News April 7, 2025

AI வரமா? சாபமா? 2030ல் நடக்கப் போகும் விபரீதம்!

image

தொழில்நுட்பங்கள் எந்த அளவுக்கு மனித சமூகத்துக்கு உதவியாக இருக்கிறதோ, அதே அளவுக்கு ஆபத்தையும் கொண்டு வருகின்றன. அப்படி ஒரு ஆபத்து AI வளர்ச்சியால் வரும் என்கிறார் அதனை ஆய்வு செய்து வரும் டீப்மைண்ட் நிறுவன சிஇஓ டெமிஸ் ஹாஸாபிஸ். வரும் 2030க்குள் மனிதர்களை போல AIக்கு அறிவுத்திறன் கிடைத்துவிடும் என இவர் கணித்துள்ளார். அதே நேரம், இது மனிதாபிமானத்தை முற்றிலும் அழித்துவிடும் எனவும் எச்சரித்துள்ளார்.

Similar News

News December 9, 2025

இனி போனில் கிரிக்கெட் போட்டிகளை பார்க்க முடியாதா?

image

கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பு செய்ய ICC-யிடம் போட்ட டீலில் இருந்து Hotstar பின்வாங்க முடிவு செய்துள்ளது. 2024-ல் $3 பில்லியனுக்கு ஹாட்ஸ்டார் போட்ட இந்த டீல் 2027 தான் முடிவடைகிறது. ஆனால் கடுமையான நிதியிழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி முன்னதாகவே ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற அந்நிறுவனம் நினைக்கிறதாம். 2026 WC நெருங்குவதால், சோனி, அமேசான், நெட்பிளிக்ஸிடம் ICC பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.

News December 9, 2025

BREAKING: கனமழை வெளுத்து வாங்கும்.. வந்தது அலர்ட்

image

2 நாள்களாக கனமழை இல்லாத நிலையில், இன்று நாகை மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என்று IMD எச்சரித்துள்ளது. மேலும், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது. அதோடு, தென் தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, குமரிக்கடலில் மணிக்கு 35-45 கிமீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.

News December 9, 2025

விற்பனையில் தள்ளாடுகிறதா ஜனநாயகன்?

image

விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ வியாபாரம் சரிவர போகவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. ‘கோட்’ படம் ₹100 கோடிக்கு விற்பனையான நிலையில், இப்படத்தை ₹120 கோடிக்கு விற்க படக்குழு திட்டமிட்டிருந்ததாம். ஆனால், தமிழக விநியோகஸ்தர்கள், நீண்ட இழுபறிக்கு பின்னரே வாங்கினார்களாம். காரணம், விஜய் அரசியலில் இறங்கியுள்ளதால், பிற கட்சியினர் படம் பார்க்க வருவார்களா என்ற தயக்கம் உள்ளதாம்.

error: Content is protected !!