News October 18, 2025
தீபம் காட்டும் போது கற்பூரம் அணைந்தால் அபசகுணமா?

கற்பூர ஆரத்தி செய்த பிறகுதான், பூஜை பூர்த்தியானதாக கருதப்படுகிறது. கற்பூரம் எரியும்போது காற்றில் மறைந்துவிடுவதை போல, நமது ஆன்மாவும் இறைவனுடைய அருட்ஜோதியில் கரைந்து ஒன்றுபட வேண்டும் என்ற தத்துவத்தை கற்பூரம் விளக்குகிறது. தீபாராதனையின் போது தீபம் அணைந்துவிட்டால் அபசகுணம் என்று எண்ண வேண்டாம். அதே கற்பூரத்தை மீண்டும் ஏற்றாமல், உடனே வேறு கற்பூர துண்டுகளை வைத்து எரித்து தீபாராதனை காட்டுங்கள்.
Similar News
News October 18, 2025
ஸ்மிருதி மந்தனாவுக்கு விரைவில் டும் டும் டும்!

இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவை விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக அவரது காதலர் பலாஷ் முச்சல் தெரிவித்துள்ளார். திரைப்பட இயக்குநரும், இசையமைப்பாளருமான பலாஷ் முச்சல், இந்தூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது, விரைவில் ஸ்மிருதி மந்தனா இந்தூரின் மருமகளாவார் என கூறினார். பலாஷ் முச்சலும், ஸ்மிருதி மந்தனாவும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வருவது குறிப்பிடத்தக்கது.
News October 18, 2025
BREAKING: 20 மாவட்டங்களில் கனமழை பொளந்து கட்டும்

சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என IMD கணித்துள்ளது. ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக கோவை, நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
News October 18, 2025
வில்வித்தை World Cup: இந்திய வீராங்கனை சாதனை!

ஜோதி சுரேகா உலகக்கோப்பை வில்வித்தை இறுதி போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார். சீனாவில் நடைபெற்று வரும் போட்டியில், பிரிட்டன் வீராங்கனையை 150-145 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி அவர் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். ஏற்கெனவே 2 முறை உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்று, முதல் சுற்றிலேயே வெறியேறியிருந்த நிலையில், தற்போது பதக்கம் வென்று சாதித்துள்ளார்.