News August 11, 2025

IPS அதிகாரிகள் பணியிட மாற்றம்

image

4 IPS அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திருச்சி சரக டிஐஜியாக இருந்த வருண் குமார், சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஊர்க்காவல் படை கமாண்டண்டாக பிரமோத் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாநில குற்ற ஆவணப்பிரிவு ஐஜியாக ஜெயஸ்ரீ இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், ஆயுஷ் திவாரி டேன்ஜெட்கோவிற்கு பணியமர்த்தப்பட்டுள்ளார்.

Similar News

News August 12, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶ஆகஸ்ட் 12 – ஆடி 27 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: சதுர்த்தி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: தேய்பிறை.

News August 12, 2025

விவசாயிகளை திமுக பழிவாங்குகிறது: இபிஎஸ்

image

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக அரசு விவசாயிகளைப் பழி வாங்குவதாக இபிஎஸ் குற்றம் சுமத்தியுள்ளார். ராயக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் பேசிய அவர், பெங்களூரு சென்று மலர்களை விற்பதை தடுக்கும் வகையில் ₹20 கோடியில் சர்வதேச ஏல மையத்தை கடந்த அதிமுக ஆட்சியில் இப்பகுதியில் அமைத்தோம், ஆனால் தற்போது அது பூட்டிக்கிடப்பதாகவும், அரசியல் காழ்ப்புணர்ச்சியே இதற்கு காரணமெனவும் தெரிவித்துள்ளார்.

News August 12, 2025

இல.கணேசனுக்கு 3வது நாளாக தீவிர சிகிச்சை

image

நாகாலாந்து கவர்னர் இல.கணேசனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆக. 8-ம் தேதி வீட்டில் வழுக்கி விழுந்ததால் தலையில் காயமடைந்த அவர், சென்னை அப்போலோ ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ICU-வில் 3-வது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டாக்டர்கள் குழுவினர் இல. கணேசனின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவரது உடல்நிலை குறித்த அறிக்கை விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

error: Content is protected !!