News March 31, 2024

ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு திடீர் மிரட்டல்

image

ஐஎஸ் அமைப்பு திடீர் மிரட்டல் விடுத்திருப்பதால், நாடு முழுவதும் உளவுத்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த 2014இல் ரமலானின்போது ஐஎஸ் உருவாக்கப்பட்டது. இந்தாண்டுடன் 10 ஆண்டு ஆவதையொட்டி, அதன் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள ஆடியோவில், “உலகெங்கிலும் ஐஎஸ் அமைப்பினர் தனிநபர் தீவிரவாத தாக்குதலை நடத்துங்கள்” என வலியுறுத்தியுள்ளார். இதனால் நாடு முழுவதும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 19, 2025

குருப்பெயர்ச்சி: 6 ராசியினர் மிகுந்த கவனம் தேவை

image

குரு பகவான் விரைவில் ரிஷப ராசியில் உள்ள மிருகசீரிஷம் நட்சத்திரம் 2ம் பாதத்திலிருந்து, மிதுன ராசியில் உள்ள மிருகசீரிஷம் 3ம் பாதத்திற்கு பெயர்ச்சியாக உள்ளார். ஆதலால் மேஷம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ராசியினர் மிகுந்த கவனமாக இருக்க ஜோதிட நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சிலர் முதுகில் குத்தவும், பணப் பற்றாக்குறை ஏற்படவும் வாய்ப்பிருப்பதாக ஜோதிடர்கள் குறிப்பிட்டுள்ளனர். SHARE IT.

News April 19, 2025

கைதான கொஞ்ச நேரத்திலேயே நடிகருக்கு ஜாமின்

image

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே, நடிகர் <<16150071>>ஷைன் டாம் சாக்கோ<<>>விற்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. மெடிக்கல் டெஸ்ட் உள்ளிட்ட அடுத்தகட்ட நடைமுறைகள் விரைவில் தொடங்கும் என கொச்சி போலீசார் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் அவர் கைதாவது இது 2-வது முறையாகும். கடந்த 2015-ம் ஆண்டும் இதேபோன்ற ஒரு வழக்கில் அவர் 2 மாதம் சிறையில் இருந்தார்.

News April 19, 2025

இளைஞரை நிர்வாணப்படுத்தி வண்டியில் கட்டி சித்ரவதை

image

உ.பி.யில் இளைஞரை நிர்வாணப்படுத்தி மாட்டு வண்டியில் கட்டி இழுத்து சென்று கிராம மக்கள் சித்ரவதை செய்துள்ளனர். விஷேஷ்வர்கஞ்சில் 22 வயது இளைஞர் மீது பாலியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவரை பிடித்து சென்ற மக்கள், ஆடையை களைந்து நிர்வாணப்படுத்தி வண்டியில் கட்டி இழுத்து சென்றனர். அப்போது அவரை சிலர் கடுமையாகத் தாக்கினர். அவரின் சகோதரி அளித்த புகாரின்பேரில் போலீஸ் விசாரிக்கிறது.

error: Content is protected !!