News March 22, 2025

IPL: வரலாறு படைக்கப்போகும் அந்த 9 பேர்…!

image

ஐபிஎல் தொடர் 17 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான வீரர்களை பார்த்துவிட்டது. ஆனால், அதில் 9 பேர் மட்டுமே 18வது சீசனிலும் விளையாடுகிறார்கள். இந்த பட்டியலில், தோனி, கோலி, ரோஹித் ஆகிய மூவரும் நமக்கு உடனே ஞாபகத்திற்கு வந்துவிடுவர். மீதியுள்ள ஆறு பேர் யார் தெரியுமா? ஜடேஜா, அஸ்வின், ரஹானே, மனீஷ் பாண்டே, இஷாந்த் சர்மா, ஸ்வப்னில் சிங் இவர்கள்தான் அது. 9 பேருமே இந்திய வீரர்கள் என்பது கூடுதல் சிறப்பு.

Similar News

News March 23, 2025

அரசு பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் AI பாடம்

image

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், அடுத்த ஆண்டு முதல் கணினி அறிவியல் மற்றும் AI பாடத்திட்டம் கொண்டு வரப்படும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார். இந்த பாடத்திட்ட மாற்றம், தொழில்நுட்ப நிறுவனங்களின் உதவியோடு 15 நாட்களில் முடிவடையும் எனவும், 6,029 மேல்நிலைப் பள்ளிகளில், உயர் தொழில்நுட்ப ஆய்வு கூடங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

News March 23, 2025

IPL 2025: கடைசி நேரத்தில் ஷர்துல் தாக்கூருக்கு அடித்த லக்!

image

இந்த ஆண்டு IPL தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில், காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் மொஹ்சின் கான் விளையாட மாட்டார் எனப்படுகிறது. அவருக்கு பதிலாக தற்போது ஷர்துல் தாக்கூரை ₹2 கோடிக்கு லக்னோ அணி ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. IPL மெகா ஏலத்தில் எந்த அணியாலும் வாங்கப்படாத ஆல் ரவுண்டர் தாக்கூர், லக்னோ அணியுடன் வலைப்பயிற்சியில் ஈடுபட்ட போட்டோஸ் வைரலாகி வருகிறது.

News March 23, 2025

நடிகர் மரணம்.. 4 ஆண்டுக்கு பின் நிம்மதியடைந்த நடிகை

image

நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தில் நீட்டித்து வந்த மர்மம் விலகியுள்ளது. சுஷாந்த்தை காதலில் வீழ்த்தி, நடிகை <<15855388>>ரியா <<>>சக்கரவர்த்தி பல கோடி மோசடி செய்ததாக விமர்சித்த நெட்டிசன்கள் #ArrestRheaChakraborty என்ற ஹேஷ்டேக்கையும் ட்ரெண்டிங் செய்தனர். இதனையடுத்து, போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக ரியா கைது செய்யப்பட்டார். இந்நிலையில், சுஷாந்த் மரணத்திற்கும், ரியாவுக்கும் தொடர்பில்லை என சிபிஐ கூறியுள்ளது.

error: Content is protected !!