News February 23, 2025
பாண்ட்யா வாட்ச்சின் விலை ரூ.7 கோடியா? ஆத்தாடி!

சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போட்டியில் இந்திய ஆல்ரவுண்டர் பாண்ட்யா பந்துவீசியபோது கையில் ஒருவகை வாட்ச் அணிந்திருந்தார். அந்த வாட்ச், மிகச் சிலரிடமே இருக்கும் விலை அதிக மதிப்புடைய Richard Mille RM 27-02 வாட்ச் என்று தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், அந்த வாட்ச்சின் விலை இந்திய மதிப்பில் ரூ.7 கோடி என்றும் அந்தத் தகவல் கூறுகிறது. உங்கள் வாட்ச்சின் விலை என்ன?
Similar News
News February 24, 2025
இன்றைய (பிப். 24) நல்ல நேரம்

▶பிப்ரவரி- 24 ▶மாசி – 12 ▶கிழமை: திங்கள்
▶நல்ல நேரம்: 06:30 AM – 07:30 AM & 04:30 PM – 05:30 PM
▶கெளரி நல்ல நேரம்: 09:30 AM – 10:30 AM & 07:30 PM – 08:30 PM
▶ராகு காலம்: 07:30 AM – 09:00 AM
▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM
▶குளிகை: 01:30 AM – 03:00 AM
▶திதி: துவாதசி ▶சூலம்: கிழக்கு
▶பரிகாரம்: தயிர் ▶சந்திராஷ்டமம்: மிருகசீருஷம் ▶நட்சத்திரம்: பூராடம் மா 5.04
News February 24, 2025
INDvsPAK போட்டியில் ஹர்திக்கின் காதலி?

நடாஷா உடனான விவாகரத்துக்குப் பிறகு, ஹர்திக் பாண்ட்யா, பிரிட்டிஷ் பாடகி ஜாஸ்மின் வாலியாவுடன் காதலில் இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், துபாயில் நடந்த போட்டியில் ஜாஸ்மின் கலந்து கொண்டது இந்த வதந்தியை மேலும் வலுப்படுத்தியுள்ளது. அக்சர் படேலின் மனைவிக்கு அருகில் அமர்ந்து IND அணிக்கு அவர் தனது ஆதரவை தெரிவித்தார். இதனால் இருவருக்கும் இடையேயான உறவு உண்மைதான் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
News February 24, 2025
வழக்கறிஞர் சட்டத்திருத்த மசோதாவுக்கு முதல்வர் எதிர்ப்பு

வழக்கறிஞர் சட்டத்திருத்த மசோதாவுக்கு முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த மசோதா சட்டத்துறை சுயாட்சியின் மீதான தாக்குதல் என்றும், 2014 முதல் நீதித்துறையின் சுதந்திரத்தை குறைக்கும் நடவடிக்கையில் பாஜக அரசு ஈடுபட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். சட்டம் ஒரு இருட்டறை, அதில் வழக்கறிஞரின் வாதம் விளக்கு போன்றது என்ற பேரறிஞர் அண்ணாவின் வரிகளை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.