News April 15, 2024
இந்தியாவுக்கு ஈரான் அனுமதி

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு வந்துக் கொண்டிருந்த சரக்கு கப்பலை ஈரான் இஸ்லாமிய புரட்சி படையினர் சிறை பிடித்துள்ளனர். அதில் இந்தியாவைச் சேர்ந்த 17 மாலுமிகள் உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 25 மாலுமிகள் சிக்கியுள்ளனர். இந்நிலையில் ஈரான் அதிகாரிகளுடன் இந்திய வெளியுறவுத் துறை தொடர்பு கொண்டு பேசியது. இதன் விளைவாக இந்திய மாலுமிகளை இந்திய அதிகாரிகள் சந்திக்க ஈரான் அனுமதி அளித்துள்ளது.
Similar News
News December 7, 2025
ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு.. வந்தது HAPPY NEWS

ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு வழங்குவதற்கான அறிவிப்பை இம்மாத இறுதியில் அரசு வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது. வேட்டி, சேலை மற்றும் பச்சரிசி உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு ஆகியவற்றை டோக்கன் அடிப்படையில் வழங்க அரசு பரிசீலித்து வருகிறது. அதுமட்டுமின்றி, பரிசுத் தொகையாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ₹5,000 வரை வழங்குவது தொடர்பாகவும் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
News December 7, 2025
போருக்கு தயாராகிறதா வெனிசுலா?

அமெரிக்கா-வெனிசுலா இடையே போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், வெனிசுலா புதிதாக 5,600 வீரர்களை ராணுவத்தில் சேர்த்துள்ளது. போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை என வெனிசுலா கப்பல்களை, USA தாக்கி வருகிறது. இதில், இதுவரை 87 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வெனிசுலாவின் எண்ணெய் வளங்களை கைப்பற்ற நடக்கும் USA-வின் சதி இது என்று குற்றஞ்சாட்டியுள்ள அதிபர் மதுரோ, ராணுவத்தை பலப்படுத்தி வருகிறார்.
News December 7, 2025
95% விமான சேவையை தொடங்கிய இண்டிகோ

இண்டிகோ விமான சேவை பாதிப்பால் கடந்த 6 நாட்களாக பெரும் பாதிப்பை பயணிகள் சந்தித்து வந்தனர். இந்நிலையில் 95% விமான சேவைகள் இன்று இயக்கப்பட்டு வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சுமார் 1,500 விமானங்கள் இயக்கப்படுவதால் பயணிகளுக்கு இனி எந்த பாதிப்பும் இருக்காது என இண்டிகோ உறுதியளித்துள்ளது. முன்னதாக சேவை பாதிப்பு குறித்து அந்நிறுவனத்தின் CEO பீட்டர் எல்பர்ஸுக்கு <<18492959>>DCGA நோட்டீஸ்<<>> அனுப்பியுள்ளது.


