News August 14, 2024
பூண்டு காய்கறியா OR மசாலாவா? நீதிமன்றம் தீர்ப்பு

பூண்டு காய்கறியா அல்லது மசாலாப் பொருளா என்ற விவாதத்துக்கு ம.பி நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. 2015ஆம் ஆண்டு ம.பி விவசாயிகள் பூண்டை, அம்மாநில வேளாண் சந்தைப்படுத்தல் வாரியத்தில் முறையிட்டு காய்கறி வகையில் சேர்த்தனர். இதை ஏற்க மறுத்த அம்மாநில விவசாய துறை, 1972 வேளாண் சட்டத்தின் படி மசாலாப் பொருளாக அறிவித்தது. இதை எதிர்த்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பூண்டு காய்கறிதான் என்று தீர்ப்பளித்தது.
Similar News
News November 9, 2025
ரஜினி, அஜித் சம்பளத்துக்கு வருகிறது கட்டுப்பாடு

இனி படங்களின் லாப நஷ்டங்களில் நடிகர்களுக்கு பங்கு உண்டு என தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் போடப்பட்டுள்ளது. இதன்மூலம், ஒரு படம் நஷ்டமானால், அந்த பாரத்தை தயாரிப்பு நிறுவனம் மட்டுமே தாங்கவேண்டிய சூழல் இருக்காது. ஒருவேளை வசூலை குவித்தால் நடிகர்களும் லாபம் பார்க்கலாம். மேலும், நடிகர்கள் வெப் சீரிஸ்களை தவிர்த்து திரைப்படங்களின் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
News November 9, 2025
சற்றுமுன்: பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

ஜப்பானின் Iwate மாகாணத்திற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டின் பொது ஒளிபரப்பு நிறுவனமான NHK தெரிவித்துள்ளது. Iwate மாகாணத்தின் கடலோரத்திலிருந்து 70 கி.மீ., தொலைவில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி உருவாகியுள்ளதாகவும், அது விரைவில் பசிபிக் கடற்கரையை அடைய வாய்ப்புள்ளதாகவும் NHK கூறியுள்ளது. அலையின் உயரம் சுமார் 3 அடி வரை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 9, 2025
BJP ஒரு பாராங்கல், அதோடு குதித்தால் நஷ்டமே: SV சேகர்

பாஜக என்பது ஒரு பாராங்கல் என்றும், அதை கட்டிக்கொண்டு யார் குதித்தாலும், அவர்களுக்கு தான் நஷ்டம் எனவும் SV சேகர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பாஜக என்பது வளரவே இல்லை என்று கூறிய அவர், தற்போதும் பாஜகவுக்கு 3% தான் ஓட்டு உள்ளதாக குறிப்பிட்டார். அரசியலில் அண்ணாமலை எப்போதும் பூஜ்ஜியம் தான் என்று விமர்சித்த SV சேகர், 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி தான் வெல்லும் என்று கூறினார்.


