News October 25, 2024

மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?

image

சிலருக்கு வாய் பகுதியில் புண் இருக்கும். இது அவர்கள் சாப்பிடும் மருந்தின் வீரியமும் ஒரு காரணமாக இருக்கக்கூடும். இதுகுறித்து டாக்டர்கள் என்ன சொல்கிறார்கள் என் பார்க்கலாம். வீரியமான மருந்துகள், நல்ல பாக்டீரியாக்களை அழிக்கப் பார்க்கும். அதனாலேயே வாய்ப்புண் வருகிறது. எனவே, தங்களது ஆலோசனையின்றி அத்தகைய மருந்துகளை எடுப்பதை மக்கள் தவிர்க்க வேண்டுமென டாக்டர்கள் கூறுகின்றனர்.

Similar News

News January 13, 2026

தெருநாய்களை நேசித்தால் வீட்டுக்கு தூக்கிட்டு போங்க: SC

image

தெருநாய் தாக்கி யாராவது காயம் அடைந்தாலோ, இறந்தாலோ உள்ளாட்சி அதிகாரிகளும், அந்த நாய்களுக்கு உணவளிப்பவர்களும்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று SC தெரிவித்துள்ளது. மேலும், தெருநாய்களை நேசிப்பவர்கள், அவற்றை வீட்டிற்கு தூக்கி செல்லுங்கள் என தெரிவித்து, தெருநாய் கடியால் மக்கள் பாதிக்கப்பட்டால், அதற்கு மாநில அரசுக்கு கடும் அபராதங்களை விதிக்கப்படவுள்ளதாகவும் நீதிபதி விக்ரம் நாத் அமர்வு கூறியுள்ளது.

News January 13, 2026

School Fees-க்கு காசு இல்லையா? இதோ Scholarship!

image

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்கள், 9-12-ம் வகுப்பு வரை படிக்க ஆண்டுதோறும் ₹75,000 முதல் ₹1,25,000 வரை கொடுக்கிறது PM YASASVI Scholarship திட்டம். இதற்கு, மாணவர்கள் OBC, EBC, DNT பிரிவுகளை சேர்ந்தவராக இருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருவாய் ₹2.5 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெற, https://scholarships.gov.in/ -ல் விண்ணப்பிக்கலாம். SHARE.

News January 13, 2026

ரேஷன் அட்டைதாரர்களுக்கு.. சற்றுமுன் புதிய அறிவிப்பு

image

ரேஷன் அட்டைதாரர்களுக்கு நாளையும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதுவரை 2 கோடியே 4 லட்சம் குடும்பத்திற்கு ₹3,000 ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், விடுபட்டவர்கள் நாளை பொங்கல் பரிசை வாங்கிக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், கைரேகை சரியாக பதியாவிட்டாலும், கண் கருவிழி மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.

error: Content is protected !!