News June 25, 2024
பொட்டு அம்மான் உயிருடன் உள்ளாரா?

விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் கொல்லப்படவில்லை, உயிருடன் இருக்கிறார் என அவ்வப்போது செய்திகள் வருவதுண்டு. அதேபோல், தற்போது விடுதலைப்புலிகள் இயக்க புலனாய்வு பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் உயிருடன் உள்ளதாகக் கூறி, அவரின் புதிய புகைப்படமொன்றை சிலர் சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது உண்மையா? இல்லை, பிரபாகரன் குறித்து வரும் தகவல் போல் இதுவும் வதந்தியா? எனத் தெரியவில்லை.
Similar News
News March 1, 2026
USA, இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனம்: புடின்

கமேனியின் மறைவுக்கு ரஷ்ய அதிபர் புடின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியனுக்கு எழுதிய கடிதத்தில் அவர், இந்த படுகொலையை ’காட்டுமிராண்டித்தனமான செயல்’ என குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அறநெறி மற்றும் சர்வதேச சட்டங்களை மீறி கமேனி கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உக்ரைன் போரில் ஈரான் ரஷ்யாவுக்கு ஆயுதங்களை கொடுத்து உதவியது குறிப்பிடத்தக்கது.
News March 1, 2026
ஜெயலலிதா படத்தை மாற்றியது ஏன்? OPS பதில்

திமுகவில் இணைந்த OPS தனது காரில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் போட்டோவை எடுத்துவிட்டு ஸ்டாலின் படத்தை வைத்துள்ளார். ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்போம் என சொன்னவர் பதவிக்காக இப்போது அவரை மறந்துவிட்டதாக கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது. தற்போது திமுகவில் இணைந்திருப்பதால் ஸ்டாலினின் படத்தை வைப்பதில் தவறில்லை என பதில் அளித்துள்ளார்.
News March 1, 2026
அஜித் பவார் மரணம்.. திடுக்கிடும் தகவல்

<<18987395>>அஜித் பவார்<<>> மரணத்திற்கு விமானியின் அலட்சியமே காரணம் என புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. விமானம் தரையிறங்க குறைந்தபட்சம் 5,000 மீட்டர் பார்வைத்திறன் அவசியம்; ஆனால் 3,000 மீட்டர் மட்டுமே தெரிந்தபோதும் விமானத்தை தரையிறக்க முயன்றதே விபத்துக்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமானி ‘அய்யோ.. அய்யோ..’ என அலறிய சத்தம் கருப்புப் பெட்டியில் பதிவாகி இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


