News March 17, 2025
உரிமைகளை தடுப்பது நியாயமா? – பொங்கிய சரத்!

டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி முறைகேடு நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், அண்ணாமலை, தமிழிசை, H.ராஜா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதற்கு, பாஜகவின் சரத் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். நியாயமான போராட்ட உரிமைகளை தடுப்பது நியாயமா? என X தளத்தில் கேள்வி எழுப்பி CM ஸ்டாலினை டேக் செய்துள்ளார்.
Similar News
News March 18, 2025
வாடகை வீட்டுக்கு மாறும் ஷாருக்கான்… காரணம் இதோ!

மும்பையில் மன்னட் என்ற அரண்மனையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் பாலிவுட் நடிகர் ஷாருக்கான். அரண்மனை புதுப்பிக்கப்பட இருப்பதால் அங்கிருந்து தற்காலிகமாக வெளியேறும் அவரது குடும்பம், பாலி ஹில்லில் பட தயாரிப்பாளர் வாசு பாக்னானிக்கு சொந்தமான 2 அபார்ட்மெண்ட்களில் குடிபெயர உள்ளது. இதற்கான மாத வாடகை மட்டும் ரூ.24 லட்சமாம். ‘மன்னட்’ புனரமைப்பு சுமார் 3 ஆண்டுகள் நடைபெறும் என கூறப்படுகிறது.
News March 18, 2025
உம்ரான் மாலிக்கிற்கு பதில் இவரா?

காயம் காரணமாக KKR வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினார். அவருக்கு பதில் குஜராத்தை சேர்ந்த சேத்தன் சக்காரியாவை கொல்கத்தா அணியில் இணைந்துள்ளது. 19 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி அவர் 20 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். மார்ச் 22ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் KKR மற்றும் RCB அணிகள் ஈடன் கார்டன்ஸில் மோதுகின்றன.
News March 18, 2025
செங்கோட்டையன், இபிஎஸ் விரிசலுக்கு இது காரணமா?

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஆதலால் அங்கு அவரின் ஆதரவாளர்களே முக்கிய பொறுப்புகளில் இருந்தனர். ஆனால் அண்மையில் அவர்களை இபிஎஸ் மாற்றியதாகக் கூறப்படுகிறது. மக்களவைத் தேர்தலில் செங்கோட்டையன் மகன் போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லை எனவும் சொல்லப்படுகிறது. இதுவே விரிசலுக்கு முக்கியக் காரணம் என கூறப்படுகிறது.