News April 7, 2025

AI வரமா? சாபமா? 2030ல் நடக்கப் போகும் விபரீதம்!

image

தொழில்நுட்பங்கள் எந்த அளவுக்கு மனித சமூகத்துக்கு உதவியாக இருக்கிறதோ, அதே அளவுக்கு ஆபத்தையும் கொண்டு வருகின்றன. அப்படி ஒரு ஆபத்து AI வளர்ச்சியால் வரும் என்கிறார் அதனை ஆய்வு செய்து வரும் டீப்மைண்ட் நிறுவன சிஇஓ டெமிஸ் ஹாஸாபிஸ். வரும் 2030க்குள் மனிதர்களை போல AIக்கு அறிவுத்திறன் கிடைத்துவிடும் என இவர் கணித்துள்ளார். அதே நேரம், இது மனிதாபிமானத்தை முற்றிலும் அழித்துவிடும் எனவும் எச்சரித்துள்ளார்.

Similar News

News December 6, 2025

கோவில்பட்டியில் அரசன் பட பூஜை?

image

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள ‘அரசன்’ படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது. இந்நிலையில், டிச.8-ல் கோவில்பட்டியில் பட பூஜை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, பிரமாண்டமான முறையில் வடசென்னை செட் போடப்பட்டுள்ளதாம். மேலும், இப்படத்தில் விஜய் சேதுபதியும் இணைந்துள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. வெற்றிமாறன் – சிம்பு காம்போ வெற்றி பெறுமா?

News December 6, 2025

படத்திற்கு சான்றளிக்கும் குழுக்களில் 50% பெண்கள்!

image

பாலின சமத்துவத்தை வலுப்படுத்தும் நோக்கில், சென்சார் போர்டில் தணிக்கை மற்றும் மறுஆய்வு குழுக்களில், 50% பெண்கள் இடம்பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் (CBFC) இதை உறுதி செய்துள்ளதாக தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். மாநிலங்களவையில் பதிலளித்த அவர், படங்களுக்கு சான்றளிக்கும் பணிகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

News December 6, 2025

திமுகவுக்கு 90, தவெகவுக்கு 70.. உளவுத்துறை SURVEY

image

கரூர் துயருக்கு பிறகு, மத்திய உளவுத்துறை எடுத்த சர்வேயில், தவெகவுக்கு 70 இடங்களில் வெற்றி வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், திமுக கூட்டணி 90, அதிமுக – பாஜக கூட்டணி 35, நாதக 1 இடங்களில் முன்னிலை வகிப்பதாக சொல்லப்படுகிறது. மீதமுள்ள 38 தொகுதிகளில் இழுபறி நீடிக்கிறது. குறிப்பாக, வட, தென் மாவட்டங்களில் தவெகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக சர்வே தெரிவிக்கிறதாம். உங்கள் கருத்து என்ன?

error: Content is protected !!