News April 7, 2025
AI வரமா? சாபமா? 2030ல் நடக்கப் போகும் விபரீதம்!

தொழில்நுட்பங்கள் எந்த அளவுக்கு மனித சமூகத்துக்கு உதவியாக இருக்கிறதோ, அதே அளவுக்கு ஆபத்தையும் கொண்டு வருகின்றன. அப்படி ஒரு ஆபத்து AI வளர்ச்சியால் வரும் என்கிறார் அதனை ஆய்வு செய்து வரும் டீப்மைண்ட் நிறுவன சிஇஓ டெமிஸ் ஹாஸாபிஸ். வரும் 2030க்குள் மனிதர்களை போல AIக்கு அறிவுத்திறன் கிடைத்துவிடும் என இவர் கணித்துள்ளார். அதே நேரம், இது மனிதாபிமானத்தை முற்றிலும் அழித்துவிடும் எனவும் எச்சரித்துள்ளார்.
Similar News
News November 19, 2025
RB உதயகுமாருடன் கூட்டணி பற்றி பேசவில்லை: பிரேமலதா

அதிமுக Ex அமைச்சர் RB உதயகுமாருடன் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை என பிரேமலதா கூறியுள்ளார். இது நட்புரீதியான சந்திப்பு மட்டுமே எனவும், அவரது தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். முன்னதாக, அதிமுக கூட்டணியில் இணைய தேமுதிக, பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டது. குறிப்பாக, தேமுதிக மா.செ.,க்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு சந்தித்ததால் அரசியலில் கூடுதல் கவனத்தை பெற்றிருந்தது.
News November 19, 2025
ராகுலுடன் விஜய் பேசியது உண்மை: கார்த்தி சிதம்பரம்

ராகுலுடன் விஜய் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளியான தகவலுக்கு தவெக தரப்பில் மறுக்கப்பட்டது. இந்நிலையில், விஜய் – ராகுல் பேசியது உண்மைதான் என்று காங்., MP கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். விஜய்க்கு கணிசமான வாக்குகள் கிடைக்கும். ஆனால், வாக்குகள் வெற்றியாக மாறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். சட்டமன்ற தேர்தலில் விஜய் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்றும் கூறியுள்ளார்.
News November 19, 2025
ஆதார் கார்டில் வரும் முக்கிய மாற்றம்

ஆதார் கார்டில் உள்ள தகவல்கள் தவறான வழியில் பயன்படுத்தப்படுவதை தடுக்க UIDAI முக்கிய மாற்றம் ஒன்றை கொண்டு வர உள்ளது. அதன்படி ஆதாரில் உள்ள மற்ற தகவல்களை நீக்கிவிட்டு வெறும் போட்டோ மற்றும் QR மட்டும் இடம்பெறும் வகையில் மாற்றப்பட உள்ளதாக UIDAI CEO புவனேஷ் குமார் தெரிவித்துள்ளார். மேலும் ஆஃப்லைன் சரிபார்ப்பை ஒழுங்குப்படுத்தும் புதிய விதியும் டிசம்பர் மாத்தில் கொண்டுவரப்படும் என்றும் கூறியுள்ளார்


