தாமல், ஃபிலிம் பார்மெட்டில் KHxRK படத்தை ஷூட் செய்யவுள்ளார்களாம் *அஸ்வத் மாரிமுத்து இயக்கும் சிம்பு 51-வது படத்தில் சந்தானம் நடிக்கவுள்ளாராம் *கத்தாரில் இருந்து கடைசி புறப்பட்ட கடைசி விமானத்தின் மூலம் USA-விற்கு தப்பித்து விட்டதாக சந்தோஷ் நாராயணன் பதிவிட்டுள்ளார் *இன்று மதியம் 12:59 மணிக்கு ‘டாக்ஸிக்’ படத்தின் முதல் பாடல் வெளியாகவுள்ளது
News March 2, 2026
பெட்ரோல், டீசல் விலை உயர்கிறதா? CHECK

ஈரான் – US போர் எதிரொலியால் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, ஒரு பீப்பாய் பிரெண்ட் கச்சா எண்ணெய் $80 வரை உயர்ந்துள்ளது. மேலும் போர் பதற்றம் தணியாத வரை, வரும் நாள்களில் $100 வரை உயரும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் இந்திய சந்தையில் வெகு நாள்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன.


