News April 1, 2025
22 வயது பெண் ஆணவக் கொலையா?

பல்லடம் அருகே 22 வயது பெண் ஆணவக் கொலை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. வெண்மணி – வித்யா 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதற்கிடையில் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த வித்யாவின் உடலை, போலீசுக்கு தெரிவிக்காமல் பெற்றோர் அடக்கம் செய்துள்ளனர். இதனையடுத்து, காதலியின் சாவில் மர்மம் இருப்பதாக காதலன் அளித்த புகாரில், அப்பெண்ணின் உடலை தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வு செய்ய போலீஸ் முடிவு செய்துள்ளது.
Similar News
News January 24, 2026
நாடாளுமன்றத்தை கலைத்தார் ஜப்பான் பிரதமர்

சனே டகாய்ச்சி, ஜப்பான் பிரதமராக பதவியேற்ற 3 மாதங்களில் நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார். நாடாளுமன்றத்தில் அவரது கூட்டணிக்கு குறைந்த பெரும்பான்மை உள்ளதால், ஆளுங்கட்சியின் பலத்தை நிரூபிக்க இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். ஜப்பானின் முதல் பெண் பிரதமரான இவருக்கு மக்களிடையே 70 சதவீதத்துக்கும் அதிகமாக ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.
News January 24, 2026
அரசியலா.. நானா.. பதிலளித்த நடிகை

நடிகை பாவனா கேரள சட்டமன்ற தேர்தலில் சிபிஐ(எம்) வேட்பாளராக களமிறங்குவதாக SM-ல் தகவல்கள் தீயாய் பரவின. இதுகுறித்து பேசிய அவர், இது முற்றிலும் பொய்யான செய்தி எனவும் தனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் துளியும் இல்லாதபோது, இதுபோன்ற வதந்தி எப்படி பரவியது என்றே தெரியவில்லை எனவும் கூறினார். மேலும், இந்த செய்தியை பார்த்து நான் அழுவதா, சிரிப்பதா என்றே தெரியவில்லை என்றார்.
News January 24, 2026
மணத்தக்காளி கீரையின் நன்மைகள்!

மணத்தக்காளி கீரை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். *செரிமான பிரச்சனைகளுக்கு தீர்வு தரும். *வயிற்று புண், அஜீரணம், மலச்சிக்கல் ஆகியவற்றை குணப்படுத்தும். *தோல் நோய்கள், முகப்பரு, தோல் அரிப்பு ஆகியவற்றை நீக்கும். *நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதுடன், ரத்த அழுத்தம், கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். *இதில் வைட்டமின்கள் ஏ, சி, இ, இரும்பு, கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.


