News April 16, 2025
EX அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு சிக்கல்?

ஆவினில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கில் EX அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவ்வழக்கில் அவர் ஜாமினில் வெளியே வந்த நிலையில், மேல் விசாரணைக்கு கவர்னர் ஒப்புதல் தரவில்லை. சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்த ஐகோர்ட் உத்தரவுக்கும் இடைக்கால தடை விதிக்கப்பட்டது. தற்போது கவர்னரின் ஒப்புதல் கிடைத்ததால், விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
Similar News
News December 23, 2025
தங்கம் விலை மளமளவென மாறியது

ஜெட் வேகத்தில் உயர்ந்து வரும் தங்கத்தின் விலையில் இன்று மிகப்பெரிய மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், சர்வதேச சந்தையில் இன்று (டிச.23) 1 அவுன்ஸ்(28g) தங்கம் விலை $127.48 அதிகரித்து $4,467.79 ஆக உள்ளது. வெள்ளியும் 1 அவுன்ஸ்-க்கு $1.97 உயர்ந்து $69.11-க்கு விற்பனையாகிறது. இதன் தாக்கத்தால் இந்திய சந்தையில் தங்கத்தின் விலை (தற்போது ₹₹1,00,560) இன்று கணிசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.
News December 23, 2025
நான் முள்ளிவாய்க்கால் பீரங்கி பயிற்சியில்.. சீமான்

முள்ளிவாய்க்காலில் பீரங்கி பயிற்சி எடுத்தபோது, அங்கிருந்த வீரப்பெண் சொன்னது தனக்கு உத்வேகமாக இருந்ததாக சீமான் கூறியுள்ளார். திருச்சி நாதக கூட்டத்தில் பேசிய அவர், கராத்தே உள்ளிட்டவற்றை கற்றுத்தேர்ந்த தன்னால் குறி பார்த்து பீரங்கியை இயக்க முடியவில்லை. அப்போது, அங்கிருந்த தமிழீழ பெண் போராளி, ‘உடலில் வலு இருந்தால் மட்டும் போதாது, உள்ளத்தில் வெறி இருக்க வேண்டும் அண்ணா’ என கூறியதாக தெரிவித்துள்ளார்.
News December 23, 2025
இந்திய அணியின் நடத்தை நல்லதல்ல: பாக்., வீரர்

U 19 ஆசியக் கோப்பை ஃபைனலில் வைபவ் சூர்யவன்ஷியின் செயல் பேசுபொருளானது. இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள Ex பாக்., வீரர் சர்ஃபராஸ் அஹமத், தற்போதைய இந்திய அணியின் நடத்தை விளையாட்டுக்கு நல்லதல்ல என கூறியுள்ளார். அவர்கள் செய்தது நெறிமுறை அற்றது என்றும் விமர்சித்துள்ளார். ஆனால், தான் விளையாடிய காலத்தில் இருந்த தோனி, கோலியின் அணிகள் கண்ணியமாக நடந்துகொண்டனர் என்றும் தெரிவித்தார். நீங்க என்ன சொல்றீங்க?


