News February 12, 2025
இந்த ஊரில் பெண் குழந்தை பிறந்தால் ஜாக்பாட் தான்?
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739339110775_1231-normal-WIFI.webp)
ராஜஸ்தானின் ராஜ்சமந்த் மாவட்டத்தின் பிப்லாந்த்ரி கிராமத்தில் ஒரு தனித்துவமான வழக்கம் உள்ளது. ஊரில் ஒவ்வொரு பெண் குழந்தை பிறக்கும்போது, 111 மரக்கன்றுகளை நடுகிறார்கள். மேலும், அக்குழந்தை 21 வயதை அடையும் போது அவளின் பாதுகாப்பிற்காக, கிராமவாசிகள் இணைந்து ₹21,000, பெற்றோர்கள் ₹10,000ஐ fixed depositல் போடுகிறார்கள். இப்பழக்கத்தை 2006ல், ஊர் தலைவராக இருந்த ஷியாம் சுந்தர் கொண்டு வந்துள்ளார்.
Similar News
News February 12, 2025
வெறும் 1 ரன்னில் ரோகித் அவுட்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739348593418_55-normal-WIFI.webp)
ENGக்கு எதிரான3rd ODIயில் பேட்டிங் செய்து வரும் இந்தியாவுக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக மாறியுள்ளது. ஆம்! மார்க் வுட் வீசிய 2வது ஓவரின் முதல் பந்திலேயே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நம்பிக்கை நட்சத்திரம் ரோகித் வெறும் 1 ரன்னுக்கு அவுட் ஆகி நடையை கட்டினார். இப்போட்டியில் 13 ரன்கள் எடுத்து ODIயில் 11,000 ரன்களை கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது விக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
News February 12, 2025
G Pay, PhonePeல் அடிக்கடி பேலன்ஸ் பாக்குறீங்களா?
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739346271342_1231-normal-WIFI.webp)
‘Jumped’ என்ற UPI மோசடி பரவுகிறது. திடீரென அக்கவுண்டிற்கு ஒரு சிறிய தொகை டெபாசிட்டாகிறது. அது கூடவே ‘Collect money’ Request வருகிறது. குழப்பத்தில் என்ன இது என சரிபார்க்க, PIN நம்பரை போட்டால், அக்கவுண்டில் இருந்து பெரிய தொகையை நேக்காக திருடுகிறார்கள். இந்த மோசடிகள் அதிகரித்ததை அடுத்து, இது குறித்து நடவடிக்கைகளில் NPCI எடுத்துள்ளது. தெரியாத நம்பர்களில் இது போன்ற மெசேஜுக்கு பதிலளிக்க வேண்டாம்.
News February 12, 2025
இந்தியர்களை அடிமை போல் நடத்தும் டிரம்ப்: கார்கே
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739336564524_1173-normal-WIFI.webp)
பிரதமர் மோடியின் நண்பர் டொனால்ட் டிரம்ப், இந்தியர்களை அடிமைகள் போல் நடத்துவதாக காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றஞ்சாட்டியுள்ளார். அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்களை, பயணிகள் விமானத்தில் அனுப்பாமல், சரக்கு விமானத்தில் அனுப்புவது அதையே காட்டுவதாகவும், இவ்விவகாரம் குறித்து பிரதமர் மோடி அமெரிக்க அதிபரிடம் பேச வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.