News April 16, 2025
EX அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு சிக்கல்?

ஆவினில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கில் EX அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவ்வழக்கில் அவர் ஜாமினில் வெளியே வந்த நிலையில், மேல் விசாரணைக்கு கவர்னர் ஒப்புதல் தரவில்லை. சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்த ஐகோர்ட் உத்தரவுக்கும் இடைக்கால தடை விதிக்கப்பட்டது. தற்போது கவர்னரின் ஒப்புதல் கிடைத்ததால், விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
Similar News
News November 20, 2025
நாமக்கல் மாவட்ட விவசாயிகள் கவனத்திற்கு!

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை (நவ.21) வெள்ளிக்கிழமை அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், விவசாயிகள் தங்களது பிரச்சனைகளை மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக தெரிவித்து தீர்வு பெறலாம். மேலும் அனைத்து விவசாயிகளும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கலந்து கொள்ளுமாறு ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
News November 20, 2025
டிரம்ப்பை கிண்டல் செய்த காங்கிரஸ்

சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்தபோது, IND-PAK சண்டையை நிறுத்தியதாக <<18327674>>டிரம்ப்<<>> கூறியிருக்கிறார். இந்நிலையில், இவர் இப்படி சொல்வது இது 60-வது முறை என காங்., பொதுச்செயலாளார் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் பக்கத்தில் கிண்டலாக பதிவிட்டுள்ளார். சமீபகாலமாக சைலண்ட்டாக இருந்த டிரம்ப், தற்போது மீண்டும் இதுகுறித்து உலகிற்கு தம்பட்டம் அடிக்க தொடங்கிவிட்டார் எனவும் ஜெய்ராம் தெரிவித்துள்ளார்.
News November 20, 2025
BREAKING: வங்கிகளில் இன்று முதல் இது இயங்காது

RBI பல அதிரடியான மாற்றங்களை செய்து வருகிறது. அந்த வகையில், இன்று(நவ.20) முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகளின்படி, செயல்படாத கணக்குகள் (Dormant), செயலற்ற கணக்குகள் (Inactive) மற்றும் இருப்பு இல்லாத கணக்குகள் (ஜீரோ பேலன்ஸ் கணக்குகள்) ஆகியவை முடக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வகையான கணக்குகள் மோசடி அல்லது தவறான பயன்பாட்டிற்கு ஆளாக நேரிடும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.


