News April 7, 2025
AI வரமா? சாபமா? 2030ல் நடக்கப் போகும் விபரீதம்!

தொழில்நுட்பங்கள் எந்த அளவுக்கு மனித சமூகத்துக்கு உதவியாக இருக்கிறதோ, அதே அளவுக்கு ஆபத்தையும் கொண்டு வருகின்றன. அப்படி ஒரு ஆபத்து AI வளர்ச்சியால் வரும் என்கிறார் அதனை ஆய்வு செய்து வரும் டீப்மைண்ட் நிறுவன சிஇஓ டெமிஸ் ஹாஸாபிஸ். வரும் 2030க்குள் மனிதர்களை போல AIக்கு அறிவுத்திறன் கிடைத்துவிடும் என இவர் கணித்துள்ளார். அதே நேரம், இது மனிதாபிமானத்தை முற்றிலும் அழித்துவிடும் எனவும் எச்சரித்துள்ளார்.
Similar News
News December 25, 2025
அன்புமணி ஒரு வழிப்போக்கன்: ராமதாஸ்

டிச.29-ல் சேலத்தில் நடைபெறவுள்ள ராமதாஸால் அறிவிக்கப்பட்ட பாமக பொதுக்குழுவுக்கு அனுமதியில்லை என அன்புமணி தரப்பு கூறியிருந்தது. இந்நிலையில், அன்புமணியை கட்சியில் இருந்தே நீக்கிவிட்டதால், அவர் ஒரு வழிப்போக்கன் சொல்வது போல சொல்லிவிட்டு போகட்டும் என ராமதாஸ் காட்டமாக தெரிவித்துள்ளார். 99% பாமகவினர் தன் பக்கமே உள்ளதால் பொய்யும் புரட்டும் எடுபடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
News December 25, 2025
டிசம்பர் 25: வரலாற்றில் இன்று

*கிறிஸ்துமஸ்
*தேசிய நல்லாட்சி நாள் (Good Governance Day)
*1796 – வேலுநாச்சியார் நினைவுநாள்.
*1924 – அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்தநாள்.
*1968 – கீழ்வெண்மணி படுகொலை.
*1972 – ராஜாஜி நினைவுநாள்.
*1977 – சார்லி சாப்ளின் நினைவுநாள்.
News December 25, 2025
சிவாஜிக்கு பதிலடி கொடுத்த நிதி அகர்வால்

சமீபத்தில் நிதி அகர்வால், ரசிகர்களின் கட்டுக்கடங்காத கூட்டத்தில் சிக்கித் தவித்த வீடியோ வைரலானது. இதுதொடர்பாக போலீஸார் தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, நடிகைகளின் ஆடை பற்றி நடிகர் <<18655275>>சிவாஜி<<>> பேசியது சர்ச்சையானது. இதனையடுத்து அவர் மன்னிப்பும் கோரியிருந்தார். இந்நிலையில், ‘Blaming the victim is called manipulation’ என நிதி அகர்வால் பதிலடி கொடுத்துள்ளார்.


