News April 19, 2025
இந்தி கட்டாயமா? அனுமதிக்க மாட்டோம்

மகாராஷ்டிராவில் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தி கட்டாயம் என்று மாநில அரசு அறிவித்திருப்பதற்கு சிவசேனா (UBT) கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, இந்தி மீது தனது கட்சிக்கு எந்த வெறுப்பும் இல்லையென்றும், அது கட்டாயமாக்கப்படுவதை மட்டுமே எதிர்க்கிறோம் என்றும் கூறினார். தமிழக அரசும் இதே கருத்தைதான் முன் வைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News October 15, 2025
₹565 கட்டினால் போதும் ₹10 லட்சத்துக்கான காப்பீடு!

போஸ்ட் ஆபீசின் காப்பீட்டு திட்டத்தில் ஆண்டுக்கு ₹565 பிரீமியமாக செலுத்தினால், ₹10 லட்சம் வரை காப்பீட்டுத் தொகையைப் பெறலாம். இந்த காப்பீடு திட்டத்தில் சேர மருத்துவ சான்றிதழ் தேவையில்லை. 18 முதல் 65 வயதுக்குட்பட்டவர்கள் யாராக இருந்தாலும் இந்தத் திட்டத்தில் சேரலாம். விருப்பமுள்ளவர்கள் அருகிலுள்ள Post Office-ஐ அணுகுங்கள். அனைவரும் பயன்பெறட்டும், SHARE பண்ணுங்க.
News October 15, 2025
தமிழ்நாட்டில் இந்தி திணிப்புக்கு தடையா?

தமிழ்நாட்டில் கட்டாய இந்தி திணிப்பை தடுக்க மாநில அரசு சட்ட மசோதா தாக்கல் செய்யப் போவதாக ஆங்கில ஊடகத்தில் தகவல் வெளியாகியுள்ளது. நேற்றிரவு நடந்த அவசரக் கூட்டத்தில் இதுபற்றி CM ஸ்டாலின் விவாதித்ததாகவும் கூறப்படுகிறது. இந்தி விளம்பரப் பலகைகள், பதாகைகள், திரைப்படங்கள், பாடல்கள் போன்றவற்றுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க இந்த மசோதா வருகிறதாம். இதுபற்றி மேலும் தகவல் எதிர்பார்க்கப்படுகிறது.
News October 15, 2025
சிறுவர், இளைஞர்களுக்கு இன்ஸ்டாவின் புது ரூல்ஸ்!

இளம் தலைமுறையினரின் பாதுகாப்பிற்காக இன்ஸ்டா முக்கிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. தியேட்டரில் வயது வரம்பு சான்றிதழ் வழங்குவது போல, இனி இன்ஸ்டாவிலும் PG-13 வழிகாட்டுதலின் கீழ்தான் வீடியோக்களை பார்க்க முடியும். இது நம்மூரின் ‘A’ சர்ட்டிபிகேட்டுக்கு சமமானது. 18 வயதுக்குட்பட்டவர்கள் தானாகவே இந்த PG-13 சேர்க்கப்படுவார்கள். அவர்களுக்கு ஆபாசம், போதைப்பொருள், வன்முறை போன்ற வீடியோஸ் காட்டப்படாது.