News January 2, 2025
மரண தண்டனை அவசியம்தானா?

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வே, தனது நாட்டில் இனி மரண தண்டனைகள் விதிக்கப்படாது என்று அறிவித்துள்ளது. ஆனால், வளர்ந்த நாடான இந்தியாவில் இன்னும் மரண தண்டனைகள் தொடர்வது வேதனையளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மனிதாபிமானமற்ற இந்த தண்டனையை அரசாங்கமே வழங்குவது கொடுமையான விஷயம் எனவும் குற்றவாளிகளை நல்வழிப்படுத்துவதே சரியான நடைமுறை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
Similar News
News October 29, 2025
தோல்வி பயத்தில் CM ஸ்டாலின்: நயினார்

தேர்தலில் தோற்று விடுவோம் என்ற பயத்தில் SIR குறித்து மடைமாற்றும் வேலையில CM ஸ்டாலின் ஈடுபட்டுள்ளதாக நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். முதலில் CAA, அடுத்து பண மதிப்பிழப்பு நடவடிக்கை, தற்போது SIR என முன்னுக்கு பின்னாக மாறிமாறி பேசுவதாகவும் சாடியுள்ளார். SIR-ஐ எதிர்த்து அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்தை நாளை நடத்தப்போவதாக CM அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
News October 29, 2025
செமி ஃபைனலில் ஆஸி., மகளிர் அணி கேப்டன்?

ஆஸி., மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் அலீஸா ஹீலி காயம் காரணமாக, இங்கி., & தெ.ஆப்பிரிக்கா உடனான லீக் போட்டியில் விளையாடவில்லை. ஓய்வில் இருந்த அவர், உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இதனால் நாளை (அக்.30) நடைபெறவுள்ள இந்தியா உடனான அரையிறுதி போட்டியில் அலீஸா பங்கேற்பார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. லீக்கில் ஆஸி., உடன் தோல்வியுற்ற இந்தியா, செமி ஃபைனலில் வெற்றியை நோக்கி போராடும்.
News October 29, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துதெளிதல் ▶குறள் எண்: 503 ▶குறள்: அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு. ▶பொருள்: அரிய நூல்கள் பல கற்றவர் என்றும், எக்குறையும் அற்றவர் என்றும் புகழப்படுவோரைக்கூட ஆழமாக ஆராய்ந்து பார்க்கும்போது அவரிடம் அறியாமை என்பது அறவே இல்லை எனக் கணித்துவிட இயலாது.


