News March 18, 2025
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவு?

தமிழகத்தில் 58,000 அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 1.2 கோடி மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இந்தப் பள்ளிகளில் மார்ச் 1ம் தேதி தொடங்கிய மாணவர் சேர்க்கையில், 17ம் தேதி வரையில் 1.28 லட்சம் மாணவ, மாணவியர் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை கூறியுள்ளது. எனினும், கடந்த ஆண்டில் இதே காலக்கட்டத்தில், 1.50 லட்சம் மாணவர்கள் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 18, 2025
ஆல் டைம் சிறந்த IPL அணியை தேர்வு செய்த ஷஷாங்க் சிங்

பஞ்சாப் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ஷஷாங்க் சிங் தன்னுடைய ஆல் டைம் ஐபிஎல் லெவனை தேர்வு செய்துள்ளார். அந்த அணியில் 9 இந்திய வீரர்களும், 2 வெளிநாட்டு வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். தொடக்க வீரர்களாக சச்சின் மற்றும் ரோஹித் ஷர்மாவின் பெயரை அவர் குறிப்பிட்டுள்ளார். கோலி, ரெய்னா, டிவில்லியர்ஸ், தோனி, பாண்ட்யா, சாஹல், சந்தீப் சர்மா, பும்ரா, மலிங்கா உள்ளிட்டோர் அந்த அணியில் இடம் பெற்றுள்ளனர்.
News March 18, 2025
ரயில் ரத்தானால் டிக்கெட் கட்டணம் என்னவாகும்?

விபத்துகள், வெள்ளம், பந்த் உள்ளிட்டவற்றால் ரயில் ரத்து செய்யப்படுமாயின், ஏற்கெனவே டிக்கெட் எடுத்தோருக்கு அக்கட்டணத்தை ரயில்வே திருப்பித் தரும். கவுன்ட்டர்களில் டிக்கெட் எடுத்திருக்கும்பட்சத்தில், டிக்கெட்டை 3 நாட்களுக்குள் எந்த கவுன்ட்டர்களிலும் திருப்பி அளிக்கலாம். முழு பணமும் திருப்பித் தரப்படும். ஆன்லைனில் டிக்கெட் எடுத்திருந்தால், அது தானாகவே ரத்தாகி பணம் வரவு வைக்கப்படும்.
News March 18, 2025
தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நீக்கம்

தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக இருந்த தர்மசெல்வன், அண்மையில் ஆட்சியர், எஸ்பியை மாற்றி விடுவேன் என <<15605340>>பேசியது<<>> சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அப்பதவியில் இருந்து தர்மசெல்வன் நீக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும், தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக மணி எம்பி நியமனம் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.