News April 16, 2025
EX அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு சிக்கல்?

ஆவினில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கில் EX அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவ்வழக்கில் அவர் ஜாமினில் வெளியே வந்த நிலையில், மேல் விசாரணைக்கு கவர்னர் ஒப்புதல் தரவில்லை. சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்த ஐகோர்ட் உத்தரவுக்கும் இடைக்கால தடை விதிக்கப்பட்டது. தற்போது கவர்னரின் ஒப்புதல் கிடைத்ததால், விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
Similar News
News December 18, 2025
விஜய்க்கு ஓட்டு போடலனா விஷம் தான்: பெண் தொண்டர்

விஜய் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கும், மக்களுக்கு நல்ல சலுகைகளை வழங்குவார் என இளம்பெண் ஒருவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஈரோடு பரப்புரையில் கலந்துகொண்ட அப்பெண், தனது வீட்டில் 9 பேர் வாக்களிக்கும் தகுதியுடன் உள்ளதாகவும், அவர்கள் அனைவரும் விஜய்க்கு தான் வாக்களிப்பார்கள் என்றார். ஒருவேளை விஜய்க்கு வாக்களிக்கவில்லை என்றால், சோற்றில் விஷம் வைத்துவிடுவேன் என்று கேலியாக தெரிவித்தார்.
News December 18, 2025
மகளிர் உரிமைத் தொகை.. இரட்டிப்பான ஹேப்பி நியூஸ்

புதிதாக மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் ஆன்லைனில் மேல்முறையீடு செய்து வருகின்றனர். <
News December 18, 2025
AI-ன் தீராத தாகத்தால் காலியாகும் தண்ணீர்!

AI-ன் அசுர வளர்ச்சி பூமியின் நீர் வளத்தை வேகமாக காலி செய்து வருவதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். AI இயங்க தேவைப்படும் டேட்டா செண்டர்கள், அதீத வெப்பத்தை வெளியிடுகின்றன. அவை 24*7 இயங்குவதால், இதை குளிர்விக்க பல கோடி லிட்டர் நீர் தேவைப்படுகிறதாம். ஒவ்வொரு 100 வரிக்கும் ஒரு லிட்டர் நீர் அவசியமாகிறது. US-ல் கடந்த 2023-ல் மட்டும் இதற்காக 6,600 கோடி லிட்டர் நீர் பயன்படுத்தப்பட்டதாம்.


