News November 28, 2024
ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து TN அரசு உத்தரவிட்டுள்ளது. ரயில்வே காவல்துறை டி.ஜி.பியாக வன்னியபெருமாள், மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் ஐ.ஜியாக எஸ்.மல்லிகா, கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு நிறுவனத்தின் லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஜிபியாக ராஜீவ் குமார், சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து காவல்துறை ஐ.ஜியாக அபிஷேக் தீக்ஷித் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News August 22, 2025
இதுக்கு சரியா பதில் சொல்லுங்க பார்ப்போம்!

அடுத்தடுத்து நியூஸ் படிச்சி டயர்ட்டாகி இருக்கும் உங்களின் மூளையை வாங்க கொஞ்சம் சுறுசுறுப்பாக்குவோம். மேலே உள்ள படத்தில் இருக்கும் கேள்வியை கவனியுங்க. இது பார்க்க பயங்கர கஷ்டமான கேள்வியாக தோன்றலாம். ஆனால், மூளையை கசக்கி பிழிந்தால், ரொம்ப ஈசிதான். எத்தனை பேர் கரெக்ட்டா பதில் சொல்றீங்கனு பார்ப்போம். ஒரே ஒரு குட்டி Hint: 3 லைன் உள்ளது.
News August 22, 2025
ஸ்வராஜ் பால் காலமானார்.. PM மோடி இரங்கல்

பிரபல தொழிலதிபரும், சமூக சேவகருமான லார்ட் ஸ்வராஜ் பால் (94), உடல்நலக் குறைவால் இன்று காலமானார். இவர் தனது தொண்டு நிறுவனங்கள் மூலம் எண்ணற்ற குழந்தைகள், இளைஞர்களுக்கு கல்வி, மருத்துவ சேவைகளை வழங்கி வந்தார். Caparo Group of industries-ன் நிறுவனரான இவரின் மறைவுக்கு PM மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இந்தியா உடனான உறவில் அவரது ஆதரவையும் மோடி நினைவுகூர்ந்துள்ளார்.
News August 22, 2025
சீமானை காப்பியடித்தாரா விஜய்?

இளவரசரை தேர்வு செய்ய நெல்மணியை கொடுத்து பயிராக்க சொன்னாராம் மன்னர். அதை பெற்றுச் சென்றவர்களில் ஒருவரைத் தவிர அனைவரும் முளைத்த கதிரோடு வந்தனர். ஆனால் கொடுத்த விதையை அப்படியே கொண்டு வந்தவரே இளவரசரானார். ஏனென்றால் அவர் கொடுத்தது அவித்த விதை. இந்த கதையையே தவெக மாநாட்டில் விஜய் சொன்னார். இது ஏற்கெனவே 2021-ல் சீமான் கூறியிருக்கிறார். எனவே சீமானை விஜய் காப்பியடித்துள்ளதாக நாதகவினர் கூறி வருகின்றனர்.