News March 18, 2025

ஐபிஎல்: அதிக ரன், அதிக விக்கெட் எடுத்த வீரர்கள் யார்?

image

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள், அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் யார் என பார்க்கலாம். ஆர்சிபி அணி வீரர் விராட் கோலி, 17 சீசன்களிலும் ஒரே அணிக்காக 252 போட்டிகள் விளையாடி 8,004 ரன்கள் விளாசியுள்ளார். இதில் 8 சதங்கள், 55 அரைசதங்களும் அடங்கும். இதுவே ஒரு வீரரின் அதிகபட்ச ரன்கள் ஆகும். மும்பை, ஆர்ஆர், ஆர்சிபி அணிகளுக்காக 160 போட்டிகள் சாஹல் விளையாடி 205 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.

Similar News

News July 8, 2025

ஜூலை 8… வரலாற்றில் இன்று!

image

*1099 – 1-ம் சிலுவைப் போர். 15,000 கிறித்தவ வீரர்கள் பட்டினியுடன் ஜெருசலேமை முற்றுகையிட்டனர் *1497 – வாஸ்கோ டோகாமாவின் இந்தியாவுக்கான முதல் நேரடிப் பயணம் ஆரம்பித்தது *1947 – அடையாளம் கண்டுபிடிக்க முடியாத பறக்கும் பொருள் ஒன்று நியூ மெக்சிகோவில் விழுந்ததாக அறிவிக்கப்பட்டது * 1972: இந்திய Ex. கேப்டன் கங்குலியின் பிறந்தநாள் *2003 – சூடான் விமானம் விபத்துக்குள்ளானதில் 117 பேர் உயிரிழந்தனர்.

News July 8, 2025

இந்திய பொருள்களுக்கு வரி.. அவகாசத்தை நீட்டித்த டிரம்ப்

image

USA-வில் இந்தியப் பொருள்களுக்கு வரும் நாளை முதல் 27% வரி விதிப்பு அமலாகும் என அந்நாட்டு அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார். இந்நிலையில், இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான புதிய இறக்குமதி வரி விதிப்பு ஆக.1-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், விலை உயர்வு, சந்தை பாதிப்பு அச்சம் தவிர்க்கப்பட்டுள்ளது. அதிபராக டிரம்ப் பதவியேற்றது முதலே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது கவனிக்கத்தக்கது.

News July 8, 2025

செல்வப்பெருந்தகை புனிதநீர் ஊற்ற அனுமதி மறுப்பு

image

வல்லக்கோட்டை சுப்பிரமணிய சாமி திருக்கோவில் குடமுழுக்கு விழாவில் விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றும் பகுதிக்கு தமிழிசை அனுமதிக்கப்பட்ட நிலையில், செல்வப்பெருந்தகைக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இது குறித்து பேசிய செல்வப்பெருந்தகை, என்னை தடுத்து நிறுத்தியது ஏன் என அதிகாரிகளைத் தான் கேட்க வேண்டும் என்றார். மேலும் 2000 ஆண்டுகளாக இந்த பிரச்னை உள்ளது, அதனை ஒரே இரவில் தீர்க்க முடியாது எனவும் கூறினார்.

error: Content is protected !!