News April 26, 2025
மத்தியஸ்தம் செய்யத் தயார்.. ஈரான் அறிவிப்பு

இந்தியாவும், பாகிஸ்தானும் எங்களின் சகோதர நாடுகள் எனத் தெரிவித்துள்ள ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் சையீது அப்பாஸ் அராச்சி, இரு நாடுகளிடையே பதற்றத்தை தணிக்க மத்தியஸ்தம் செய்யத் தயார் என்றும் கூறியுள்ளார். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, சிந்து நதி நீர் நிறுத்தம், அட்டாரி – வாகா எல்லை மூடல், தூதர்கள் வெளியேற்றம், துப்பாக்கிச்சூடு என இந்தியாவின் அடுத்தடுத்த நடவடிக்கைகளால் போர் பதற்றம் நிலவுகிறது.
Similar News
News April 26, 2025
முட்டை, மீன்கள் விலை அதிகரிப்பு

மீன்பிடி தடைக்காலம் என்பதால் விசைப்படகுகள் கடலுக்கு செல்வதில்லை. தற்போது நாட்டுப் படகில் மட்டுமே மீன்பிடித்து வரப்படுகிறது. இதனால் மீன்களில் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, ஷீலா மீன் ஒரு கிலோ 1500 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஊழி, பாறை மீன்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதேபோல், முட்டை கொள்முதல் விலை 5 காசு உயர்ந்து ₹4.10ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
News April 26, 2025
பொன்முடியை மறைமுகமாக அட்டாக் செய்த கனிமொழி

அமைச்சர் பொன்முடி சமீபத்தில் பெண்களை மோசமாக பேசியது பெரும் சர்ச்சையானது. இந்நிலையில், பெண்களை இழிவாகப் பேசுபவர் சுயமரியாதைக்காரராக இருக்க மாட்டார் என்று பொன்முடியை கனிமொழி மறைமுகமாக அட்டாக் செய்துள்ளார். மதவாதிகள் சிலர் தாங்கள் உருவாக்கிய கட்டமைப்பை உடைக்கக் கூடாது என நினைக்கின்றனர் எனக் கூறிய அவர், தவறான அரசியல் மூலம் தமிழ்நாட்டில் சாதி என்பது மெல்ல நுழைகிறது; அதை தவிர்க்க வேண்டும் என்றார்.
News April 26, 2025
ராகு, கேது பெயர்ச்சி: வீட்டில் விளக்கு ஏற்றுங்கள்

இன்று மாலை ராகு பகவான், மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கும் பெயர்ச்சி அடைந்துள்ளனர். எனவே, மேஷம், மிதுனம், கன்னி, தனுசு, மீனம், துலாம் ராசிக்காரர்கள், வீட்டின் தென்மேற்கு மூலையில், நல்லெண்ணை விளக்கு ஏற்றி துர்க்கை அம்மனை வழிபாடு செய்யுங்கள். குறிப்பாக, நாளை காலை 7:30 – 8:30 அல்லது மாலை 4:30 – 6:00 விளக்கு ஏற்றினால் பல நன்மைகள் கிடைக்கும்.