News April 15, 2024
இந்தியாவுக்கு ஈரான் அனுமதி

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு வந்துக் கொண்டிருந்த சரக்கு கப்பலை ஈரான் இஸ்லாமிய புரட்சி படையினர் சிறை பிடித்துள்ளனர். அதில் இந்தியாவைச் சேர்ந்த 17 மாலுமிகள் உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 25 மாலுமிகள் சிக்கியுள்ளனர். இந்நிலையில் ஈரான் அதிகாரிகளுடன் இந்திய வெளியுறவுத் துறை தொடர்பு கொண்டு பேசியது. இதன் விளைவாக இந்திய மாலுமிகளை இந்திய அதிகாரிகள் சந்திக்க ஈரான் அனுமதி அளித்துள்ளது.
Similar News
News December 5, 2025
விடுமுறை: சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு

வார விடுமுறையையொட்டி நாளை (டிச.5) முதல் டிச.7 வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து மக்கள் சிரமமின்றி ஊருக்கு செல்ல கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டிருந்தால் உடனடியாக டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள். சற்றும் தாமதிக்காமல் டிக்கெட் புக் செய்ய இங்கே <
News December 5, 2025
மீண்டும் கேமியோவில் விஜய் மகன்

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தனது முதல் படமான சிக்மாவை விறுவிறுப்பாக இயக்கி வருகிறார்.. சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்துக்காக விஜய் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதனிடையே தமன் இசையில் படத்தில் வரும் ஒரு குத்து பாடலில் ஜேசன் சஞ்சய் கேமியோ டான்ஸ் செய்திருக்கிறாராம். ஏற்கனவே வேட்டைக்காரன் படத்தில் விஜய்யுடன் இணைந்து சிறு வயதில் ஜேசன் சஞ்சய் நடனமாடியிருந்தார்.
News December 5, 2025
நள்ளிரவு 1 மணி வரை 14 மாவட்டங்களில் மழை பெய்யும்

நள்ளிரவு 1 மணி வரை 14 மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் ஊரில் மழை பொழியுதா? கமெண்ட் பண்ணுங்க


