News January 18, 2025
டாக்டர் வன்கொடுமை வழக்கில் IPS அதிகாரிக்கு தொடர்பா?

பெண் டாக்டர் வன்கொடுமை, கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள சஞ்சய் ராய், IPS ஒருவருக்கு தொடர்பிருப்பதாக நீதிபதியிடம் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சீல்டா கோர்ட்டில் தீர்ப்புக்கு முன்னர் பேசிய அவர், என்னை இந்த வழக்கில் பொய்யாக சிக்க வைத்துள்ளனர் எனக் கூறியுள்ளார். போலீஸில் தன்னார்வலராக இருந்ததால் அவர் சொல்வதில் உண்மை இருக்கலாம் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
Similar News
News August 25, 2025
திமுக ஆட்சியில் விவசாயிகள் பாதிப்பு: இபிஎஸ்

திமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு எவ்வித நன்மையும் இல்லை என இபிஎஸ் விமர்சித்துள்ளார். திருச்சியில் பரப்புரை மேற்கொண்ட அவர், அதிமுக ஆட்சி காலத்தில் 5 ஆண்டுகளில் 2 முறை விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் விவசாயிகள் நன்மை அடைந்ததாகக் குறிப்பிட்ட அவர், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் காவிரி, கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைகள் கட்டப்படும் என உறுதியளித்தார்.
News August 25, 2025
ராசி பலன்கள் (25.08.2025)

➤ மேஷம் – சோர்வு ➤ ரிஷபம் – செலவு ➤ மிதுனம் – சாதனை ➤ கடகம் – அமைதி ➤ சிம்மம் – நட்பு ➤ கன்னி – மகிழ்ச்சி ➤ துலாம் – வரவு ➤ விருச்சிகம் – தடங்கல் ➤ தனுசு – நலம் ➤ மகரம் – களிப்பு ➤ கும்பம் – சுகம் ➤ மீனம் – மேன்மை.
News August 24, 2025
குட்டி தளபதி பட்டம்… SK மறுப்பு

தன்னை குட்டி தளபதி என்று அழைப்பதை சிவகார்த்திகேயன் மறுத்துள்ளார். ‘மதராஸி’ இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர் ‘கோட்’ படத்தின் துப்பாக்கி பகிரும் காட்சியில் விஜய் சார் எனக்கு ஊக்கமளிப்பதாக உணர்ந்தேன். படம் வெளியான பிறகு பலரும் என்னை குட்டி தளபதி, திடீர் தளபதி என்றெல்லாம் அழைத்தனர். இதை நான் ஏற்கவில்லை. அண்ணன் அண்ணன் தான், தம்பி என்றுமே தம்பி தான் என சிவகார்த்திகேயன் பேச அரங்கம் அதிர்ந்தது.