News April 15, 2024

இந்தியாவுக்கு ஈரான் அனுமதி

image

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு வந்துக் கொண்டிருந்த சரக்கு கப்பலை ஈரான் இஸ்லாமிய புரட்சி படையினர் சிறை பிடித்துள்ளனர். அதில் இந்தியாவைச் சேர்ந்த 17 மாலுமிகள் உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 25 மாலுமிகள் சிக்கியுள்ளனர். இந்நிலையில் ஈரான் அதிகாரிகளுடன் இந்திய வெளியுறவுத் துறை தொடர்பு கொண்டு பேசியது. இதன் விளைவாக இந்திய மாலுமிகளை இந்திய அதிகாரிகள் சந்திக்க ஈரான் அனுமதி அளித்துள்ளது.

Similar News

News October 19, 2025

விவாகரத்து வழக்கில் ஐகோர்ட் நூதன தீர்ப்பு

image

நன்றாக சம்பாதிக்கும் மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க தேவையில்லை என டெல்லி ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. வழக்கறிஞர் ஒருவருக்கும், ரயில்வே அதிகாரியான பெண்ணுக்கும் கடந்த 2010-ல் திருமணம் நடந்துள்ளது. விவாகரத்துக்கு ஒப்புக்கொள்ள மனைவி 50 லட்சம் கேட்டதாக தெரிகிறது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி, உண்மையிலேயே நிதி உதவி தேவைப்படுவார்கள் மட்டுமே பராமரிப்பு உதவி கோர முடியும் என தீர்ப்பளித்துள்ளார்.

News October 19, 2025

தங்கம் விற்பனை 25% குறைந்தது

image

தங்கம் விலை ஏற்றத்தால் தீபாவளி பண்டிகைக்கான விற்பனை 25% சரிந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பேசிய தமிழ்நாடு நகை வியாபாரிகள் சம்மேளனத்தின் ஆலோசகர் SKS சையது அகமது, தங்கம் விலையேற்றம் எங்கு போய் முடியும் என தெரியவில்லை என்றார். மேலும், விலை உயர்வால் நகை வியாபாரிகள் மகிழ்ச்சியில் இல்லை எனவும், பல கோடிகள் அதில் முடங்கியுள்ளதால் விற்பனை செய்யமுடியாமல் திணறி வருவதாக கூறினார்.

News October 19, 2025

FLASH: சீமான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

image

நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக, சீமான் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்தாண்டு நவ. மாதம் யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய சீமான், நீதிமன்ற செயல்பாடுகளை ஆபாச வார்த்தைகளால் பேசியதாக கூறி சார்லஸ் அலெக்சாண்டர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் மீது, எழும்பூர் கோர்ட் உத்தரவின் அடிப்படையில், திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!