News August 25, 2024

IPL: KKR அணிக்கு கேப்டனாகும் சூர்யகுமார் யாதவ்

image

MI அணியின் நட்சத்திர வீரரும் இந்திய அணியின் டி20 கேப்டனுமான சூர்யகுமார் யாதவை ஏலத்தில் எடுக்க கொல்கத்தா அணி விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. KKR அணியில் இணையும்பட்சத்தில், 2025 ஐபிஎல் சீசனில் அந்த அணியின் கேப்டன் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2014 முதல் 2017 வரை KKR அணிக்காக அவர் ஏற்கெனவே விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News December 6, 2025

வேலை நேரம் முடிந்த பிறகும் வேலை செய்ய சொன்னால்..?

image

வேலை நேரம் முடிந்த பிறகும், Client உடன் பேசுங்கள், இந்த Task-ஐ செய்யுங்கள் என TL, மேனஜர்களிடம் இருந்து ஊழியர்களுக்கு அழைப்புகள் வருவது வழக்கம். இதுபோன்று வரும் இ-மெயில்கள், அழைப்புகளை துண்டிக்கும் உரிமையை ஊழியர்களுக்கு வழங்கும் வகையில், NCP MP சுப்ரியா சுலே லோக்சபாவில் தனிநபர் மசோதா தாக்கல் செய்துள்ளார். இதை மத்திய அரசு ஏற்றுக் கொண்டால் சட்டமாகும். இந்த மசோதா நிறைவேற்றப்பட வேண்டுமா?

News December 6, 2025

விஜய் பொதுக்கூட்டத்தில் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி

image

புதுச்சேரியில் வரும் 9-ம் தேதி விஜய்யின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் தவெக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், டோக்கன் உள்ளவர்கள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்க முடியும் எனவும், கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்களுக்கு அனுமதி இல்லை என்றும் போலீசார் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.

News December 6, 2025

சமூகநீதியை காக்க உறுதியேற்போம்: விஜய்

image

தவெக அலுவலகத்தில் அம்பேத்கரின், படத்திற்கு மலர் தூவி விஜய் மரியாதை செலுத்தியுள்ளார். அம்பேத்கர் காட்டிய வழியில், சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மையை பேணிப் பாதுகாக்க உறுதியேற்போம் என சூளுரைத்துள்ளார். மேலும், அரசியலமைப்பு சட்டத்தின் வழியாக எளியவர்களுக்கும் அதிகாரம் வழங்கி எல்லோருக்கும் சட்ட உரிமைகள் கிடைக்க அடித்தளம் அமைத்தவர் அம்பேத்கர் என்றும் விஜய் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

error: Content is protected !!