News August 25, 2024
மத விழாக்களை நடத்துவதா அரசின் வேலை? CPM

மத விழாக்களை தமிழக அரசு நடத்தக் கூடாது என CPM பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மதத்திலிருந்து விலகி நிற்பதே, அரசின் மதச்சார்பின்மை கோட்பாடு எனக் குறிப்பிட்ட அவர், மதத்தை பரப்புவது, பின்பற்றுவது என்றில்லாமல், மக்கள் ஒற்றுமையை பாதுகாப்பதுதான் அரசின் பணி எனக் கூறினார். முன்னதாக பழனியில் 2 நாள் நடைபெறும், அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை CM ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
Similar News
News August 14, 2025
உயராத தங்கம் விலை

கடந்த மூன்று நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்த நிலையில், இன்று விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹74,320-க்கும், கிராமுக்கு ₹9,290-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து விலை குறைந்ததால், இன்று உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பதால், நகை பிரியர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
News August 14, 2025
இரவில் கைது.. கொந்தளித்த விஜய்

அறவழியில் போராடிய தூய்மைப் பணியாளர்களை அராஜகப் போக்குடன் மனிதாபிமானமற்ற முறையில், திமுக அரசு இரவோடு இரவாகக் கைது செய்துள்ளதாக விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். நள்ளிரவில் நடைபெற்ற இந்தக் கைது நடவடிக்கையை மனசாட்சியுள்ள எவராலும் தாங்கிக்கொள்ள முடியாது. இது கொடுங்கோல் ஆட்சியின் வெளிப்பாடு என சாடிய அவர், கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
News August 14, 2025
இனி 3 மணி நேரத்தில் காசோலையை பணமாக்கலாம்

காசோலைகளை பணமாக்க தற்போது 2 நாள்கள் வரை ஆகிறது. CTS முறையில் பணமாக்கும் செயல்பாடு நடைபெறுகிறது. இந்நிலையில், அக்.4 முதல் 3 மணி நேரத்தில் காசோலையை பணமாக மாற்ற RBI அறிவுறுத்தியுள்ளது. Continuous Clearing மற்றும் Settlement on Realisation முறையில் இந்த செயல்பாடு விரைவாக முடிக்கப்படும். இதனால் தனிநபர்கள், வர்த்தக நிறுவனங்கள் சிரமத்தை தவிர்க்க முடியும்.