News April 7, 2025
AI வரமா? சாபமா? 2030ல் நடக்கப் போகும் விபரீதம்!

தொழில்நுட்பங்கள் எந்த அளவுக்கு மனித சமூகத்துக்கு உதவியாக இருக்கிறதோ, அதே அளவுக்கு ஆபத்தையும் கொண்டு வருகின்றன. அப்படி ஒரு ஆபத்து AI வளர்ச்சியால் வரும் என்கிறார் அதனை ஆய்வு செய்து வரும் டீப்மைண்ட் நிறுவன சிஇஓ டெமிஸ் ஹாஸாபிஸ். வரும் 2030க்குள் மனிதர்களை போல AIக்கு அறிவுத்திறன் கிடைத்துவிடும் என இவர் கணித்துள்ளார். அதே நேரம், இது மனிதாபிமானத்தை முற்றிலும் அழித்துவிடும் எனவும் எச்சரித்துள்ளார்.
Similar News
News January 1, 2026
மக்களை ஆளக்கூடிய திறன் கொண்டவர் EPS: செல்லூர் ராஜு

TN-ல் சினிமா கவர்ச்சி எப்போதும் உண்டு என்பதால் விஜய்க்கு கூட்டம் கூடுவது சகஜம்தான் என செல்லூர் ராஜு கூறியுள்ளார். அமிதாப் பச்சன் வந்தால் கூடத்தான் கூட்டம் கூடும் என்ற அவர், விஜய்க்கு கூடும் கூட்டமெல்லாம் மேட்டர் இல்லை, யார் நம்மை ஆளப்போகிறார்கள் என்று மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்றார். மேலும், மக்களை ஆளக்கூடிய நிர்வாகத் திறமை கொண்டவர் என்பதை EPS நிரூபித்திருக்கிறார் எனவும் தெரிவித்துள்ளார்.
News January 1, 2026
ரூ.3,000 அறிவித்தார் முதல்வர்.. யார் யாருக்கு கிடைக்கும்?

அரசு ஊழியர்களுக்கு <<18730960>>பொங்கல் போனஸ் <<>>அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, C&D பிரிவு பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு ₹3,000 என்ற உச்சவரம்பிற்கு மிகை ஊதியம் வழங்கப்படவுள்ளது. மேலும், தொகுப்பூதியம், சிறப்புகால முறை ஊதியம் பெறும் பணியாளர்கள் மற்றும் 2024 – 25-ம் நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாள்கள் (அ) அதற்கு மேலாக பணிபுரிந்த முழு, பகுதி நேரப் பணியாளர்களுக்கு ₹1,000 சிறப்பு மிகை ஊதியம்(போனஸ்) வழங்கப்படவுள்ளது.
News January 1, 2026
நியூ இயரில் இந்த தவறை பண்ணாதீங்க!

புது வருடம் பிறந்துவிட்டது. இந்த எண்ணம் மனதில் இருந்தாலும், தேதி எழுதும் போது ஏனோ 1/1/25 என சட்டென எழுதி விடுவோம். ஆபீஸ் File-ல் தொடங்கி, ஸ்கூல் நோட்புக் வரை அனைத்திலும் தவறாக எழுதிவிட்டு, அடுத்த கணமே ‘அய்யயோ தப்பாயிடுச்சே’ என அடிச்சி திருத்துவோம். நாள்கள் மாறிவிட்டதை சரியாக கவனித்தாலும், நமது கைகள் ஏனோ இந்த விஷயத்தில் தவறிழைத்துவிடுகிறது. நன்றாக நினைவில் வெச்சிக்கோங்க.. இனி வரப்போவது 2026!


