News September 27, 2025
ஈபிள் டவர் விற்பனைக்கா? இது பெரிய உருட்டா இருக்கே

1925ம் ஆண்டு விக்டர் லுஸ்டிக் என்பவர் வரலாற்றில் மிகப்பெரிய மோசடிகளில் ஒன்றைச் செய்துள்ளார். ஈபிள் டவரை ஒருமுறை அல்ல இரண்டுமுறை விற்பனை செய்துள்ளார். தன்னை ஒரு பிரெஞ்சு அரசாங்க அதிகாரியாக காட்டிக்கொண்டு, பராமரிப்பு செலவு காரணமாக அரசாங்கம் ஈபிள் டவரை விற்பதாக, செல்வந்தர்களை ஏமாற்றி பணம் பறித்துள்ளார். இவர் பேராசையை பயன்படுத்தி துணிச்சலுடன் புத்திசாலித்தமான பல மோசடிகள் செய்துள்ளார்.
Similar News
News September 27, 2025
இரவில் நிம்மதியாக தூங்க உதவும் 10-3-2-1 விதி!

இரவில் நிம்மதியாக தூங்க 10- 3- 2- 1 விதியை ட்ரை பண்ணுங்க ➤தூங்குவதற்கு 10 மணி நேரத்துக்கு முன் காபி, டீ போன்ற காஃபின் பானங்கள் குடிப்பதை நிறுத்துங்கள் ➤தூங்குவதற்கு 3 மணி நேரத்துக்கு முன் உணவு சாப்பிட்டு முடியுங்கள் ➤மன நிம்மதியாக தூங்க, வேலைகள் அனைத்தையும் தூங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாகவே முடியுங்கள். ➤தூங்குவதற்கு 1 மணி நேரத்திற்கு முன், டிஜிட்டல் சாதனங்கள் பயன்பாட்டை தவிருங்கள். SHARE.
News September 27, 2025
1 – 7 பள்ளி மாணவர்களுக்கு.. அரசு புதிய அறிவிப்பு

காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் நாள் அன்று 1 முதல் 7-ம் வகுப்பு மாணவர்களுக்கு 2-ம் பருவ புத்தகங்கள் வழங்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. அனைத்து மாவட்ட CEO-க்கள், DEO-க்கள் இந்த பணிகளை மேற்பார்வை செய்ய பள்ளி கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பல இடங்களில் விடுமுறை நாள்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில், அதனை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News September 27, 2025
விஜய் குறிப்பிட்ட முதல்வர் ப.சுப்பராயன்

இன்று தனது பிரசாரத்தில் விஜய், இடஒதுக்கீடு ஆணையை பிறப்பித்த CM என்று நாமக்கல்லை சேர்ந்த ப.சுப்பராயனை குறிப்பிட்டார். 1926-ல் மெட்ராஸ் மாகாண CM-மாக பதவி வகித்தவர் ப.சுப்பராயன். விஜய் கூறிய அரசாணையின்படி (Communal G. O. 1071), அரசு வேலை & கல்வி வாய்ப்புகளில் பிராமணரல்லாதோருக்கு 5/12 பங்கு, பிராமணர், ஆங்கிலோ இந்தியர், முஸ்லீம்களுக்கு தலா 2/12, தாழ்த்தப்பட்டோருக்கு 1/12 பங்கும் ஒதுக்கப்பட்டது.