News June 27, 2024
அனைத்து ரேஷன் கடைகளிலும் கண் கருவிழி சரிபார்ப்பு முறை

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் விரைவில் கண் கருவிழி சரிபார்ப்பு முறை செயல்படுத்தப்படும் என அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். மேலும், 2,92 லட்சம் ரேஷன் அட்டைகள் அச்சிடும் நிலையில் உள்ளன. மீதமுள்ளவற்றை பரிசீலித்து தகுதியுள்ள நபர்களுக்கு ரேஷன் அட்டைகள் வழங்கப்படும் எனக் கூறிய அவர், மே, ஜூன் மாத துவரம் பருப்பு, பாமாயில் முழுமையாக வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
Similar News
News October 29, 2025
பாஜக ஆளும் அசாமில் SIR நடக்காதது ஏன்? பின்னணி!

நாடு முழுவதும் நடக்கும் SIR நடவடிக்கையில் இருந்து அசாமுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது ஏன் தெரியுமா? அசாமில் ஏற்கெனவே NRC என்கிற குடியுரிமை சரிபார்ப்பு நடவடிக்கை நடந்துள்ளது. இதனால் அங்கு தற்போதைக்கு SIR நடவடிக்கை தேவை இல்லை என கருதப்படுகிறது. அத்துடன், மற்ற பகுதிகளை விட அசாமின் குடியுரிமை விதிகள் மாறுபட்டது. எனவே இதற்கு தனியாக வரையறைகளை அமைத்து, SIR நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
News October 29, 2025
இறந்தவரின் விரலை வைத்து போனை Unlock செய்யமுடியுமா?

இறந்தவரின் விரலை வைத்து அவரது ஃபோனை Unlock செய்யமுடியாது. தற்போதுள்ள போன்களின் சென்சார்களின் Liveness Detection பயன்படுத்தப்படுகிறது. அதாவது, இது ஒரு நபர் போனை Unlock செய்யும்போது, அவரது விரலில் உள்ள ஈரப்பதம், ரத்த ஓட்டம், வெப்பநிலை ஆகியவற்றை ஆராய்கிறது. இறந்தவரின் உடலில் இது இருக்காது என்பதால், அவரது ஃபோனை Unlock செய்வது சிரமம் என்கின்றனர். 1% பேருக்கு மட்டுமே தெரிந்த இத்தகவலை SHARE பண்ணுங்க.
News October 29, 2025
திமுக ஆட்சியில் எங்கும் ஊழல், எதிலும் ஊழல்: EPS

நகராட்சி நிர்வாகத்துறை <<18140241>>பணி நியமனத்தில்<<>> நடந்த ஊழல் தொடர்பாக, பொறுப்பு DGP வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என EPS வலியுறுத்தியுள்ளார். CM ஸ்டாலின் போலீஸ் கைகளை கட்டாமல் இருக்க வேண்டும் எனவும், இளைஞர்களின் அரசுப்பணி கனவை, தங்கள் கமிஷன் கொள்ளைக்காக திமுக அரசு சிதைப்பதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், இந்த திமுக ஆட்சியில் எங்கும் ஊழல் – எதிலும் ஊழல் நடந்து வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.


