News August 25, 2024
IPL: KKR அணிக்கு கேப்டனாகும் சூர்யகுமார் யாதவ்

MI அணியின் நட்சத்திர வீரரும் இந்திய அணியின் டி20 கேப்டனுமான சூர்யகுமார் யாதவை ஏலத்தில் எடுக்க கொல்கத்தா அணி விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. KKR அணியில் இணையும்பட்சத்தில், 2025 ஐபிஎல் சீசனில் அந்த அணியின் கேப்டன் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2014 முதல் 2017 வரை KKR அணிக்காக அவர் ஏற்கெனவே விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 26, 2025
₹6 செலுத்தினால் ₹1 லட்சம் கிடைக்கும் திட்டம்

போஸ்ட் ஆபீஸ் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ திட்டத்தில், 1 நாளைக்கு ₹6 பிரீமியமாக செலுத்தினால் 5 வருடங்கள் கழித்து ₹1 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும். இது குழந்தைகளுக்கான ஆயுள் காப்பீட்டுத் திட்டம் என்பதால் அவர்கள் பெயரில்தான் கணக்கு தொடங்கமுடியும். இதற்கு, குழந்தைகள் 5-20 வயதிற்குள்ளேயும், பெற்றோர்கள் 45 வயதிற்கு மிகாமலும் இருக்கணும். இந்த திட்டத்தை தொடங்க அருகில் உள்ள போஸ்ட் ஆபீசுக்கு போங்க. SHARE.
News November 26, 2025
BREAKING: ₹1,000 மகளிர் உரிமை தொகை.. வந்தது HAPPY NEWS

விடுபட்டவர்களுக்கு டிச.15 முதல் மகளிர் உரிமை தொகை ₹1000 வழங்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விடுபட்டவர்களும் பயன்பெறும் வகையில் அரசு சில தளர்வுகள் வழங்கியது. இதை பயன்படுத்தி, ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் மூலம் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பத் தலைவிகள் விண்ணப்பித்து காத்திருந்த நிலையில், இந்த மகிழ்ச்சியான அறிவிப்பை ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
News November 26, 2025
EPS-க்கும் கருணாநிதியின் நிலைமைதானா?

1972-ல் MGR-ஐ திமுகவிலிருந்து நீக்கியபோது, கட்சி நிர்வாகிகள் கருணாநிதியின் பின்னால்தான் இருந்தார்கள். அதன்பின் MGR தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு, மக்களின் ஆதரவால் தேர்தலில் வென்றார். தற்போது செங்கோட்டையனும் அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டு, கட்சி தாவ உள்ளார். MGR உடன் ஒப்பிடமுடியாது என்றாலும், KAS-க்கு கொங்கில் செல்வாக்கு இருக்கிறது. எனவே இது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்கின்றனர்.


