News December 4, 2024
பொன்முடி மீதான சேறு வீச்சு கோபத்தின் வெளிப்பாடு?

திமுக அரசின் மீது தமிழக மக்கள் கொண்டுள்ள கடும் கோபத்தின் வெளிப்பாடுதான் அமைச்சர் பொன்முடி மீதான சேறு வீச்சு என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இருவேல்பட்டு சம்பவம் குறித்து பேசிய அவர், “நிர்வாகத் திறனற்ற, மக்கள் நலனில் அக்கறை இல்லாத திமுக அரசின் செயலற்ற தன்மையால் பெருமழை பாதிப்பிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இது 2026 தேர்தலில் எதிரொலிக்கும்” என்றார்.
Similar News
News April 28, 2025
பால்வளத்துறையை கையில் எடுத்த மனோ தங்கராஜ்

மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில், அவருக்கு பால்வளத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே பால்வளத்துறை அமைச்சராக இருந்தபோது திடீரென்று அமைச்சரவையில் இருந்து அவர் நீக்கப்பட்டார். சுமார் 7 மாதம் கழித்து அமைச்சரான அவருக்கு மீண்டும் அதே துறையை முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். தேர்தல் வர இன்னும் ஓர் ஆண்டே இருக்கும் நிலையில், அமைச்சரவையில் மாற்றம் நிகழ்ந்துள்ளது.
News April 28, 2025
ஒரு நாள் அரசு பொது விடுமுறை..

வரும் வியாழக்கிழமை (மே 1) உழைப்பாளர் தினத்தையொட்டி, பொதுவிடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு ஏற்கெனவே கோடை விடுமுறை தொடங்கிய நிலையில், மே 1-ம் தேதி அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதேபோல், தனியார் நிறுவனங்களும் விடுமுறை அளிக்க வேண்டும் எனவும் அறிவுத்தப்பட்டுள்ளது. மேலும், அன்றைய தினம் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூட வேண்டும்.
News April 28, 2025
மீண்டும் அமைச்சராக பதவியேற்றார் மனோ தங்கராஜ்

மனோ தங்கராஜ்-ஐ அமைச்சராக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 7 மாதங்கள் கழித்து மீண்டும் அமைச்சராக அவர் பதவியேற்றுள்ளார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் CM ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.