News March 12, 2025
நாடு கடத்த நோட்டீஸா? லலித் மோடி மறுப்பு

நாடு கடத்த நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக வெளியான செய்தியை ஐபிஎல் EX தலைவர் லலித் மோடி மறுத்துள்ளார். அவரின் வனுவாட்டு நாட்டின் குடியுரிமையை ரத்து செய்ய உத்தரவிட்டு இருப்பதை வைத்து, நாடு கடத்த IND நோட்டீஸ் பிறப்பித்திருப்பதாக செய்தி வெளியானது. இதை மறுத்த லலித், அதுவொரு பொய் செய்தி. 15 ஆண்டில் பலமுறை IND-வுடன் நாடு கடத்தும் ஒப்பந்தம் செய்துள்ள நாடுகளுக்கு சென்றுள்ளேன் எனக் கூறியுள்ளார்.
Similar News
News March 12, 2025
3 மொழிகள் படிப்பதால் என்ன தவறு? சுதா மூர்த்தி

இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவியும், ராஜ்ய சபா எம்பியுமான சுதா மூர்த்தி, மும்மொழிக் கொள்கையை ஆதரித்து பேசியுள்ளார். தனக்கு 7 முதல் 8 மொழிகள் தெரியும் எனவும், அதனால் குழந்தைகள் பல மொழிகளை கற்பது அவர்களுக்கு மிகவும் பயன்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் மத்திய அரசு vs தமிழ்நாடு அரசு இடையேயான மோதல் முற்றி வரும் நிலையில், அவர் இப்படி கூறியுள்ளார்.
News March 12, 2025
SBI UPI சேவைகள் முடங்கியது

நாடு முழுவதும் SBI வங்கியின் UPI சேவைகள் முடங்கியதால் வாடிக்கையாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இரு தினங்களுக்கு முன் இதேபோல வங்கி சேவைகள் முடங்கின. பின்னர், ஒரு மணி நேரத்திற்குப் பின் சுமூகமானது. அதேபோல, இன்று இரவு 7 மணி முதல் UPI சேவைகள் முடங்கியுள்ளன. நாட்டின் நம்பர் 1 பொதுத்துறை வங்கி இப்படி செயல்படலாமா என்று வாடிக்கையாளர்கள் விமர்சித்து வருகின்றனர். உங்களுக்கு சேவை கிடைக்கிறதா? கமெண்ட்.
News March 12, 2025
83,668 வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடிகளுக்கு காரணமான 83,668 வாட்ஸ்அப் கணக்குகளை மத்திய அரசு முடக்கியுள்ளது. மாநிலங்களவையில் திருச்சி சிவா (திமுக) எம்பி எழுப்பிய கேள்விக்கு, மத்திய உள்துறை இணையமைச்சர் சஞ்சய் பண்டி குமார் பதில் தாக்கல் செய்துள்ளார். அதில், டிஜிட்டல் அரெஸ்டுக்கு காரணமான 83,668 வாட்ஸ்அப் கணக்குகள், 3,962 ஸ்கைப் ஐடிக்கள் சைபர் க்ரைம் தடுப்பு மையத்தால் முடக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.