News April 1, 2025

மாற்றப்படுகிறாரா செல்வ பெருந்தகை?

image

ஆம்ஸ்ட்ராங் கொலை உட்பட அடுத்தடுத்து காங்., மாநில தலைவர் செல்வபெருந்தகை சர்ச்சையில் சிக்கினார். இதற்கிடையில், அவருக்கு எதிராக தேசியத் தலைமையிடம், 25 மாவட்ட தலைவர்கள் புகார் கொடுத்துள்ளனர். இதனால், தலைமை அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை அவர் தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட்டால், அந்த இடத்தைப் பிடிக்க ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் காய் நகர்த்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News November 26, 2025

₹6 செலுத்தினால் ₹1 லட்சம் கிடைக்கும் திட்டம்

image

போஸ்ட் ஆபீஸ் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ திட்டத்தில், 1 நாளைக்கு ₹6 பிரீமியமாக செலுத்தினால் 5 வருடங்கள் கழித்து ₹1 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும். இது குழந்தைகளுக்கான ஆயுள் காப்பீட்டுத் திட்டம் என்பதால் அவர்கள் பெயரில்தான் கணக்கு தொடங்கமுடியும். இதற்கு, குழந்தைகள் 5-20 வயதிற்குள்ளேயும், பெற்றோர்கள் 45 வயதிற்கு மிகாமலும் இருக்கணும். இந்த திட்டத்தை தொடங்க அருகில் உள்ள போஸ்ட் ஆபீசுக்கு போங்க. SHARE.

News November 26, 2025

BREAKING: ₹1,000 மகளிர் உரிமை தொகை.. வந்தது HAPPY NEWS

image

விடுபட்டவர்களுக்கு டிச.15 முதல் மகளிர் உரிமை தொகை ₹1000 வழங்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விடுபட்டவர்களும் பயன்பெறும் வகையில் அரசு சில தளர்வுகள் வழங்கியது. இதை பயன்படுத்தி, ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் மூலம் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பத் தலைவிகள் விண்ணப்பித்து காத்திருந்த நிலையில், இந்த மகிழ்ச்சியான அறிவிப்பை ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

News November 26, 2025

EPS-க்கும் கருணாநிதியின் நிலைமைதானா?

image

1972-ல் MGR-ஐ திமுகவிலிருந்து நீக்கியபோது, கட்சி நிர்வாகிகள் கருணாநிதியின் பின்னால்தான் இருந்தார்கள். அதன்பின் MGR தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு, மக்களின் ஆதரவால் தேர்தலில் வென்றார். தற்போது செங்கோட்டையனும் அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டு, கட்சி தாவ உள்ளார். MGR உடன் ஒப்பிடமுடியாது என்றாலும், KAS-க்கு கொங்கில் செல்வாக்கு இருக்கிறது. எனவே இது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்கின்றனர்.

error: Content is protected !!