News April 7, 2025
AI வரமா? சாபமா? 2030ல் நடக்கப் போகும் விபரீதம்!

தொழில்நுட்பங்கள் எந்த அளவுக்கு மனித சமூகத்துக்கு உதவியாக இருக்கிறதோ, அதே அளவுக்கு ஆபத்தையும் கொண்டு வருகின்றன. அப்படி ஒரு ஆபத்து AI வளர்ச்சியால் வரும் என்கிறார் அதனை ஆய்வு செய்து வரும் டீப்மைண்ட் நிறுவன சிஇஓ டெமிஸ் ஹாஸாபிஸ். வரும் 2030க்குள் மனிதர்களை போல AIக்கு அறிவுத்திறன் கிடைத்துவிடும் என இவர் கணித்துள்ளார். அதே நேரம், இது மனிதாபிமானத்தை முற்றிலும் அழித்துவிடும் எனவும் எச்சரித்துள்ளார்.
Similar News
News November 25, 2025
2-வது டெஸ்ட்: இந்தியாவுக்கு 548 ரன்கள் டார்கெட்!

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில், தென்னாப்பிரிக்க அணி, 2-வது இன்னிங்ஸில் 260/5 ரன்களை குவித்து டிக்ளேர் செய்துள்ளது. இதன்மூலம், இந்தியாவுக்கு 548 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்னும் 1 நாள் ஆட்டமே எஞ்சி இருக்கிறது. முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் சொதப்பிய இந்திய அணி, 2-வது இன்னிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துமா?
News November 25, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. வந்தது HAPPY NEWS

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் அரசு இதுவரை ₹30,000 கோடியை செலவிட்டுள்ளது. 2023 செப்.15 முதல் தற்போது வரை, பயனாளிகள் தலா ₹26,000 பெற்றுள்ளனர். புதிதாக 28 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், அவர்களில் <<18375564>>தகுதியானோரின் பட்டியலை தயார் செய்யும் பணிகள்<<>> முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. விடுபட்ட அனைவருக்கும் டிச.15 முதல் ₹1,000 டெபாசிட் செய்யப்படும் என DCM உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
News November 25, 2025
தங்க நகை திருட்டு.. இழப்பீடு வழங்க ஐகோர்ட் உத்தரவு

திருடு போன நகையை போலீசார் கண்டுபிடிக்க முடியவில்லை எனில், பாதிக்கப்பட்ட நபருக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதாவது, நகை திருட்டு வழக்கில் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை என போலீசார் வழக்கை முடித்து வைத்தால், புகார்தாரருக்கு 12 வாரங்களுக்குள் அந்த நகையின் மதிப்பில் 30% தொகையை வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT


