News April 16, 2025

EX அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு சிக்கல்?

image

ஆவினில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கில் EX அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவ்வழக்கில் அவர் ஜாமினில் வெளியே வந்த நிலையில், மேல் விசாரணைக்கு கவர்னர் ஒப்புதல் தரவில்லை. சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்த ஐகோர்ட் உத்தரவுக்கும் இடைக்கால தடை விதிக்கப்பட்டது. தற்போது கவர்னரின் ஒப்புதல் கிடைத்ததால், விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

Similar News

News November 20, 2025

நீங்கள் எதை இழந்து வருகிறீர்கள்?

image

இத்தனை வருடமாக வேலைக்கு செல்லும் நீ எவ்வளவு சேமித்து வைத்துள்ளாய்? என்ற கேள்வி, நீங்கள் வேலை பார்க்க தொடங்கிய அடுத்த சில ஆண்டுகளில் கேட்கும் ஒன்றாகவே இருக்கும். பணத்தை சேர்க்க முடியாததற்கு நம்மில் பல காரணங்கள் இருக்கலாம். அதேபோல், வருமானத்தை நோக்கி பயணிக்கும் நேரத்தில் உறவுகள், நண்பர்கள், சுப நிகழ்வுகள், திருவிழாக்கள் என பலவற்றை இழக்கிறோம். உங்கள் வாழ்க்கை ஓட்டத்தில் நீங்கள் இழந்தது என்ன?

News November 20, 2025

BREAKING: திமுகவுடன் கூட்டணி.. உறுதியாக அறிவித்தார்

image

திமுக – காங்., கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக அண்மைக்காலமாக செய்தி வெளியாகி வருகிறது. மேலும், தவெக- காங்., இடையே பேச்சு நடப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்தியா கூட்டணியை யாராலும் பிரிக்க முடியாது என செல்வப் பெருந்தகை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், கூட்டணி தொடர்பான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News November 20, 2025

கவர்னரை கருணாநிதி பதிலால் சாடிய கனிமொழி

image

மசோதாக்கள் தொடர்பான வழக்கில் குறிப்பிட்ட காலத்திற்குள் கவர்னர் முடிவெடுக்க வேண்டும் என SC கூறியது. இந்நிலையில், உலகத்தில் கஷ்டமில்லாத தொழில் எது? என்று கேட்டபோது, கவர்னர் வேலை பார்ப்பது என்று முன்னாள் CM கருணாநிதி கூறியதாக கனிமொழி மேற்கோள் காட்டியுள்ளார். இனியாவது அரசமைப்புக்கு உட்பட்டு கவர்னர், தனது பணியை செவ்வனே செய்வார் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!