News April 4, 2025
ரஹானே – ஜெய்ஸ்வால் இடையே மோதலா?

மும்பை அணியின் கேப்டன் ரஹானேவுடன் ஏற்பட்ட மோதலின் காரணமாகவே, <<15968321>>ஜெய்ஸ்வால் <<>>அணி மாறுவதாக தகவல் வெளிவந்துள்ளது. வெளியாகும் செய்திகளின்படி, ரஞ்சி தொடரில் மும்பை அணிக்காக, ஜெய்ஸ்வால் சரியாக விளையாடாததை தொடர்ந்து, அவரை கேப்டன் ரஹானே மற்றும் அணியின் கோச் சால்வி விமர்சித்துள்ளனர். இதனால் அதிருப்தி அடைந்த ஜெய்ஸ்வால், ரஹானேவின் ‘கிட்’ பேக்கை எட்டி உதைத்தார் என்றும் கூறப்படுகிறது.
Similar News
News April 10, 2025
ஏப்.15 முதல் மீன்பிடிக்க தடை

தமிழ்நாட்டில் மீன்பிடி தடைக்காலம் ஏப்.15 முதல் அமலுக்கு வருகிறது. வ.விரிகுடா, பாக் நீர்ச்சந்தி, மன்னார் வளைகுடா இணையும் பகுதியில் வாழும் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்க காலம் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வருவதால், இக்காலகட்டத்தில் விசைப்படகுகள், இழுவைப் படகுகள் மூலம் இங்கு மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. இதனால் ராமநாதபுரத்தில் மட்டும் சுமார் 2000 படகுகள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லாது.
News April 10, 2025
சிறுமிகளை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்!

புதுச்சேரியில் 14 வயதுடைய இரு சிறுமிகளை 10-க்கும் மேற்பட்டோர் சேர்ந்து கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த அவலம் அரங்கேறியுள்ளது. கடந்த 2-ம் தேதி காணாமல் போன சிறுமிகளை ஒருநாள் முழுவதும் அடைத்து வைத்து இந்த கொடூரத்தை அரங்கேற்றியுள்ளனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட புஷ்பராஜ், மணி ஆகியோரை போக்சோவில் கைது செய்த போலீசார், சிறுமிகள் அளித்த தகவலின் அடிப்படையில் மற்றவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
News April 10, 2025
லவ் ஜிகாத் தெரியும்.. அதென்ன சர்பத் ஜிகாத்?

சர்பத் ஜிகாத் நாட்டில் பரவி வருவதாக பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார். சில கம்பெனிகளின் சர்பத்தை நீங்கள் வாங்கினால், அந்த பணம் மசூதிகளை கட்ட பயன்படுத்தப்படுவதாகவும், ஆனால் தனது பதஞ்சலி சர்பத்தை வாங்கினால், அந்த பணம் குருகுலம் கட்ட உதவும் என அவர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆங்கில மருத்துவ முறை குறித்து தவறான விளம்பரம் வெளியிட்டதாக அவர் கோர்ட்டில் மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது.