News April 1, 2025

மாற்றப்படுகிறாரா செல்வ பெருந்தகை?

image

ஆம்ஸ்ட்ராங் கொலை உட்பட அடுத்தடுத்து காங்., மாநில தலைவர் செல்வபெருந்தகை சர்ச்சையில் சிக்கினார். இதற்கிடையில், அவருக்கு எதிராக தேசியத் தலைமையிடம், 25 மாவட்ட தலைவர்கள் புகார் கொடுத்துள்ளனர். இதனால், தலைமை அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை அவர் தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட்டால், அந்த இடத்தைப் பிடிக்க ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் காய் நகர்த்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News November 15, 2025

சொந்த கட்சி மீதே காங்கிரஸ் நிர்வாகிகள் அதிருப்தி: PM

image

தேர்தல் தோல்விக்கான காரணம் தெரியாமல் ECI மீது காங்கிரஸ் குற்றம்சாட்டி வருவதாக PM மோடி விமர்சித்துள்ளார். இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்ற தலைவர்களிடம் பணியாற்றிவர்கள் இன்று மிகுந்த மனவருத்தத்தில் உள்ளதாக சூரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பிஹார் சட்டமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் போலி முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

News November 15, 2025

ஜப்பானில் இந்து கடவுள்கள் PHOTOS

image

6-9 ஆம் நூற்றாண்டுகளில் சீனா மற்றும் கொரியா வழியாக பல இந்து கடவுள்கள் ஜப்பானுக்குக் சென்றுள்ளன. அவர்களின் உருவப்படங்கள் பெரும்பாலும் இந்து மற்றும் பௌத்த கூறுகளைக் கலந்து, ஜப்பானிய கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு உருவகப்படுத்தப்பட்டுள்ளன. சில முக்கிய இந்து கடவுள்கள், ஜப்பானில் என்ன பெயரில், எப்படி இருக்கின்றனர் என்று தெரியுமா? மேலே உள்ள போட்டோக்களை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE

News November 15, 2025

தூய்மை பணியாளர்களுக்கு திமுக துரோகம்: அன்புமணி

image

தூய்மை பணியாளர்களுக்கு இழைத்த துரோகத்தை மறைக்கவே, அவர்களுக்கு உணவு வழங்கும் நாடகத்தை திமுக அரசு அரங்கேற்றியுள்ளதாக அன்புமணி சாடியுள்ளார். 107 நாள்களாக போராடும் தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதற்கு, திமுக அரசு இதுவரை முன்வரவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், அவர்களது பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்குமாறும் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!