News August 25, 2024
அவ்வளவு பயமோ? சீமானுக்கு எஸ்பி பதிலடி

எஸ்பி வருண்குமார் – சீமான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. “வீரம் இருந்தால் வேலையை ராஜினாமா செய்துவிட்டு என்னுடன் மோத முடியுமா?” என சீமான் சவால் விடுத்தார். இதற்கு வருண்குமார், பிச்சை எடுப்பது, பெண்களை ஆபாசமாக பேசுவது, நில அபகரிப்பு, ரவுடித்தனம் செய்வதை சிலர் நிறுத்தினால், நான் காக்கிச் சட்டையை கழற்றுவது பற்றி யோசிக்கிறேன். நான் காக்கிச் சட்டையில் இருப்பது அவ்வளவு பயமோ? என பதிலடி கொடுத்தார்.
Similar News
News December 3, 2025
உள்ளூர் போட்டிகளில் களமிறங்கும் கோலி

டிச.24-ம் தேதி தொடங்கும் விஜய் ஹசாரே (VHT) தொடரில் டெல்லி அணிக்காக கோலி விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வடிவிலான கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடும் கோலி, 2027 WC வரை தனது ஃபார்மை மெயின்டெயின் செய்வதில் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளார். விஜய் ஹசாரே மட்டுமின்றி BCCI நடத்தும் உள்ளூர் போட்டிகளில் விளையாட கோலி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடைசியாக 2010-ல் கோலி VHT-ல் ஆடியிருந்தார்.
News December 3, 2025
இந்தியாவில் 811 பேருக்கு ஒரு டாக்டர் மட்டுமே

இந்தியாவில் 811 பேருக்கு ஒரு டாக்டர் மட்டுமே இருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதை சமாளிக்க மருத்துவக் கல்வி இடங்களை அதிகரிப்பது, சுகாதார திட்டங்களை செயல்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 2014-ல் 387 ஆக இருந்த மருத்துவ கல்லூரிகள் எண்ணிக்கை 818 ஆகவும், UG இடங்கள் 1,28,875 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
News December 3, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: பொச்சாவாமை
▶குறள் எண்: 538
▶குறள்:
புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.
▶பொருள்: உயர்ந்தோர் புகழ்ந்து சொன்னவற்றை விரும்பிக் கடைப்பிடிக்க வேண்டும். கடைப்பிடிக்க மறந்தவர்க்கு ஏழு பிறப்பிலும் நன்மை இல்லை.


