News August 25, 2024
IPL: KKR அணிக்கு கேப்டனாகும் சூர்யகுமார் யாதவ்

MI அணியின் நட்சத்திர வீரரும் இந்திய அணியின் டி20 கேப்டனுமான சூர்யகுமார் யாதவை ஏலத்தில் எடுக்க கொல்கத்தா அணி விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. KKR அணியில் இணையும்பட்சத்தில், 2025 ஐபிஎல் சீசனில் அந்த அணியின் கேப்டன் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2014 முதல் 2017 வரை KKR அணிக்காக அவர் ஏற்கெனவே விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 23, 2025
6 ஆண்டுகளுக்கு பின் சதம்… முத்துசாமியின் சாதனை

இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில், இன்று SA பேட்ஸ்மேன் முத்துசாமி, தனது முதல் சதத்தை(109) அடித்தார். இதன்மூலம், 6 ஆண்டுகளுக்கு பின், இந்தியாவில் 7 (அ) அதற்கு அடுத்த நிலையில் இறங்கி சதம் அடித்த முதல் SA வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். கடைசியாக 2019-ல் டி காக் இந்தியாவில் சதம் அடித்தார். மேலும், இந்தியா, பாக்., வ.தேசம் நாடுகளில் 50+ ரன்கள் குவித்த 4-வது SA வீரராகவும் முத்துசாமி சாதித்துள்ளார்.
News November 23, 2025
SIR ஒரு திட்டமிட்ட சதி: ராகுல் காந்தி

SIR என்பது ஒரு சீர்திருத்தம் அல்ல, அது ஒரு திணிக்கப்பட்ட ஒடுக்குமுறை என்று ராகுல் காந்தி சாடியுள்ளார். 16 BLO-க்கள் உயிரிழந்ததை X-ல் சுட்டிக்காட்டி, SIR என்ற திட்டமிட்ட சதியால் வாக்காளர்கள் துன்புறுத்தப்படுவதாகவும், தேவையற்ற அழுத்தத்தால் BLO-க்கள் இறப்பதாகவும் தெரிவித்துள்ளார். SIR-ன் நோக்கம் சரியாக இருந்திருந்தால் EC போதுமான அவகாசம் எடுத்து அதை செயல்படுத்தியிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
News November 23, 2025
அஜித்தை பாராட்டிய செல்வப்பெருந்தகை

கார் ரேஸிங்கில் விருதுகளை குவித்துவரும் அஜித்துக்கு, <<18364909>>GENTLEMAN DRIVER OF THE YEAR 2025<<>> விருது மேலும் ஒரு மகுடமாக அமைந்திருக்கிறது. அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்த செல்வப்பெருந்தகை, தன்னம்பிக்கை, கடின உழைப்புதான் வெற்றியின் அடித்தளம் என்பதை அவர் மீண்டும் நிரூபித்திருப்பதாக பாராட்டியுள்ளார். அஜித்தின் எதிர்கால முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்க வாழ்த்துகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


