News April 15, 2024

இந்தியாவுக்கு ஈரான் அனுமதி

image

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு வந்துக் கொண்டிருந்த சரக்கு கப்பலை ஈரான் இஸ்லாமிய புரட்சி படையினர் சிறை பிடித்துள்ளனர். அதில் இந்தியாவைச் சேர்ந்த 17 மாலுமிகள் உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 25 மாலுமிகள் சிக்கியுள்ளனர். இந்நிலையில் ஈரான் அதிகாரிகளுடன் இந்திய வெளியுறவுத் துறை தொடர்பு கொண்டு பேசியது. இதன் விளைவாக இந்திய மாலுமிகளை இந்திய அதிகாரிகள் சந்திக்க ஈரான் அனுமதி அளித்துள்ளது.

Similar News

News December 2, 2025

இலங்கைக்கு இந்தியா துணை நிற்கும்: PM மோடி

image

இலங்கையை புரட்டிப்போட்ட டிட்வா புயலால் இதுவரை 360-க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தொலைபேசி வாயிலாக அதிபர் அநுரகுமார திசாநாயக்கவுடன் பேசிய மோடி, இந்தியா இலங்கை மக்களுக்கு உறுதுணையாக நிற்கும் என தெரிவித்துள்ளார். மேலும் சாகர்பந்து நடவடிக்கையின் கீழ் அனைத்து அத்தியாவசிய உதவிகளையும் இந்தியா வழங்கும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

News December 2, 2025

பிறந்தநாள் வாழ்த்து அனுப்புங்க

image

இன்று (டிச.2) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

News December 2, 2025

பொருளாதார குற்றவாளிகளால் ₹57,082 கோடி இழப்பு

image

நிதி முறைகேடுகளில் ஈடுபட்டு நாட்டில் இருந்து தப்பியோடியவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து காங்., MP முராரிலால் மீனா லோக்சபாவில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, மொத்தம் 15 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இவர்களால் ₹57,082 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது; இவர்களிடம் இருந்து ₹19,817 கோடி மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

error: Content is protected !!