News August 14, 2024
பூண்டு காய்கறியா OR மசாலாவா? நீதிமன்றம் தீர்ப்பு

பூண்டு காய்கறியா அல்லது மசாலாப் பொருளா என்ற விவாதத்துக்கு ம.பி நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. 2015ஆம் ஆண்டு ம.பி விவசாயிகள் பூண்டை, அம்மாநில வேளாண் சந்தைப்படுத்தல் வாரியத்தில் முறையிட்டு காய்கறி வகையில் சேர்த்தனர். இதை ஏற்க மறுத்த அம்மாநில விவசாய துறை, 1972 வேளாண் சட்டத்தின் படி மசாலாப் பொருளாக அறிவித்தது. இதை எதிர்த்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பூண்டு காய்கறிதான் என்று தீர்ப்பளித்தது.
Similar News
News January 8, 2026
நெயில் பாலிஷ் பிரியர்களுக்கு எச்சரிக்கை!

நெயில் பாலிஷ் என்றால் பெண்களுக்கு அலாதி பிரியம். ஆனால் இதற்கு ஐரோப்பிய நாடுகளில் தடை உள்ளது என்பது எத்தனை பேருக்கு தெரியும். குறிப்பாக ஜெல் நெயில் பாலிஷ் வகைகளில் உள்ள ஃபார்மால்டிஹைடு, தொலுவென் போன்றவை புற்றுநோயை உண்டாக்கும் கெமிக்கல்கள் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். மேலும் அதில் உள்ள ரசாயனம் ஸ்கின்னுக்குள் ஊடுருவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் ஆய்வில் கண்டறியப்பட்டு இருக்கிறது.
News January 8, 2026
இந்தியர்களுக்கான விசாவை நிறுத்தி வைத்த வங்கதேசம்

முஸ்தஃபிசூர் விவகாரம், இந்துக்கள் மீதான தாக்குதல் உள்ளிட்டவையால் இந்தியா வங்கதேச உறவில் சிக்கல் எழுந்துள்ளது. இதனிடையே இந்தியர்களுக்கான டூரிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு விசாக்களை வங்கதேசம் நிறுத்தி வைத்துள்ளது. வணிகம், வேலைவாய்ப்புக்கு மட்டும் விசா வழங்கப்படுவதாக அந்நாட்டின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, மும்பை, கவுகாத்தி உள்ளிட்ட இடங்களில் அந்நாட்டு தூதரகங்கள் செயல்படுவது குறிப்பிடதக்கது.
News January 8, 2026
ரத்தன் டாடா பொன்மொழிகள்

*சிறந்த வேலை செய்ய ஒரே வழி நீங்கள் செய்யும் வேலையை நேசிப்பது தான். *வேகமாக நடக்க விரும்பினால் தனியாக நட. ஆனால் நீண்ட தூரம் நடக்க விரும்பினால், பிறருடன் ஒன்றாக நட. *நல்ல சேவையை வழங்கினால், நல்ல வியாபாரம் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். *எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சிறப்பாகவும், சரியாகவும் செயல்பட வேண்டும். அதில் சமரசம் செய்துகொள்ள கூடாது.


