News April 11, 2025
டாக்டர் தவறான சிகிச்சையா? சட்டம் என்ன சொல்கிறது?

தேசிய மருத்துவ ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட டாக்டர்கள், கவனக்குறைவால் நோயாளிகளுக்கு தவறான சிகிச்சை அளித்தாலும் அது சட்டப்படி குற்றமே. அவர்களுக்கு என்ன தண்டனை அளிக்கப்படும் என்பது குறித்து பிஎன்எஸ் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த டாக்டர்களுக்கு அபராதத்துடன், அதிகபட்சம் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று அந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. SHARE IT.
Similar News
News November 23, 2025
புதுச்சேரி: மாடியில் இருந்து குதித்து தற்கொலை

புதுவை வெங்கட்டா நகரை சேர்ந்த ஹரிஷ்குமார் கெமிக்கல் என்ஜினீயர், இவரது மனைவி கல்பனா, இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். ஹரிஷ்குமார் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததார். ஒரு கட்டத்தில் நோய் வேதனையில் விரக்தியடைந்த ஹரிஷ்குமார் மன அழுத்தம் காரணமாக வீட்டு மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 23, 2025
காலையில் மாரடைப்பு.. காரணம் இதுதான்!

காலையில் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம், ஏனெனில் உடலில் ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு அதிகரிப்பது காரணமாகிறது. இது உடலில் கார்டிசோல் மற்றும் அட்ரினலின் போன்ற மன அழுத்த ஹார்மோன்கள் வெளியாவதால் ஏற்படுகிறது. இரவில் ஏற்படும் நீரிழப்பும் மாரடைப்பை தூண்டுவதற்கு ஒரு காரணமாக அமைகின்றன. முறையான தூக்கம், உடற்பயிற்சியால் இந்த ஆபத்தை தடுக்க முடியும் என டாக்டர்கள் கூறுகின்றனர். உஷாரா இருங்க..!
News November 23, 2025
ரஜினியுடன் 3-வது முறை இணைகிறாரா?

ரஜினி 173 படத்தின் இயக்குநர் இவரா அவரா என ஆயிரக்கணக்கான கதைகள் இணையத்தில் உலா வருகின்றன. ஆனால் ரஜினி இன்னும் எந்த இயக்குநரையும் இறுதி செய்யவில்லை. இதனிடையே நேற்று விமான நிலையத்தில் பா.ரஞ்சித்தை எதிர்ச்சையாக ரஜினி சந்தித்து பேசினார். உடனே பா.ரஞ்சித்துடன் 3-வது முறையாக சூப்பர் ஸ்டார் இணையப்போகிறார் என்ற கதைகள் வர தொடங்கியது. ஏற்கனவே இருவரும் சேர்ந்து கபாலி, கலா ஆகிய 2 படங்களில் பணியாற்றினர்.


