News April 7, 2025
AI வரமா? சாபமா? 2030ல் நடக்கப் போகும் விபரீதம்!

தொழில்நுட்பங்கள் எந்த அளவுக்கு மனித சமூகத்துக்கு உதவியாக இருக்கிறதோ, அதே அளவுக்கு ஆபத்தையும் கொண்டு வருகின்றன. அப்படி ஒரு ஆபத்து AI வளர்ச்சியால் வரும் என்கிறார் அதனை ஆய்வு செய்து வரும் டீப்மைண்ட் நிறுவன சிஇஓ டெமிஸ் ஹாஸாபிஸ். வரும் 2030க்குள் மனிதர்களை போல AIக்கு அறிவுத்திறன் கிடைத்துவிடும் என இவர் கணித்துள்ளார். அதே நேரம், இது மனிதாபிமானத்தை முற்றிலும் அழித்துவிடும் எனவும் எச்சரித்துள்ளார்.
Similar News
News April 11, 2025
23 மாவட்டங்களில் இரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இரவு 1 மணி வரை இடி – மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்: கோவை, திருப்பூர், கரூர், தி.மலை, வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, அரியலூர், பெரம்பலூர், தென்காசி.
இரவு 1 மணி வரை இடி- மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்: திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, கடலூர், மயிலாடுதுறை, புதுச்சேரி.
News April 11, 2025
‘கவுரவ்’ கிளைட் பாம்: இந்திய ராணுவத்துக்கு புதிய வரவு

நீண்ட தூரம் சென்று தாக்கும் கிளைடு வெடிகுண்டு ‘கௌரவ்’-ஐ இந்திய ராணுவம் வெற்றிகரமாக சோதித்துள்ளது. கடந்த ஏப்.8 – 10ஆம் தேதிகளில் நடத்தப்பட்ட சோதனையில், போர் விமானத்தில் இருந்து வீசப்பட்ட வெடிகுண்டு, 100 கி.மீ தொலைவில் இருந்த இலக்குகளை துல்லியமாக தாக்கியுள்ளது. 1000 கிலோ எடை கொண்ட இந்த கௌரவ் வெடிகுண்டு, முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது.
News April 11, 2025
10ம் வகுப்பு தமிழ் விடைத்தாள்: தமிழாசிரியரே திருத்த உத்தரவு

10ம் வகுப்புத் தேர்வு தமிழ் விடைத்தாளை தமிழ் வழியில் போதிக்கும் ஆசிரியர் மட்டுமே திருத்த வேண்டுமென்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், அரசு தேர்வுகள் இயக்ககம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், தமிழ் விடைத்தாளை தமிழாசிரியரும், ஆங்கில விடைத்தாளை ஆங்கிலத்தில் போதிக்கும் ஆசிரியருமே திருத்தும் விதியை பின்பற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது.