News August 25, 2024

IPL: KKR அணிக்கு கேப்டனாகும் சூர்யகுமார் யாதவ்

image

MI அணியின் நட்சத்திர வீரரும் இந்திய அணியின் டி20 கேப்டனுமான சூர்யகுமார் யாதவை ஏலத்தில் எடுக்க கொல்கத்தா அணி விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. KKR அணியில் இணையும்பட்சத்தில், 2025 ஐபிஎல் சீசனில் அந்த அணியின் கேப்டன் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2014 முதல் 2017 வரை KKR அணிக்காக அவர் ஏற்கெனவே விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News December 1, 2025

சமந்தாவின் கணவர்.. யார் இந்த ராஜ் நிடிமொரு?

image

<<18437853>>சமந்தாவை<<>> கரம் பிடித்துள்ள ராஜ் நிடிமொரு திருப்பதியில் பிறந்தவர். இயக்குநர் DK உடன் இணைந்து பாலிவுட்டில் பல வெற்றி படங்களை ராஜ் இயக்கியுள்ளார். 2009-ல் ’99’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக பாலிவுட்டில் அடியெடுத்து வைத்த ராஜ், தொடர்ந்து ‘Go Goa Gone’, ‘A gentleman’ போன்ற படங்களை இயக்கினார். சமந்தா நடித்த ‘The Family man’ சீரிஸ், ‘Citadel: Honey Bunny’ போன்ற வெப் தொடர்களும் அவர் இயக்கியதுதான்.

News December 1, 2025

நெல் ஈரப்பத அளவை TN அரசு உயர்த்த சொல்வது ஏன்?

image

மத்திய அரசின் தரக்குறியீட்டின்படி, நெல் கொள்முதலுக்கான ஈரப்பதம் 17% இருக்கவேண்டும். ஆனால், தற்போது பருவமழை காலம் என்பதால் குறுவை நெல்லின் ஈரப்பதம் 17% விட அதிமாக இருக்கும். நிர்ணயிக்கப்பட்ட அளவை விட நெல் ஈரப்பதம் அதிகமாக இருந்தால் அது தரமற்றதாக கருதப்படும். எனவே விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் ஈரப்பத அளவை 22% வரை உயர்த்த TN அரசு கோரிக்கை வைத்துவருகிறது.

News December 1, 2025

கம்பீர் & ரோஹித் – கோலிக்கு இடையே வெடித்த பிரச்னை!

image

பயிற்சியாளர் கம்பீருக்கும் நட்சத்திர ஆட்டக்காரர்கள் ரோஹித் – கோலி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளிவந்துள்ளது. டெஸ்ட் போட்டிகளில் இருந்து இருவரும் ஓய்வு அறிவித்ததில் இருந்தே, தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் & கம்பீருடன் இரு வீரர்களுக்கும் உரசல் உருவானதாக கூறப்படுகிறது. விரைவில் Ro-Ko-வின் எதிர்காலம் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

error: Content is protected !!