News August 25, 2024
IPL: KKR அணிக்கு கேப்டனாகும் சூர்யகுமார் யாதவ்

MI அணியின் நட்சத்திர வீரரும் இந்திய அணியின் டி20 கேப்டனுமான சூர்யகுமார் யாதவை ஏலத்தில் எடுக்க கொல்கத்தா அணி விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. KKR அணியில் இணையும்பட்சத்தில், 2025 ஐபிஎல் சீசனில் அந்த அணியின் கேப்டன் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2014 முதல் 2017 வரை KKR அணிக்காக அவர் ஏற்கெனவே விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 3, 2025
நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று டிசம்பர்.02 நாமக்கல்-(தங்கராஜ் – 9498170895) ,வேலூர் -(சுகுமாரன் – 8754002021), ராசிபுரம் -(சின்னப்பன் – 9498169092), குமாரபாளையம் -(ரவி – 6374774936 ) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News December 3, 2025
அர்னால்டை பின்னுக்கு தள்ளிய ஷாருக் கான்

2025 ஹுருன் பணக்காரர்கள் பட்டியலில் ஷாருக்கான ₹12,490 கோடி சொத்து மதிப்புடன் உலக பணக்கார நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். அர்னால்ட், டாம் குரூஸ் ஆகியோரையெல்லாம் பின்னுக்கு தள்ளி, கிங் கான், பாலிவுட்டில் இருந்து உலகளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். உலக பணக்கார நடிகர்கள் பட்டியலில் ஷாருக் கான் எந்த இடத்தில் இருக்கிறார் தெரியுமா? மேலே உள்ள போட்டோஸை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 3, 2025
ஆவின் விவகாரத்தில் திமுக நாடகம்: அன்புமணி

தமிழக அரசுத்துறை நிறுவனமான ஆவின் அதன் நெய், பன்னீர் ஆகியவற்றின் விலையை 5-வது முறையாக உயர்த்தியிருக்கிறது. ஜிஎஸ்டி வரிகுறைப்பை நடை முறைப்படுத்த தவறிய திமுக மக்களிடம் ஏற்பட்ட கொந்தளிப்பை கட்டுபடுத்த தள்ளுபடி நாடகத்தை அரங்கேற்றியதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மக்கள் நலனை கருத்தில் கொண்டு ஆட்சி நடத்த வேண்டிய திமுக, அதற்கு எதிராக நாடகம் நடத்துவது கண்டிக்கத்தக்கது எனவும் அவர் சாடியுள்ளார்.


