News October 7, 2025

குறைந்தபட்ச பென்சன் தொகை உயர்கிறதா?

image

EPS திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச பென்சன் தொகையை ₹1,000-லிருந்து ₹2,000 ஆக உயர்த்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்.10, 11-ல் நடைபெறவுள்ள EPFO மத்திய அறங்காவலர் குழு ஆலோசனை கூட்டத்தில் இதுகுறித்து முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 11 ஆண்டுகளுக்கு பிறகு பென்சன் தொகை உயரவுள்ளது. 2014-ல் ₹1,000 ஆக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அதன் பிறகு ₹1 கூட உயர்த்தப்படவில்லை.

Similar News

News October 7, 2025

நோபல் பரிசு வென்ற இந்தியர்கள்

image

முன்னோடியான கண்டுபிடிப்புகள், சமூகத்தில் முக்கியமான தாக்கம், அல்லது மனிதநேயம் சார்ந்த முயற்சிகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு நோபல் வழங்கப்படுகிறது. நோபல் பரிசு வென்ற இந்தியாவை சேர்ந்த, இந்தியாவை பூர்விகமாக கொண்டவர்கள் யார் என்று தெரியுமா? மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இந்த வருடம் நோபல் பரிசு நமக்கு கிடைக்குமா? கமெண்ட்ல சொல்லுங்க?

News October 7, 2025

BREAKING: தமிழகத்திற்கு ரெட் அலர்ட்

image

தமிழகத்தில் பல இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் காலையில் தெரிவித்திருந்தார். இந்தாண்டில் 8 பேர் டெங்குவால் உயிரிழந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், காய்ச்சல் பரவல் அதிகமுள்ள சென்னை, திருவள்ளூர், கோவை ஆகிய மாவட்டங்களுக்கு பொது சுகாதாரத்துறை ரெட் அலர்ட் கொடுத்துள்ளது. காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனே ஹாஸ்பிடல் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE IT.

News October 7, 2025

டெல்லி CM-ன் பேச்சு வெட்கக்கேடானது: கனிமொழி

image

அறிவு சுடரை ஏற்றி, மதத்தை பரப்பி, சமூக நலனுக்காக பிராமண சமூகம் பாடுபடுகிறது என்று டெல்லி CM ரேகா குப்தா கூறியிருந்தார். இந்நிலையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட CM சாதியை தூக்கி பிடிப்பது வெட்கக்கேடானது என கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார். இந்த சாதிய அடக்குமுறையை ஒழிக்கவே பெரியார் வாழ்நாள் முழுவதும் போராடியதாக தெரிவித்த அவர், மக்களிடையே பிரிவை உருவாக்குவது பாஜக தான் என சாடினார்.

error: Content is protected !!