News April 19, 2025
இந்தி கட்டாயமா? அனுமதிக்க மாட்டோம்

மகாராஷ்டிராவில் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தி கட்டாயம் என்று மாநில அரசு அறிவித்திருப்பதற்கு சிவசேனா (UBT) கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, இந்தி மீது தனது கட்சிக்கு எந்த வெறுப்பும் இல்லையென்றும், அது கட்டாயமாக்கப்படுவதை மட்டுமே எதிர்க்கிறோம் என்றும் கூறினார். தமிழக அரசும் இதே கருத்தைதான் முன் வைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 26, 2025
விழுப்புரம்இரவு ரோந்துப் பணி விவரம்

விழுப்புரம் போலீசாரின் “Knights on Night Rounds” இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்
News November 26, 2025
பிடிகொடுக்காத EPS.. ரூட்டை மாற்றிய KAS

EPS பிடிகொடுக்காததாலேயே, செங்கோட்டையன் தனது அரசியல் பயணத்தை TVK பக்கம் திருப்பியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். நீக்கப்பட்டவர்களை இணைக்குமாறு கெடுவிதித்த KAS-ன் கட்சி பொறுப்பை EPS பறித்தார். தேவர் ஜெயந்தியில் TTV, OPS உடன் இணைந்து பேட்டி கொடுத்ததால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். ADMK இணைப்பு முயற்சிகள் பலனளிக்காததால், இறுதியாக தவெகவில் இணையும் முடிவை KAS எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
News November 26, 2025
அயோத்தியில் தர்மக்கொடி ஏற்றம்: PM மோடி

அயோத்தி ராமர் கோயிலில் காவி கொடி ஏற்றப்பட்டுள்ளதால், பல நூற்றாண்டுகளின் வலி முடிவுக்கு வந்துள்ளதாக PM மோடி தெரிவித்துள்ளார். அயோத்தியில் ஏற்றப்பட்டுள்ள தர்மக்கொடி இந்திய நாகரிகத்தின் புதிய எழுச்சி என்றும், இந்திய கலாசாரத்தின் அடையாளம் எனவும் அவர் பேசியுள்ளார். மேலும், ராம பக்தர்களின் 500 ஆண்டுகால கனவு தற்போது நிறைவேறி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


