News April 7, 2025

AI வரமா? சாபமா? 2030ல் நடக்கப் போகும் விபரீதம்!

image

தொழில்நுட்பங்கள் எந்த அளவுக்கு மனித சமூகத்துக்கு உதவியாக இருக்கிறதோ, அதே அளவுக்கு ஆபத்தையும் கொண்டு வருகின்றன. அப்படி ஒரு ஆபத்து AI வளர்ச்சியால் வரும் என்கிறார் அதனை ஆய்வு செய்து வரும் டீப்மைண்ட் நிறுவன சிஇஓ டெமிஸ் ஹாஸாபிஸ். வரும் 2030க்குள் மனிதர்களை போல AIக்கு அறிவுத்திறன் கிடைத்துவிடும் என இவர் கணித்துள்ளார். அதே நேரம், இது மனிதாபிமானத்தை முற்றிலும் அழித்துவிடும் எனவும் எச்சரித்துள்ளார்.

Similar News

News September 17, 2025

GALLERY: PM மோடியின் வாழ்க்கை போட்டோஸாக!

image

PM மோடிக்கு இன்று 75-வது பிறந்தநாள். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வரும் சூழலில், உலகம் அறிந்த பிரதமர் மோடியின் சிறு பாலகனாக பள்ளியில் படித்தது முதல், அவரின் சிறு அசைவும் இந்தியாவின் தலைப்புச் செய்தியாக மாறும் PM-ஆக உயர்ந்தது வரை பலரும் பார்த்திராத சில அறிய போட்டோஸை மேலே கொடுத்துள்ளோம். அவற்றை Swipe செய்து பார்க்கவும். அவருக்கான உங்களின் பிறந்தநாள் வாழ்த்தை Likes-ஆக கொடுங்கள்.

News September 17, 2025

பனிச்சறுக்கில் தமிழக வீராங்கனை சாதனை

image

சிலியில் நடைபெற்ற ‘கிராஸ் கன்ட்ரி’ பனிச்சறுக்கு போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பவானி வெண்கலம் வென்றுள்ளார். 5 கி.மீ. பிரிவில் பங்கேற்ற அவர் பந்தய தூரத்தை 21 நிமிடத்தில் கடந்து மூன்றாம் இடம் பிடித்தார். இதன்மூலம் ‘கிராஸ் கன்ட்ரி’ போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என பெருமையையும் பவானி பெற்றார். அதேபோல் 3 கி.மீ. பிரீஸ்டைல் ஸ்பிரின்ட் போட்டியிலும் பவானி வெண்கலம் வென்றார்.

News September 17, 2025

அமித்ஷாவை சந்தித்தது ஏன்? EPS விளக்கம்

image

டெல்லியில் அமித்ஷாவை சந்தித்தது தொடர்பாக, EPS தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வலியுறுத்தி அதிமுக சார்பில் கடிதம் வழங்கியதாக தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதிமுக ஒன்றிணைப்பு விவகாரம் தொடர்பாக பேசப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், பாரத ரத்னா கோரிக்கை கடிதம் வழங்கியதன் போட்டோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.

error: Content is protected !!