News October 23, 2025
அதிமுக ஆட்சியில் ₹2,000 கோடி ஒப்பந்த பணிகளில் முறைகேடு

EPS-ன் நெருங்கிய நண்பர்கள், Ex. அமைச்சர் SP.வேலுமணி தொடர்பான நிறுவனம் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. அதிமுக ஆட்சியில் ₹2,000 கோடி சாலை ஒப்பந்த பணிகளை, விதிகளை மீறி பெற்று அரசுக்கு ₹20 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ADMK ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சியில் நடந்த ஒப்பந்த முறைகேடு தொடர்பாக DVAC விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News October 23, 2025
ரயில் குறித்த போலி செய்திகள்.. இனி ஏமாற வேண்டாம்!

ரயில் ரத்தாகி விட்டது, ரயிலில் சாப்பாடு, தண்ணீர் சுத்தமாக இல்லை என பல போலியான சர்ச்சை வீடியோக்களும், கருத்துக்களும் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது. ஆனால், இனி இப்படியான போலி செய்திகளால் ஏமாற வேண்டாம். இந்திய ரயில்வே சார்பில் Fact Check தளம் தொடங்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான செய்திகள் பரவினால், அதனை @IRFactcheck என்ற பேஜில் டேக் செய்து, உண்மையை அறிந்து கொள்ளலாம். இதனை அனைவருக்கும் பகிரவும்.
News October 23, 2025
அதிகாரிகளை வறுத்தெடுத்த செல்வப்பெருந்தகை

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்ததால் ஐந்து கண் மதகில் 3 ஷட்டர்கள் வழியாக 500 கன அடி நீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் அதிகாரிகளுடன் நேற்று அங்கு, ஸ்ரீபெரும்புதுார் MLA செல்வப்பெருந்தகை ஆய்வில் ஈடுபட்டார். அப்போது மக்கள் பிரதிநிதிகளுக்கு தெரியாமல் தண்ணீரை திறந்து விட்டது ஏன் என்று அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். நீங்களே மக்கள் பிரதிநிதியாகி விட்டால் எதற்கு அரசு எனவும் கடிந்துகொண்டார்.
News October 23, 2025
5 நிமிடம் இத பண்ணுங்க.. உடல் புத்துணர்ச்சி பெறும்

வருண முத்ரா உடலில் நீர் உள்ளடக்கத்தை அதிகரிக்க உதவுகிறது. மேலும், நீரிழப்பை தடுக்கவும், தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. வலது கையின் சிறு விரலை, உள்நோக்கி மடித்து, கட்டை விரலை அத்துடன் சேர்த்து பிடித்து, மற்ற 3 விரல்களை நீட்டிப் பிடிக்கவும். கைகளை மார்புக்கு முன் வைத்து, விரல்களை அழுத்திப் பிடிக்கவும். இந்த நிலையில் ஆழமாக மூச்சை இழுத்து விடவும். இப்படி ஒரு 5 நிமிடம் செய்யுங்கள்.