News April 7, 2025
AI வரமா? சாபமா? 2030ல் நடக்கப் போகும் விபரீதம்!

தொழில்நுட்பங்கள் எந்த அளவுக்கு மனித சமூகத்துக்கு உதவியாக இருக்கிறதோ, அதே அளவுக்கு ஆபத்தையும் கொண்டு வருகின்றன. அப்படி ஒரு ஆபத்து AI வளர்ச்சியால் வரும் என்கிறார் அதனை ஆய்வு செய்து வரும் டீப்மைண்ட் நிறுவன சிஇஓ டெமிஸ் ஹாஸாபிஸ். வரும் 2030க்குள் மனிதர்களை போல AIக்கு அறிவுத்திறன் கிடைத்துவிடும் என இவர் கணித்துள்ளார். அதே நேரம், இது மனிதாபிமானத்தை முற்றிலும் அழித்துவிடும் எனவும் எச்சரித்துள்ளார்.
Similar News
News December 30, 2025
மீண்டும் அமலாகிறதா பழைய ஓய்வூதிய திட்டம்?

பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என்ற வாக்குறுதியை திமுக தற்போது வரை நிறைவேற்றவில்லை என்பதால் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே, இதுதொடர்பாக ஆய்வறிக்கை அளிப்பதற்காக ககன் தீப் சிங் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில், இக்குழு இன்று ஓய்வூதியத் திட்ட அறிக்கையை CM ஸ்டாலினிடம் சமர்ப்பித்துள்ளது. எனவே, மகிழ்ச்சியான அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது.
News December 30, 2025
2025 ஆட்டம் போட வைத்த பாடல்கள்

2025-ம் ஆண்டு வெளியான படங்களில் ஏராளமான பாடல்கள் ஹிட் அடித்தன. அதில் சில பாடல்கள் நம்மை வைப் செய்ய வைத்து, ஆட்டம் போட வைத்தன. அப்படி, அனைவராலும் ஆடிப்பாடி கொண்டாடப்பட்ட பாடல்களை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், நீங்க எந்த பாட்டுக்கு வைப் ஆகி, ஆட்டம் போட்டீங்க. கமெண்ட்ல சொல்லுங்க. SHARE பண்ணுங்க.
News December 30, 2025
பொங்கல் பரிசு பணம்.. மகிழ்ச்சி செய்தி வெளியானது

பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. வேட்டி, சேலைகளை ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணிகள் 85% நிறைவடைந்துள்ளன. கரும்பு கொள்முதல் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பு வழங்குவது குறித்த அறிவிப்பை CM ஸ்டாலின் இன்று (அ) நாளை வெளியிடவிருப்பதாக நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது.


