News September 27, 2025
உடற்பயிற்சிக்கு பின் வெந்நீரில் குளித்தால் சிக்கலா?

உடற்பயிற்சிக்கு பிறகு சூடான நீரில் குளித்தால் உடலில் கூடுதல் அழுத்தம் ஏற்படும். அது மட்டுமல்லாமல் உடற்பயிற்சி செய்யும்போது உடலானது சூடாகவும், இதயத்துடிப்பு அதிகமாகவும் இருக்கும். மேலும் இரத்த நாளங்களானது உடலை குளிர்விக்க அகலமாக விரிவடையும். இத்தகைய சூழ்நிலையில், சூடான நீரில் குளித்தால் உடலானது மேலும் சூடாகும். இதன் விளைவாக லேசான தலைச் சுற்றல் அல்லது மயக்கம் கூட வரலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
Similar News
News January 6, 2026
திருப்பரங்குன்றம் வழக்கில் ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு

திருப்பரங்குன்றம் தீபத் தூண் தொடர்பான வழக்கில் அரசின் மேல் முறையீட்டு மனுவை சென்னை ஐகோர்ட்டின் இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்துள்ளது. திருப்பரங்குன்றம் தீபத் தூண் வழக்கை அரசு அரசியல் நோக்கில் அணுகியதாகவும், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட அரசே காரணம் எனவும் நீதிபதிகள் பரபரப்பு கருத்தையும் தெரிவித்துள்ளனர். மேலும், மலையில் தீபம் ஏற்றலாம் எனவும் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.
News January 6, 2026
மோடியால் ஜனநாயகத்துக்கு ஆபத்து: சுப்பிரமணிய சுவாமி

டிரம்ப்பின் ஆதரவாளராக இருக்கும் மோடி, இந்திய ஜனநாயகத்திற்கும், பாஜகவிற்கும் மிகப்பெரிய ஆபத்தாக உள்ளதாக அக்கட்சியின் Ex MP சுப்பிரமணிய சுவாமி விமர்சித்துள்ளார். அதனால், மோடியை PM பதவியில் இருந்து ஓய்வு பெற வைத்து, பாஜகவின் தலைமை ஆலோசனை குழுவில் (Marg Darshan Mandal) அமரச் சொல்வது குறித்து RSS அமைப்பும் பாஜகவின் பொதுக்குழுவும் முடிவெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது பற்றி உங்கள் கருத்து?
News January 6, 2026
ஜன.8 முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்

பொங்கல் தொகுப்பாக பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, ₹3,000 ரொக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த பரிசுத் தொகுப்பை, சென்னை ஆலந்தூர் ரேஷன் கடையில் ஜன.8-ல் CM ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார். இதனையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள <<18775436>>ரேஷன்<<>> கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணிகள் தொடங்கும். முற்பகலில் 100 டோக்கன்களுக்கும், பிற்பகலில் 100 டோக்கன்களுக்கும் பொருள்கள் வழங்கப்படவுள்ளன.


