News October 15, 2025
தமிழ்நாட்டில் இந்தி திணிப்புக்கு தடையா?

தமிழ்நாட்டில் கட்டாய இந்தி திணிப்பை தடுக்க மாநில அரசு சட்ட மசோதா தாக்கல் செய்யப் போவதாக ஆங்கில ஊடகத்தில் தகவல் வெளியாகியுள்ளது. நேற்றிரவு நடந்த அவசரக் கூட்டத்தில் இதுபற்றி CM ஸ்டாலின் விவாதித்ததாகவும் கூறப்படுகிறது. இந்தி விளம்பரப் பலகைகள், பதாகைகள், திரைப்படங்கள், பாடல்கள் போன்றவற்றுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க இந்த மசோதா வருகிறதாம். இதுபற்றி மேலும் தகவல் எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News October 15, 2025
பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்: IMF கணிப்பு

ஐநா சபையின் நிதி பிரிவு அமைப்பாக செயல்பட்டு வரும் IMF, இந்தியாவின் நடப்பாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 6.6%-ஆக இருக்கும் என்று கணித்துள்ளது. இது ஏற்கெனவே கணிக்கப்பட்ட 6.4%-ல் இருந்து 0.2% அதிகமாகும். இந்தியா மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு உள்பட பல்வேறு சவால்கள் உள்ளபோதும், இந்திய பொருளாதாரம் வலிமையாக உள்ளதாக IMF தெரிவித்துள்ளது.
News October 15, 2025
கரூரில் பாதுகாப்பு குறைபாடா? CM பேரவையில் விளக்கம்

கரூர் துயரத்துக்கு காவல்துறையின் பாதுகாப்பு குறைபாடே காரணம் என சட்டப்பேரவையில் EPS குற்றம்சாட்டினர். இதற்கு பதில் அளித்து பேசிய, ஸ்டாலின் விஜய்யே காவல்துறைக்கு சல்யூட் என கூறிவிட்டுதான் தனது பேச்சை தொடங்கியதாக கூறியுள்ளார். விஜய்யே காவல்துறையை பாராட்டி இருக்கும்போது, பாதுகாப்பு குறைபாடு இருந்தது என்று EPS சொல்லவது எப்படி சரியாக இருக்கும் என CM கேள்வி எழுப்பியுள்ளார்.
News October 15, 2025
தொடர்ந்து சரியும் IPL-ன் மவுசு!

பணம் கொழிக்கும் கிரிக்கெட் தொடரான IPL-ன் சந்தை மதிப்பு சரிந்து வருகிறது. 2023-ல் ₹93,500 கோடியாக இருந்த IPL-ன் மதிப்பு, 2024 சீசனில் ₹82,700-ஆகவும், 2025-ல் மேலும் ₹6,600 கோடி குறைந்து, தற்போது ₹76,100 கோடியாகவும் உள்ளது. ஆன்லைன் மணி கேம்கள் தடை செய்யப்பட்டது, ஒரே நிறுவனத்துக்கு மீடியா உரிமை அளிக்கப்பட்டது இந்த சரிவுக்கு முக்கிய காரணங்களாகும். உங்களுக்கும் IPL ஆர்வம் குறைந்துவிட்டதா?