News April 25, 2025
PAK பிடியில் உள்ள இந்திய வீரர்தான் துருப்புச்சீட்டா?

பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில் உள்ள இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் பிகே சிங்கை, அந்நாடு ஒப்படைக்க மறுத்து வருகிறது. இன்று நடந்த கொடி கூட்டத்திற்கு சிங் வரவில்லை. தவறுதலாக எல்லை தாண்டி வந்ததாக அவர் நேற்று கைது செய்யப்பட்டார். அவரை தங்களது பிரச்சாரத்திற்கு பாகிஸ்தான் அரசு பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், அவரை வைத்து இந்தியாவிடம் டீல் பேசலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News April 26, 2025
அதிநவீன ஆயுதம்.. வரலாறு படைத்த இந்தியா!

பாக். உடனான போர் பதற்ற சூழலில், ஹைப்பர் சோனிக் ஏவுகணை சோதனையில் இந்தியா வரலாறு படைத்துள்ளது. Scramjet Engine-ஐ DRDO வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. ஒலியைவிட 5 மடங்கு வேகம், அதாவது மணிக்கு 6,100 கி.மீ.க்கும் அதிகமாக பயணித்து, இலக்கை துல்லியமாக தாக்கும் வல்லமை இந்த இஞ்சினுக்கு உண்டு. இதன்மூலம், அடுத்த தலைமுறை ஏவுகணை உருவாக்கத்தில் இந்தியா முன்னேறியுள்ளது.
News April 26, 2025
கோலி அவசரப்பட்டுவிட்டார்: ரெய்னா

சர்வதேச டி20-ல் இருந்து கோலி வெகு சீக்கிரமாகவே ஓய்வு அறிவித்துவிட்டதாக ரெய்னா தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனிலும், கடந்த CT தொடரிலும் அவர் விளையாடிய விதத்தை பார்க்கும் போது, அவரால் 2026 வரையிலும் டி20-ல் விளையாடியிருக்க முடியும் எனவும், அவரது ஃபிட்னஸ் இன்னும் Peak-ல் தான் இருப்பதாகவும் ரெய்னா கூறியுள்ளார். அடுத்த ஆண்டு டி20 உலகக்கோப்பை நடக்க உள்ள நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
News April 26, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: இன்னாசெய்யாமை ▶குறள் எண்: 318 ▶குறள்: தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ மன்னுயிர்க்கு இன்னா செயல். ▶பொருள்: பிறர் தரும் துன்பத்தால் தனக்கேற்படும் துன்பத்தை உணர்ந்தவன் அந்தத் துன்பத்தைப் பிற உயிர்களுக்குத் தரவும் கூடாதல்லவா?.