News July 28, 2024
மக்களிடையே திமுக பிளவை ஏற்படுத்துகிறதா?

சிறந்த கடல் வளங்களைக் கொண்ட தமிழகத்திற்கு, ஆழ்கடல் இயக்கத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியை மாநில அரசு பயன்படுத்தப்படவில்லை என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் குற்றஞ்சாட்டியுள்ளார். . பட்ஜெட்டில் தமிழகத்துக்கு உரிய பங்கு அளிக்கப்படுகிறதெனக் குறிப்பிட்ட அவர், மக்களிடையே பிரதேச அடிப்படையில் பிளவை உருவாக்கும் வகையில், திமுக அரசு பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதாக விமர்சித்துள்ளார்.
Similar News
News July 4, 2025
அஜித் மரண வழக்கு: நீதிபதி தீவிர விசாரணை

அஜித் மரண வழக்கில் மதுரை நீதிபதி 3 நாட்களில் 17 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளார். இந்த வழக்கை விசாரிக்க நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. அதன்படி அஜித்தின் தாயார், உறவினர்கள், போலீஸார், கோயில் பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுநர், அறநிலையத்துறை அதிகாரி உள்ளிட்ட பலரிடம் நீதிபதி விசாரணை நடத்தியுள்ளார். சம்பவத்தை அறிந்தவர் நேரில் சாட்சியளிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
News July 4, 2025
கோபத்தில் காதலி செய்த காரியம்… கொடூரம்!

உ.பி.யில் காதலி அழைத்ததன் பேரில் விகாஷ் என்பவர் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். இருவரும் இரவு முழுவதும் தனிமையில் இருந்துள்ளனர். காலை இருவருக்குமிடையே மோதல் ஏற்பட, ஆத்திரத்தில் அந்த பெண் பிளேடால் அவரின் ஆண் உறுப்பை கிழித்துள்ளார். ரத்தம் சொட்ட சொட்ட விகாஷ் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இதுகுறித்து போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்படவில்லை. ஆனால் விகாஷின் தாயார் மூலம் தகவல் வெளியே வந்துள்ளது.
News July 4, 2025
ஆப்பிரிக்க கால்பந்து ஜாம்பவான் காலமானார்

ஆப்பிரிக்க கால்பந்து ஜாம்பவான்களில் ஒருவரான பீட்டர் ரூஃபாய் (61) உடல்நலக் குறைவால் காலமானார். உலகின் சிறந்த கால்பந்து அணிகளில் ஒன்றாக நைஜீரியா அணியை உருவாக்கிய இவர், அதன் கேப்டனாகவும், சிறந்த கோல் கீப்பராகவும் செயல்பட்டார். 17 ஆண்டுகள் நாட்டுக்காக விளையாடிய இவர், ஆப்பிரிக்க கோப்பையை நைஜீரியா வெல்ல காரணமாக இருந்தார். இவர் தலைமையில் தான், அந்த அணி முதன் முதலாக உலகக் கோப்பைக்கும் தகுதி பெற்றது.