News April 15, 2024
ஈரானிடம் அணுகுண்டுகள்?

ஏவுகணை, ட்ரோன் தாக்குதலுக்கு பிறகும் இஸ்ரேல் அமைதி காப்பதன் பின்னணியில், ஈரானிடம் அணுகுண்டுகள் இருக்கலாம் என்று சந்தேகிப்பதே காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் முதல்முறையாக நேரடியாக தாக்குதல் நடத்தியும், அதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்கவில்லை. இதை வைத்து ஈரானிடம் அணுகுண்டுகள் இருக்கலாம் என்று இஸ்ரேல் சந்தேகிப்பதே காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
Similar News
News October 24, 2025
மகளிர் உரிமைத் தொகை… அமைச்சர் சொன்ன குட்நியூஸ்

பெண்களுக்கும் விவசாயிகளுக்கும் அமைச்சர் சக்கரபாணி, மகிழ்ச்சியான தகவலை தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மகளிர் உரிமைத் தொகைக்காக விண்ணப்பித்த பெண்களில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு ₹1,000 வழங்கப்படும் என்றார். மேலும், 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
News October 24, 2025
உலகில் நம்ப முடியாத உண்மைகள்

நாம் வாழும் இந்த உலகம் பல அதிசயங்களால் நிரம்பியது. இங்கு நம்ப முடியாத விசித்திரமான மற்றும் ஆச்சரியமூட்டும் உண்மைகள் பல இருக்கின்றன. ஒவ்வொரு உண்மையும் ஒரு புதிய பார்வையைத் தருகிறது. இதில், சிலவற்றை, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோன்று உங்களுக்கு தெரிந்த சுவாரஸ்யமான தகவலை கமெண்ட்ல சொல்லுங்க.
News October 24, 2025
ALERT: இந்த மாவட்டங்களில் நள்ளிரவு வரை மழை பெய்யும்

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என IMD அறிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, தென்காசி, தேனி, திருவள்ளூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்த சில நாள்களுக்கு மழை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.