News April 7, 2025
AI வரமா? சாபமா? 2030ல் நடக்கப் போகும் விபரீதம்!

தொழில்நுட்பங்கள் எந்த அளவுக்கு மனித சமூகத்துக்கு உதவியாக இருக்கிறதோ, அதே அளவுக்கு ஆபத்தையும் கொண்டு வருகின்றன. அப்படி ஒரு ஆபத்து AI வளர்ச்சியால் வரும் என்கிறார் அதனை ஆய்வு செய்து வரும் டீப்மைண்ட் நிறுவன சிஇஓ டெமிஸ் ஹாஸாபிஸ். வரும் 2030க்குள் மனிதர்களை போல AIக்கு அறிவுத்திறன் கிடைத்துவிடும் என இவர் கணித்துள்ளார். அதே நேரம், இது மனிதாபிமானத்தை முற்றிலும் அழித்துவிடும் எனவும் எச்சரித்துள்ளார்.
Similar News
News January 19, 2026
இளைய தலைமுறைக்கு வழிவிடுங்க: நிதின் கட்கரி

முக்கியப் பொறுப்புகளை இளைய தலைமுறையினா் ஏற்கும் வகையில், பழைய தலைமுறையினா் ஓய்வை அறிவித்து அவா்களுக்கு வழிவிட வேண்டும் என்று மத்திய அமைச்சா் நிதின் கட்கரி கூறினாா். நாகபுரியில் நடைபெற உள்ள தொழில் முதலீட்டு மாநாடு முன்னிட்டு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், பழைய தலைமுறையினா் படிப்படியாக பொறுப்புகளிலிருந்து விலகி, அனைத்தும் சரிவர செயல்படத் தொடங்கும்போது, ஓய்வுபெற வேண்டும் என்று கூறினார்.
News January 19, 2026
ஒற்றை காலில் நிற்பது மிகவும் நல்லது

ஒற்றைக் காலில் நிற்பதால் பல்வேறு நன்மைகள் ஏற்படுவது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. ஒற்றைக் காலில் நிற்பது ஒரு எளிய உடற்பயிற்சி போல் தோன்றினாலும், அது உடல் சமநிலை, தசை வலு, மூளை ஆரோக்கியம் மற்றும் நினைவாற்றலை மேம்படுத்துகிறது. வயதுடன் குறையும் தசை இழப்பு, கீழே விழும் ஆபத்து போன்ற அபாயங்களை இது குறைக்க உதவுகிறது. தினசரி பழக்கங்களில் இதைச் சேர்த்தால், உடலும் மூளையும் ஆரோக்கியமாக இருக்கும்.
News January 19, 2026
₹3.25 லட்சம் கோடிக்கு ரபேல் விமானங்களை வாங்க முடிவு

பிரான்ஸிடம் இருந்து ₹3.25 லட்சம் கோடிக்கு 114 ரபேல் போர் விமானங்களை வாங்கும் திட்டத்திற்கு மத்திய பாதுகாப்புத் துறை கொள்கை ரீதியான ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது இந்திய விமானப்படையில் 36 ரபேல் விமானங்கள் உள்ளன. இந்த 114 விமானங்களில் 12-18 மட்டுமே வாங்கப்பட்டு, மீதமுள்ளவை இந்தியாவிலேயே தயாரிக்கப்படும். இதற்காக பிரான்சின் ஏவியேஷன் நிறுவனம் இந்தியாவுடன் இணைந்து உற்பத்தியை தொடங்கும்.


