News March 31, 2024
ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு திடீர் மிரட்டல்

ஐஎஸ் அமைப்பு திடீர் மிரட்டல் விடுத்திருப்பதால், நாடு முழுவதும் உளவுத்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த 2014இல் ரமலானின்போது ஐஎஸ் உருவாக்கப்பட்டது. இந்தாண்டுடன் 10 ஆண்டு ஆவதையொட்டி, அதன் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள ஆடியோவில், “உலகெங்கிலும் ஐஎஸ் அமைப்பினர் தனிநபர் தீவிரவாத தாக்குதலை நடத்துங்கள்” என வலியுறுத்தியுள்ளார். இதனால் நாடு முழுவதும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 14, 2025
நீட் கவுன்சலிங் பட்டியல் வெளியானது

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் (UG) முதல்கட்ட கவுன்சலிங் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்ச்சிபெற்ற மாணவர்கள், அந்தந்த கல்லூரிகளை வரும் 14-ம் தேதி முதல் 18-ம் தேதிக்குள் அணுக மருத்துவ கவுன்சலிங் கமிட்டி (MCC) அறிவுறுத்தியுள்ளது. ஒதுக்கீடு கடிதங்களை MCC இணையதளத்தில் டவுன்லோடு செய்துகொள்ளலாம். சீட் ஒதுக்கீடு பட்டியலை காண <
News August 14, 2025
தேர்தல் ஆணையத்தின் வரலாறும், செயல்பாடுகளும்

பிஹார் சிறப்பு வாக்காளர் திருத்தம், அரசியல் ரீதியாக நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையம் எப்போது அமைக்கப்பட்டது? அதன் அதிகாரிகளாக யார் இருப்பர்? அவர்களின் பொறுப்புகள் என்னென்ன? வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்பவர்கள் யார் என்பது குறித்து மேலே உள்ள படங்களை Swipe செய்து அறிந்துகொள்ளுங்கள். Share செய்யுங்கள்.
News August 14, 2025
நைட் ஷிப்ட் வேலையா? இதை ஃபாலோ பண்ணுங்க!

*நைட் ஷிப்ட் பணி முடிந்ததும் ஒரு மணிநேரம் ரிலாக்ஸ் செய்யுங்கள் (இசை கேட்கலாம், குளிக்கலாம்) *ஷிப்ட் எதுவானாலும், சாப்பிடும் நேரத்தில் மாற்றம் வேண்டாம் *புரதம் நிறைந்த காய்கறிகளை சாப்பிடவும் *உறங்கும் இடம் அமைதியாகவும் இருட்டாகவும் இருக்கட்டும் *உறங்கும் முன் காபி, டீ தவிர்க்கவும், மதுவை கட்டாயம் தவிர்க்கவும் *வெறும் வயிற்றில் உறங்க வேண்டாம் *தூங்கி எழுந்தபின் உடற்பயிற்சி செய்யலாம்.