News August 25, 2024

IPL: KKR அணிக்கு கேப்டனாகும் சூர்யகுமார் யாதவ்

image

MI அணியின் நட்சத்திர வீரரும் இந்திய அணியின் டி20 கேப்டனுமான சூர்யகுமார் யாதவை ஏலத்தில் எடுக்க கொல்கத்தா அணி விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. KKR அணியில் இணையும்பட்சத்தில், 2025 ஐபிஎல் சீசனில் அந்த அணியின் கேப்டன் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2014 முதல் 2017 வரை KKR அணிக்காக அவர் ஏற்கெனவே விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News November 25, 2025

BREAKING: வேட்பாளர்களை அறிவித்த ராமதாஸ்!

image

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்குமரன், MLA அருள் ஆகியோர் நிச்சயம் போட்டியிடுவார்கள் என ராமதாஸ் அறிவித்துள்ளார். தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் விரைவில் போராட்டத்தை நடத்த உள்ளதாக கூறினார். இரு அணிகளாக பிரிந்து கிடக்கும் பாமகவை இணைக்க NDA தரப்பினர் ஒருபுறம் பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. உங்கள் கருத்து என்ன?

News November 25, 2025

2 நாள்களில் 644 புள்ளிகள் சரிந்துள்ளது சென்செக்ஸ்

image

தொடர்ந்து இரண்டாவது நாளாக பங்குச்சந்தை 300 <<18376719>>புள்ளிகளுக்கு மேல்<<>> சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. சென்செக்ஸ் 313 புள்ளிகள் சரிந்து 84,587 புள்ளிகளிலும், நிஃப்டி 74 புள்ளிகள் சரிந்து 25,884 புள்ளிகளிலும் வர்த்தகமாகின. HDFC Bank, Adani Enterprises, Infosys உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன. நீங்கள் வாங்கிய SHARE உங்களுக்கு லாபம் தந்ததா?

News November 25, 2025

கமலாலயத்தில் வேலைக்கு சேர வேண்டியவர் கவர்னர்: ரகுபதி

image

தமிழகத்தில் பிஹாரிகள் அச்சுறுத்தப்படுவதாக கவர்னர் R.N.ரவி குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் கவர்னர் தவறான தகவல்களை பரப்பி வருவதாக அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார். தமிழர்களுக்கு எதிராக பேசுவதையே கவர்னர் வேலையாக வைத்துள்ளதாகவும், கமலாலயத்தில் வேலைக்கு சேர வேண்டியவர் R.N.ரவி எனவும் கடுமையாக சாடியுள்ளார். தமிழகம் தனித்து செயல்படுவதாக கவர்னர் வைத்த குற்றச்சாட்டையும் அவர் மறுத்துள்ளார்.

error: Content is protected !!