News April 4, 2025
பதற்றமா… இது காரணமாக இருக்கலாம்!

உணவு, Gut health ஆகியவற்றுக்கும், நமது மனநிலைக்கும் தொடர்புள்ளது. பழம், காய்கறிகளை குறைவாக சாப்பிடுவோருக்கு பதற்றம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிப்பதாக, கனடாவில் நடந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. உணவில் ஒரு நாளைக்கு குறைந்தது 3 காய்கறி (அ) பழங்கள் இல்லையெனில், அவருக்கு பதற்றம் ஏற்படும் வாய்ப்பு 24% அதிகரிக்கிறது. அதேபோல், உடல்கொழுப்பின் அளவு 36%-க்கு அதிகமானாலும், பதற்றம் வரும் ஆபத்து 70% அதிகரிக்கிறது.
Similar News
News October 15, 2025
முதல்வர், ஏடிஜிபி தகவலில் முரண்: இபிஎஸ்

கரூர் சம்பவத்தில் பாதுகாப்பு தொடர்பாக CM மற்றும் ஏடிஜிபி அளித்த தகவல்களில் முரண்பாடு உள்ளதாக EPS விமர்சித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், 600 போலீசார் பாதுகாப்பில் இருந்ததாக CM கூறுவதாகவும் ஆனால் ஏடிஜிபியோ 500 போலீசார் என குறிப்பிட்டதாகவும் தெரிவித்தார். TVK கேட்ட இடத்தை அளித்திருந்தால், கூட்ட நெரிசல் ஏற்பட்டிருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
News October 15, 2025
விஜய் பெயரை தவிர்த்த ஸ்டாலின்

கரூர் துயர சம்பவம் குறித்து விவாதிக்க EPS கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து, அரசு தரப்பில் விளக்கம் அளித்த CM ஸ்டாலின், ‘தமிழக வெற்றிக் கழக தலைவர்’ என்று மட்டுமே குறிப்பிட்டு, ‘விஜய்’ பெயரை உச்சரிக்கவில்லை. மேலும், விஜய் திருச்சி ஏர்போர்ட்டுக்கே தாமதமாகத்தான் வந்ததாகவும், அடிப்படை வசதிகள் கூட அக்கட்சி தரப்பில் செய்து தரப்படவில்லை என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.
News October 15, 2025
இந்த 3 இருமல் மருந்தை குடிக்காதீங்க.. எச்சரிக்கை

கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை குடித்து 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்தியாவில் தயாரிக்கப்படும் Coldrif, Respifresh TR, ReLife ஆகிய இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என WHO எச்சரித்துள்ளது. தரமற்ற இருமல் மருந்துகளை பயன்படுத்தி எதிர்பாராத பக்க விளைவுகளை சந்தித்திருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறவும் அறிவுறுத்தியுள்ளது.