News January 1, 2025

பொங்கல் பரிசு ரூ.1000 இல்லாதது பெரிய விஷயமா?

image

ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1000 வழங்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது கிடையாது என மாநில அரசு திட்டவட்டமாக அறிவித்தது. இது பெரும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து பேசிய காங்., எம்.பி. கார்த்தி சிதம்பரம், மாதந்தோறும் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வழங்குவதால், பொங்கல் தொகுப்பில் ரூ.1000 இல்லாதது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல எனக் கூறியுள்ளார்.

Similar News

News November 15, 2025

பள்ளி மாணவி மரணம்.. நெஞ்சை உலுக்கிய கொடுமை

image

குழந்தைகள் தினத்தில் பள்ளிக் குழந்தைகளை ஆசிரியர்கள் கூடுதலாக கவனிப்பார்கள். ஆனால், மகாராஷ்டிராவில் நடந்ததே வேறு. நேற்று(நவ.14) பள்ளிக்கு 10 நிமிடம் தாமதமாக சென்ற 6-ம் வகுப்பு மாணவி காஜலை, 100 முறை தோப்புக் கரணம் போடச் சொல்லி பனிஷ்மெண்ட் கொடுத்துள்ளனர். ஸ்கூல் பேக்குடன் தோப்புக் கரணம் போட்ட அந்த மாணவி, வீடு திரும்பியதும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார். இத்தகைய பள்ளிகளை என்ன செய்வது?

News November 15, 2025

காங்கிரஸ் கட்சியை ஒழிக்க வந்தவன் நான்: சீமான்

image

காமராஜர் மறைவுக்குப்பின் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் அழிந்துவிட்டதாக சீமான் விமர்சித்துள்ளார். மேலும் ஈழத்தின் கனவை அழித்த காங்கிரஸை ஒழிக்கவே, தான் அரசியல் களத்திற்கு வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். காங்., திராவிட கட்சிகளின் தோளில் பயணிப்பதாகவும் தன்னைப் போல தனியாக 234 தொகுதியிலும் அவர்களால் தனித்து போட்டியிட முடியுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

News November 15, 2025

வங்கி கணக்கில் ₹2,000… வந்தது HAPPY NEWS

image

PM KISAN திட்டத்தின் 21-வது தவணை தொகை(₹2,000) குறித்து முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. நவ.19-ம் தேதி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், KYC அப்டேட் செய்யாமல் இருந்ததால், கடந்த தவணை தொகை பல்லாயிரக்கணக்கான விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. தற்போது, அவர்களுக்கு 2 தவணை தொகை ₹4,000 மொத்தமாக வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!