News April 4, 2025
பதற்றமா… இது காரணமாக இருக்கலாம்!

உணவு, Gut health ஆகியவற்றுக்கும், நமது மனநிலைக்கும் தொடர்புள்ளது. பழம், காய்கறிகளை குறைவாக சாப்பிடுவோருக்கு பதற்றம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிப்பதாக, கனடாவில் நடந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. உணவில் ஒரு நாளைக்கு குறைந்தது 3 காய்கறி (அ) பழங்கள் இல்லையெனில், அவருக்கு பதற்றம் ஏற்படும் வாய்ப்பு 24% அதிகரிக்கிறது. அதேபோல், உடல்கொழுப்பின் அளவு 36%-க்கு அதிகமானாலும், பதற்றம் வரும் ஆபத்து 70% அதிகரிக்கிறது.
Similar News
News November 26, 2025
திருப்பூரில் இப்பகுதியில் Shutdown! அலெர்ட்

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (நவ.26) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, ரங்கநாதபுரம், ராமமூர்த்தி நகர், ராமையா காலனி, கொங்கு நகர், திருநீலகண்டபுரம், எஸ்.வி காலனி, கொங்கு மெயின் ரோடு, குத்தூஸ்புரம், வெங்கடேசபுரம், குமாரனந்தபுரம், டீச்சர்ஸ் காலனி, அருள்ஜோதிபுரம், நெசவாளர் காலனி, முருகானந்தபுரம், எம்.எஸ்.நகர், புதிய பஸ்டாண்ட், லட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது
News November 26, 2025
கர்நாடக CM ரேஸில் நியூ என்ட்ரியா?

கர்நாடக CM யார் என சித்தராமையா, டி.கே சிவக்குமாருக்கு இடையே போட்டி தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த ரேஸில் மேலும் ஒருவர் இணைந்துள்ளனர். அம்மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா வெளிப்படையாகவே தான் CM ரேஸில் இருப்பதாக கூறியுள்ளார். 2013-ல் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உதவியதால், அன்றிலிருந்து இன்றுவரை தான் எப்போதும் CM ரேஸில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
News November 26, 2025
மலச்சிக்கல் பிரச்னை நொடியில் நீங்கும்..

மலச்சிக்கல் பிரச்னைக்காக விலையுயர்ந்த மருந்துகள் எடுத்தும் தீர்வு கிடைக்கலையா? ஆவாரம் பூ இதற்கு ஒரு சிறந்த நிவாரணம் என ஆயுர்வேத டாக்டர்கள் சொல்றாங்க. இரவில் தூங்குவதற்கு முன் அரை ஸ்பூன் ஆவாரம் இலை பொடி, ஒரு சிட்டிகை கறுப்பு உப்பு இவற்றை ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடியுங்கள். வாரத்திற்கு 2 முறை இப்படி செய்து வந்தால் மலச்சிக்கல் பிரச்னை நீங்கும். SHARE.


