News March 19, 2025

செந்தில் பாலாஜி கைதாக வாய்ப்பு?

image

டாஸ்மாக்கில் ₹1000 கோடி ஊழல் புகார் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது, அமைச்சர் <<15809905>>செந்தில் பாலாஜி<<>>க்கு பெரும் நெருக்கடியாக மாறியிருக்கிறது. மதுபான ஊழல் முறைகேடு வழக்கில், கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, கே.சி.ஆரின் மகள் கவிதா உள்ளிட்டோர் கைதாகினர். அவர்களை போலவே, டாஸ்மாக் ஊழல் புகாரில் செந்தில் பாலாஜி கைது செய்யப்படலாம் என்பதால் அவர் டெல்லி சென்றதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Similar News

News March 19, 2025

RRB தேர்வு ரத்து… தலைவர்கள் கண்டனம்..

image

கடைசி நேரத்தில் <<15812108>>RRB <<>>தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தேர்வர்களை அலைக்கழித்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். தேர்வர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

News March 19, 2025

ஏப்.1 முதல் UPI கணக்குகள் முடக்கம்!

image

ஏப்ரல் 1 முதல் சில அதிரடி நடவடிக்கைகளை வங்கிகள் மேற்கொள்ளவுள்ளன. அந்த வகையில், GPAY, PHONEPE, PAYTM போன்ற UPI ஆப்களுடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்கள் நீண்டகாலமாக செயல்படாமல் இருந்தால், அந்த UPI கணக்குகள் முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, UPI உடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்கள் பயன்பாட்டில் உள்ளதா என்பதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News March 19, 2025

நாய்க்கடியால் உயிரிழந்தால் இழப்பீடு: அரசு அறிவிப்பு

image

நாய்க்கடியால் உயிரிழப்பு ஏற்பட்டால், முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து இழப்பீடு வழங்க CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, நாய்க்கடியால் மாடு இறந்தால் ₹37,500, ஆடு இறந்தால் ₹6,000, கோழி இறந்தால் ₹200 இழப்பீடு வழங்கப்படும் என்றார். இதுவரை தெருநாய் கடித்து உயிரிழந்த 1,149 பிராணிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

error: Content is protected !!