News April 28, 2025

இரட்டை இலை சின்னம் முடக்கம்?

image

இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று OPS தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இந்த வழக்கில் EPS & OPS நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், டெல்லியில் விசாரணை நடைபெறுகிறது. இதில், அதிமுக சார்பாக C.V.சண்முகம் ஆஜராகியிருக்கிறார். மனுதாரர்கள் தரப்பில் O.P.ரவீந்திரநாத், K.C.பழனிசாமி ஆஜராகியிருக்கின்றனர்.

Similar News

News December 3, 2025

எனக்கு இதுதான் மிகப்பெரிய விருது: CM ஸ்டாலின்

image

மாற்றுத்திறனாளிகள் ஆரத்தழுவியது தனக்கு கிடைத்த மிகப்பெரிய விருது என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் பேசிய அவர், இந்த ஆட்சியில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக 60 அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும், உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பிரதிநிதியாக மேலும் 9,000 மாற்றுத்திறனாளிகள் நியமிக்கப்படுவார்கள் எனவும் உறுதியளித்துள்ளார்.

News December 3, 2025

BREAKING: இந்தியா பேட்டிங்

image

ராய்ப்பூரில் நடக்கும் இந்தியாவுக்கு எதிரான 2-வது ODI-யில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இந்தியா பிளேயிங் XI: ரோஹித், ஜெய்ஸ்வால், கோலி, KL ராகுல், ருதுராஜ், ஜடேஜா, சுந்தர், குல்தீப், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா. முதல் போட்டியை போலவே 2-வது போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றுமா இந்தியா?

News December 3, 2025

வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ₹67,004 கோடி!

image

கடந்த 10 ஆண்டுகளாக எந்த பரிவர்த்தனையும் இல்லாத வங்கி கணக்குகளில் சுமார் ₹67,004 கோடி கேட்பாரற்ற முறையில் இருப்பதாக மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார். இதில் அதிகபட்சமாக SBI வங்கியில் மட்டும் ₹19,330 கோடி உள்ளதாம். மேலும், ‘உங்கள் பணம், உங்கள் உரிமை’ என்ற திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் ₹10,297 கோடி உரிமையாளர்களுக்கு திரும்ப அளிக்கப்பட்டுள்ளதாம்.

error: Content is protected !!