News April 16, 2025
EX அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு சிக்கல்?

ஆவினில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கில் EX அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவ்வழக்கில் அவர் ஜாமினில் வெளியே வந்த நிலையில், மேல் விசாரணைக்கு கவர்னர் ஒப்புதல் தரவில்லை. சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்த ஐகோர்ட் உத்தரவுக்கும் இடைக்கால தடை விதிக்கப்பட்டது. தற்போது கவர்னரின் ஒப்புதல் கிடைத்ததால், விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
Similar News
News December 24, 2025
அதிமுக + பாஜக + ஓபிஎஸ் கூட்டணி.. முடிவை அறிவித்தார்

EPS இருக்கும் வரை <<18654367>>அதிமுகவுடன் கூட்டணி<<>> இல்லை என OPS திட்டவட்டமாக அறிவித்துள்ளார். சென்னையில், நேற்று நடைபெற்ற NDA கூட்டணி பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீடு, கூட்டணியில் இடம்பெறவுள்ள கட்சிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது. அப்போது, OPS, TTV தினகரனை கூட்டணியில் இணைத்துக் கொள்ள EPS பச்சைக்கொடி காட்டியதாக செய்தி வெளியானது. ஆனால், இதனை OPS தரப்பு நிராகரித்துள்ளது.
News December 24, 2025
MGR என்னும் சகாப்தம்!

ஒருவரின் பெயர் தலைமுறைகள் தாண்டியும் பேசப்படுவது சாதாரண புகழல்ல, அபூர்வம்! அது MGR-க்கு சாத்தியமானது. அவருக்கு இன்று 38-வது நினைவு நாள். அவரது ஆட்சியில் தான், அண்ணா யூனிவர்சிட்டி உருவானது. சத்துணவு திட்டம் அறிமுகமானது. திரையில் மக்கள் நாயகனாகவும், நிஜத்தில் புரட்சித் தலைவராக இன்றும் அரசியலின் மையப்புள்ளியாக தொடர்கிறார். உங்களுக்குள் இருக்கும் MGR-ன் நினைவை கமெண்ட்ல சொல்லுங்க.
News December 24, 2025
அரசு ஊழியர்களுக்கு Good News: அன்பில் மகேஸ்

ஜாக்டோ-ஜியோ சார்பில் ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பேச்சுவார்த்தைக்கு பின்னரும் போராட்டம் நடத்துவதில் அரசு ஊழியர்கள் உறுதியாக உள்ளதாக அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். மத்திய அரசு TN-க்கான நிதியை கொடுப்பதில்லை என்பதை அவர்களிடம் தெரிவித்ததாகவும், எனினும் ஜன.6-க்குள் அவர்களுக்கான நல்ல செய்தியை CM அறிவிப்பார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


