News October 30, 2025
மியான்மர் அகதிகளுக்கு அச்சுறுத்தலா? இந்தியா மறுப்பு

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு, இச்சம்பவத்தில் இந்தியாவில் உள்ள மியான்மர் மக்கள் அதிகாரிகளால் அச்சுறுத்தபட்டதாக, ஐநாவின் 3-வது குழு குற்றஞ்சாட்டியது. இதனை இந்தியா மறுத்துள்ளது. அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று MP திலீப் சைகியா ஐநாவில் தெரிவித்துள்ளார். மியான்மருக்கு இந்தியா செய்த உதவிகளையும், இணக்கத்தையும் அவர் எடுத்துரைத்தார். இது தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.
Similar News
News October 30, 2025
Lion is always a lion.. டேவிட் வார்னர் சொன்னது இதுதான்!

இந்திய கிரிக்கெட்டில் தோனி என்ன செய்திருக்கிறார் என்பதை விட, IPL-ல் அவருக்கான ரசிகர்கள் என்பது தனி ரகம் என ஆஸி., வீரர் டேவிட் வார்னர் கூறியுள்ளார். IPL போட்டிகளில் வேறு எந்த அணி விளையாடினாலும் அங்கு தோனியின் (CSK) ஜெர்ஸியை பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். தோனியை பற்றிய வார்னரின் இந்த பேச்சு வைரலாக, ‘Thala for a reason’ என்று ரசிகர்கள் இணையத்தில் சிலாகித்து வருகின்றனர்.
News October 30, 2025
கலிலியோ பொன்மொழிகள்

*உங்களால் ஒரு மனிதனுக்கு எதையும் கற்றுக்கொடுக்க முடியாது, அவன் அதை தனக்குள்ளே தேடிக்கொள்ள மட்டுமே உதவ முடியும்.
*அனைத்து உண்மைகளும் எளிதில் புரிந்துகொள்ள கூடியவையே, ஆனால் முதலில் அதை கண்டுபிடிக்க வேண்டும்.
*உங்களை நீங்கள் அறிவதே மிகச் சிறந்த ஞானம்.
*அளவிடக்கூடியதை அளவிடுங்கள், அளவிட முடியாததை அளவிடக் கூடியதாக ஆக்குங்கள்.
News October 30, 2025
ராமரே இல்லை என காங்., கூறுகிறது: யோகி ஆதித்யநாத்

கடவுள் ராமர் என்பவரே இல்லை என கூறும் காங்., இறைவனின் இருப்பையே கேள்விக்குள்ளாக்குவதாக உ.பி., CM யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார். ராமரின் தேரை லாலு பிரசாத் யாதவ்வின் RJD நிறுத்தியதாகவும், சமாஜ்வாதி கட்சி ராம பக்தர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் கடுமையாக சாடினார். பிஹார் தேர்தல் பிரசாரம் கடும் மோதல் போக்கில் உள்ள நிலையில், மகாபந்தன் கூட்டணியை தாக்கி யோகி கூறியது பேசுபொருளாகியுள்ளது.


