News April 7, 2025
AI வரமா? சாபமா? 2030ல் நடக்கப் போகும் விபரீதம்!

தொழில்நுட்பங்கள் எந்த அளவுக்கு மனித சமூகத்துக்கு உதவியாக இருக்கிறதோ, அதே அளவுக்கு ஆபத்தையும் கொண்டு வருகின்றன. அப்படி ஒரு ஆபத்து AI வளர்ச்சியால் வரும் என்கிறார் அதனை ஆய்வு செய்து வரும் டீப்மைண்ட் நிறுவன சிஇஓ டெமிஸ் ஹாஸாபிஸ். வரும் 2030க்குள் மனிதர்களை போல AIக்கு அறிவுத்திறன் கிடைத்துவிடும் என இவர் கணித்துள்ளார். அதே நேரம், இது மனிதாபிமானத்தை முற்றிலும் அழித்துவிடும் எனவும் எச்சரித்துள்ளார்.
Similar News
News December 13, 2025
அதிக சம்பளம் வாங்கிய ஹீரோக்கள்

2025-ம் ஆண்டு அஜித், ரஜினி, கமல், சூர்யா, தனுஷ், விக்ரம், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகின. இந்தாண்டு, ஒருபடத்துக்கு அவர்கள் எவ்வளவு சம்பளம் வாங்கினார்கள் என்று தெரியுமா? இதுதொடர்பான தகவலை மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 13, 2025
G.R.சுவாமிநாதனுக்கு ஆதரவாக களமிறங்கிய EX நீதிபதிகள்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி G.R.சுவாமிநாதனுக்கு ஆதரவாக, EX நீதிபதிகள் 56 பேர் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், INDIA கூட்டணி பதவிநீக்க நோட்டீஸ் கொடுத்தது கண்டிக்கத்தக்கது. இது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் சித்தாந்த, அரசியல் எதிர்பார்ப்புகளுக்கு இணங்காத நீதிபதிகளை அச்சுறுத்தும் முயற்சி. பதவிநீக்க நோட்டீஸை அரசியல் பழிவாங்கும் கருவியாக பயன்படுத்த கூடாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
News December 13, 2025
ரேஷன் கார்டு பெயர் மாற்றம்.. இன்று சிறப்பு முகாம்!

ரேஷன் கார்டுகளில் பெயர் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட சேவைகளை ஒரே நாளில் வழங்கும் வகையில் இன்று சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. சென்னையில் மண்டல அலுவலகங்களிலும், பிற மாவட்டங்களில் தாசில்தார் அலுவலகங்களிலும் காலை 10 – பிற்பகல் 1 மணி வரை முகாம்கள் நடைபெறும். ரேசன் கடைகளில் பொருள் வாங்க நேரில் வர இயலாத மூத்த குடிமக்கள், இன்றைய சிறப்பு முகாம்களில் அங்கீகாரச் சான்று பெற்று கொள்ளலாம்.


