News April 16, 2025
EX அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு சிக்கல்?

ஆவினில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கில் EX அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவ்வழக்கில் அவர் ஜாமினில் வெளியே வந்த நிலையில், மேல் விசாரணைக்கு கவர்னர் ஒப்புதல் தரவில்லை. சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்த ஐகோர்ட் உத்தரவுக்கும் இடைக்கால தடை விதிக்கப்பட்டது. தற்போது கவர்னரின் ஒப்புதல் கிடைத்ததால், விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
Similar News
News December 12, 2025
செங்கல்பட்டு பகுதியில் மின்தடை அறிவிப்பு

செங்கல்பட்டு மாவட்டம், திருநீர்மலை பிரதான சாலை, மஹாநகர், டெம்பிள் வேவ் குன்றத்தூர், காவலர் குடியிருப்பு, சரண்யாநகர், ஏஆர்.எடைமேடை, ஷர்மாநகர், மேத்தாநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும். மின்வாரிய பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த உடன் மின்வினியோகம் கொடுக்கப்படும்.
News December 12, 2025
தி.குன்றத்தில் இருப்பது தீபத்தூண் அல்ல: தமிழக அரசு

தி.குன்றம் வழக்கு இன்று மீண்டும் <<18541875>>மதுரை HC<<>> அமர்வில் நடைபெற்று வருகிறது. இதில், மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் அல்ல என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆகம விதிகளுக்கு எதிராக கோயில் நிர்வாகம் செயல்பட முடியாது என்ற அரசு தரப்பு, தர்கா அருகே தீபம் ஏற்றுவது தேவையில்லாத பிரச்னையை உருவாக்கக்கூடும் என்றும் வாதிட்டது. இதனையடுத்து, இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று HC தெரிவித்துள்ளது.
News December 12, 2025
BREAKING: தங்கம் விலை தடாலடியாக மாறியது

தங்கம் விலை இன்று ஒரேநாளில் ₹2,560 அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதாவது, ஆபரணத் தங்கத்தின் விலை காலையில் சவரனுக்கு ₹1,600 அதிகரித்த நிலையில், பிற்பகலில் மேலும் ₹960 உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹12,370-க்கும், ஒரு சவரன் ₹98,960-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை தொடர் உச்சத்தில் இருப்பது நடுத்தர மக்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


