News April 15, 2024

ஈரானிடம் அணுகுண்டுகள்?

image

ஏவுகணை, ட்ரோன் தாக்குதலுக்கு பிறகும் இஸ்ரேல் அமைதி காப்பதன் பின்னணியில், ஈரானிடம் அணுகுண்டுகள் இருக்கலாம் என்று சந்தேகிப்பதே காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் முதல்முறையாக நேரடியாக தாக்குதல் நடத்தியும், அதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்கவில்லை. இதை வைத்து ஈரானிடம் அணுகுண்டுகள் இருக்கலாம் என்று இஸ்ரேல் சந்தேகிப்பதே காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Similar News

News December 16, 2025

150 kmph வேகத்தில் சீறிய ரயில்.. புதிய உச்சம்

image

ரயிலின் வேகத்தில் இந்திய ரயில்வே புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. தன்பாத் மண்டலத்தில் ரயிலை 150 kmph வேகத்தில் செலுத்தி, வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனை ஓட்டத்தின் போது, டம்ளரில் இருந்த நீர் சிந்தாமல், சுமூகமான பயணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. வந்தே பாரத், ராஜதானி மற்றும் சதாப்தி உள்ளிட்ட முக்கிய ரயில்களின் அதிகபட்ச வேகம் 130 kmph ஆக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

News December 15, 2025

இப்படித்தான் மது குடிக்க பழகினேன்: ஊர்வசி

image

முதல் கணவர் வீட்டுக்கு சென்ற பின் தான், குடிக்க பழகியதாக ஊர்வசி தெரிவித்துள்ளார். கணவர் வீட்டில் அனைவரும் மாடர்னாக இருந்தனர். குழந்தைகள், பெற்றோருடன் அமர்ந்து குடிப்பது வழக்கமாக இருந்தது. ஒரு கட்டத்திற்கு மேல் நானும் மது குடிக்க ஆரம்பித்தேன். நாளடைவில் குடிக்கு அடிமையாகி, அதில் இருந்து வெளியேற மிகவும் கஷ்டப்பட்டதாக அவர் கூறியுள்ளார். நடிகர் மனோஜ் கே ஜெயனை ஊர்வசி முதலில் திருமணம் செய்திருந்தார்.

News December 15, 2025

இனி தனியாரும் அணுமின் நிலையங்களை நடத்தலாம்!

image

அணுமின் உற்பத்தி துறையை தனியாருக்கு திறந்துவிடும் SHANTI மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இதன்மூலம், சிறிய அளவிலான அணுமின் நிலையங்களை நிறுவ தனியாருக்கு அனுமதி வழங்கப்படும். அதேபோல், அரசின் பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்தும் தனியார் நிறுவனங்கள் செயல்படலாம். நாட்டில் அமைக்கப்பட உள்ள தரவு மையங்களுக்கு அதிகளவு மின்சாரம் தேவை என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!