News September 27, 2025

உடற்பயிற்சிக்கு பின் வெந்நீரில் குளித்தால் சிக்கலா?

image

உடற்பயிற்சிக்கு பிறகு சூடான நீரில் குளித்தால் உடலில் கூடுதல் அழுத்தம் ஏற்படும். அது மட்டுமல்லாமல் உடற்பயிற்சி செய்யும்போது உடலானது சூடாகவும், இதயத்துடிப்பு அதிகமாகவும் இருக்கும். மேலும் இரத்த நாளங்களானது உடலை குளிர்விக்க அகலமாக விரிவடையும். இத்தகைய சூழ்நிலையில், சூடான நீரில் குளித்தால் உடலானது மேலும் சூடாகும். இதன் விளைவாக லேசான தலைச் சுற்றல் அல்லது மயக்கம் கூட வரலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

Similar News

News January 11, 2026

மக்கள் விரும்பாத கட்சியாக மாறிய காங்கிரஸ்: குஷ்பு

image

MGNREGA திட்ட பெயர் மாற்றத்தை கண்டித்து காங்., நடத்தும் போராட்டத்தை ஒரு ஏமாற்று வேலை என குஷ்பு சாடியுள்ளார். நாட்டிற்காக உழைத்த பல தலைவர்களின் பெயர்களை திட்டங்களுக்கு வைக்க சொல்லி காங்., போராட்டம் நடத்தாது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். காங்., ஆட்சியில் திட்டங்களுக்கு சோனியா குடும்ப பெயரை மட்டுமே சூட்டியதாக குறிப்பிட்ட அவர், தற்போது மக்கள் விரும்பாத கட்சியாக காங்., மாறிவிட்டது என்றும் கூறினார்.

News January 11, 2026

தமிழ் எந்த பேதமும் காட்டாது: உதயநிதி

image

சாதி, மதம், முதலாளி, தொழிலாளி உள்ளிட்ட அனைத்தையும் தாண்டி நம்மை இணைத்திருப்பது தமிழ் தான் என்று DCM உதயநிதி கூறியுள்ளார். அயலக தமிழர் விழாவில் பேசிய அவர், தமிழ் மொழி யாரையும் வேறுபடுத்தி பார்க்காது, பேதமும் காட்டாது என்றார். மேலும், ஒன்றாக இணையாத எந்த இனமும் வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை என்ற உதயநிதி, அயலகத் தமிழர்களும் தங்களது கனவுகளை தமிழக அரசிடம் தெரிவிக்கலாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News January 11, 2026

மகளிர் உரிமைத்தொகை உயர்வு.. இனிப்பான செய்தி

image

பொங்கல் முடிவதற்குள் பெண்களுக்கு இனிப்பான செய்தி ஒன்றை CM ஸ்டாலின் அறிவிப்பார் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, மகளிர் உரிமைத்தொகையை ₹2,000 ஆக உயர்த்தி வழங்க அரசு திட்டமிடுவதாக பேசப்படுகிறது. இந்நிலையில் அமைச்சர் கொடுத்த இந்த அப்டேட், மகளிர் உரிமைத்தொகை உயர்வை பற்றியதாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!