News April 19, 2025
இந்தி கட்டாயமா? அனுமதிக்க மாட்டோம்

மகாராஷ்டிராவில் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தி கட்டாயம் என்று மாநில அரசு அறிவித்திருப்பதற்கு சிவசேனா (UBT) கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, இந்தி மீது தனது கட்சிக்கு எந்த வெறுப்பும் இல்லையென்றும், அது கட்டாயமாக்கப்படுவதை மட்டுமே எதிர்க்கிறோம் என்றும் கூறினார். தமிழக அரசும் இதே கருத்தைதான் முன் வைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 9, 2025
விஜய் கூட்டம்: துப்பாக்கி உடன் வந்தவர் இவர்தான் (PHOTO)

புதுச்சேரி தவெக பொதுக்கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் சென்ற நபரின் போட்டோ வெளியாகியுள்ளது. இவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், இவர் சிவகங்கையை சேர்ந்த தவெக நிர்வாகியின் தனி பாதுகாவலர் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் அந்த தவெக நிர்வாகி யார்? சட்டவிரோதமாக துப்பாக்கியை பெற்றது எப்படி என பல கோணங்களில் போலீசார் விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
News December 9, 2025
வீட்டு வாசலில் இந்த ‘3’ பொருள்களை வைக்காதீங்க..

வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டு வாசலில் இந்த 3 பொருள்களை வைப்பது, கேடு விளைக்கும் என நம்பப்படுகிறது. ➤வாடிய செடிகள், கொடிகள் வீட்டு வாசலில் இருப்பது துரதிர்ஷ்டத்தை உண்டாக்கும் ➤கருப்பு அல்லது அடர் நிறத்திலான பொருள்கள் வாசப்படி மேட், சிலைகள் இருப்பது அதிர்ஷ்டத்தைத் தடுக்கும் என நம்பப்படுகிறது ➤உடைந்த சேதமடைந்த பொருள்கள், ஓடாத கடிகாரங்கள் வாசலில் இருந்தால், எதிர்மறையான ஆற்றலை கொடுக்கும்.
News December 9, 2025
உலகக் கோப்பை ஸ்குவாஷ்: 3 தமிழக வீரர்கள் பங்கேற்பு

சென்னையில் இன்று முதல் டிச.14 வரை 5-வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில், இதற்கான கோப்பையை DCM உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார். இந்தியா, ஜப்பான், மலேசியா, எகிப்து உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணியில் அனாஹத் சிங், தமிழகத்தை சேர்ந்த ஜோஷ்னா சின்னப்பா, அபய் சிங், வேலவன் செந்தில் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


