News June 25, 2024
பொட்டு அம்மான் உயிருடன் உள்ளாரா?

விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் கொல்லப்படவில்லை, உயிருடன் இருக்கிறார் என அவ்வப்போது செய்திகள் வருவதுண்டு. அதேபோல், தற்போது விடுதலைப்புலிகள் இயக்க புலனாய்வு பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் உயிருடன் உள்ளதாகக் கூறி, அவரின் புதிய புகைப்படமொன்றை சிலர் சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது உண்மையா? இல்லை, பிரபாகரன் குறித்து வரும் தகவல் போல் இதுவும் வதந்தியா? எனத் தெரியவில்லை.
Similar News
News December 6, 2025
ஓட்டு KAS-க்கு இல்லை, இரட்டை இலைக்கு: செல்லூர் ராஜூ

மூத்த அரசியல் தலைவரான செங்கோட்டையன் தவெகவிற்கு சென்றது தவறு என செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். தனக்கு எந்த கட்சியும் வேண்டாம், பதவியும் வேண்டாம், MGR கட்சியில் கடைசிவரை இருப்பேன் என சொல்பவன்தான் உண்மையான அதிமுக தொண்டன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மக்கள் செங்கோட்டையனுக்காக ஓட்டுபோடவில்லை, இரட்டை இலை சின்னத்திற்கே ஓட்டுபோட்டனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
News December 6, 2025
மரண தண்டனையை ஒழிக்க குரல் கொடுத்த கனிமொழி

இந்தியாவில் மரண தண்டனையை ஒழிக்கும் வகையில், திமுக MP கனிமொழி லோக்சபாவில் தனிநபர் மசோதாவை தாக்கல் செய்துள்ளார். கடந்த காலங்களில் இதே கோரிக்கை பலமுறை முன்வைக்கப்பட்டது. ஆனால், கடுமையான குற்றங்களை தடுப்பதற்கு மரண தண்டனை அவசியம் என அது கிடப்பில் போடப்பட்டது. இதற்கிடையே, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரும் மசோதாவை காங்கிரஸ் MP மாணிக்கம் தாகூர் கொண்டு வந்துள்ளார்.
News December 6, 2025
வரலாறு படைத்த தமிழகத்தின் தங்க மங்கைகள்!

மாலத்தீவில் நடைபெற்றுவரும் உலகக் கோப்பை கேரம் போட்டியில் இந்தியா பதக்கங்களை குவித்து வருகிறது. குறிப்பாக, தமிழக வீராங்கனை கீர்த்தனா 3 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். மகளிர் ஒற்றையர், இரட்டையர் என 2 பிரிவுகளிலும் அவர் தங்கம் வென்றார். இதேபோல், காசிமா, மித்ரா ஜோடி, இரட்டையர் பிரிவில் வெள்ளி வென்றுள்ளது. மகளிர் குழு போட்டியிலும் இவர்கள் மூவரும் தங்கம் வென்றுள்ளனர். சூப்பர்ல!


