News April 28, 2025

இரட்டை இலை சின்னம் முடக்கம்?

image

இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று OPS தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இந்த வழக்கில் EPS & OPS நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், டெல்லியில் விசாரணை நடைபெறுகிறது. இதில், அதிமுக சார்பாக C.V.சண்முகம் ஆஜராகியிருக்கிறார். மனுதாரர்கள் தரப்பில் O.P.ரவீந்திரநாத், K.C.பழனிசாமி ஆஜராகியிருக்கின்றனர்.

Similar News

News December 9, 2025

மயிலாடுதுறை: மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

image

மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் எதிரில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள தொழிலாளர் விரோத 4 சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒன்றிணைந்து, மத்திய அரசை கண்டித்தும் எதிரான கோஷங்கள் எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News December 9, 2025

BREAKING: விஜய்க்கு சீமான் ஆதரவு

image

விஜய்யை அண்மைக் காலமாக கடுமையாக விமர்சித்துவரும் சீமான், தற்போது விஜய்யை தம்பி எனக் குறிப்பிட்டு பேசியுள்ளார். புதுச்சேரிக்கு மாநில உரிமை கோரிய விஜய்யின் கருத்துக்கு ஆதரவாக சீமான் பேசியுள்ளார். மாஹே, ஏனாம் வேண்டாம், மாநில உரிமை வேண்டும் என முதலில் நான்தான் புதுச்சேரிக்காக பேசினேன் என்றும், எனது கோரிக்கை வலுபெறகிற மாதிரி தம்பி விஜய்யும் பேசியிருப்பது மகிழ்ச்சி எனவும் சீமான் குறிப்பிட்டுள்ளார்.

News December 9, 2025

புதுச்சேரி முதல்வருக்கு விஜய் பாராட்டு

image

புதுச்சேரியில் இன்று பொதுகூட்டம் நடத்திய விஜய், அதற்கு பாதுகாப்பு அளித்த மாநில அரசையும், CM ரங்கசாமியையும் மீண்டும் பாராட்டியுள்ளார். மேலும் எழுச்சி மிக்க நம் இளைஞர் படையினர், கட்டுக்கோப்பும் பொறுப்பும் மிக்கவர்கள் என்பதை அவதூறாளர்களுக்குப் புரிய வைத்துள்ளார்கள் எனவும் X பதிவில் குறிப்பிட்டுள்ளார். நம் அரசியல் பயணத்தை முடக்க திமுக போடும் திட்டம் அணுவளவும் நடக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!