News February 25, 2025
சீமானுக்கு சோதனை காலமா?

நாதகவில் இருந்த முக்கிய நிர்வாகிகள் விலகல், நடிகை விஜயலட்சுமி எழுப்பிய பாலியல் புகார் தொடர்பான வழக்கு என அடுத்தடுத்து பிரச்னைகளில் சிக்கி வருகிறார் சீமான். இந்தச் சூழலில் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீச திட்டமிட்டதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 10 பேர் கைதாகியுள்ளனர். அடுத்தடுத்து நிகழும் சம்பவங்கள், அவருக்கு சோதனைக் காலமா? என எண்ணத் தோன்றுகிறது.
Similar News
News February 25, 2025
செமி ஃபைனலில் IND யாருடன் மோதும்?

குரூப் ஏ பிரிவில் IND அணி முதலிடத்தில் இருந்தால், குரூப் பி பிரிவில் 2ஆவது இடத்தில் இருக்கும் AUS அணியை CT செமி ஃபைனலில் எதிர்கொள்ளும். ஒருவேளை, 2ஆம் இடத்தை பிடித்தால், குரூப் பி-இல் முதலிடத்தில் இருக்கும் SAவுடன் மோத நேரிடும். இன்னும் சில போட்டிகள் மிச்சமிருந்தாலும், IND மேற்கூறிய 2 அணிகளில் ஏதாவது ஒன்றை தான் எதிர்கொள்ளும் சூழல் உள்ளது. ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே ENGஐ எதிர்கொள்ளும்.
News February 25, 2025
ரஷ்ய அதிபர் சர்வாதிகாரி அல்ல: டிரம்ப்

உக்ரைனில் அதிபர் தேர்தலை நடத்தாத ஜெலன்ஸ்கி சர்வாதிகாரி எனக் கூறிய டிரம்ப், ரஷ்ய அதிபர் புடின் சர்வாதிகாரி அல்ல எனத் தெரிவித்துள்ளார். உக்ரைன் உடனான போர் நிறுத்த உடன்படிக்கை எட்டப்பட்ட பிறகு ரஷ்யா செல்ல உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், இன்னும் ஒரு வாரத்திற்குள் உடன்படிக்கை எட்டப்படும் எனவும், இது நீடித்தால், அது 3ஆம் உலகப்போருக்கு வழிவகுக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்
News February 25, 2025
சாம்பியன்ஸ் டிராஃபி.. டாஸ் போடுவதில் தாமதம்

சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் இன்று ஆஸ்திரேலியாவை தென்னாப்பிரிக்கா அணி எதிர்கொள்கிறது. ராவல்பிண்டியில் போட்டி நடைபெறவிருந்த நிலையில், மழை காரணமாக டாஸ் போடுவது தாமதமாகியுள்ளது. விட்டுவிட்டு அங்கு மழை பெய்து வருவதால், மைதானம் ஈரப்பதமாக உள்ளது. இதனிடையே, களத்தின் தன்மையை நடுவர்கள் சோதித்து வரும் நிலையில், போட்டி ஓவர்கள் குறைக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.