News April 12, 2024

IPL: தரமான கம்பேக் கொடுத்த சூர்யகுமார் யாதவ்

image

RCB-க்கு எதிரான ஐபிஎல் போட்டியில், சூர்யகுமார் யாதவ் கம்பேக் கொடுத்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஐபிஎல் தொடரில் களமிறங்கிய அவர், முதல் போட்டியில் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானார். நேற்றைய போட்டியில் இம்பேக்ட் வீரராக களமிறங்கி தனது அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி, 5 பவுண்டரி, 4 சிக்சர்கள் என விளாசி அசத்தினார். இதனால் 17 பந்துகளில் அரைசதம் கடந்த அவர், 52(19) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

Similar News

News November 8, 2025

இந்திய அணியில் சா பூ திரி விளையாட்டு?

image

ஒவ்வொரு போட்டிக்கும் இந்தியாவின் பேட்டிங் ஆர்டர் தேவையின்றி மாற்றப்படுவதாக ரசிகர்கள் கருதுகின்றனர். 1, 3-வது டி20-ல் சூர்யகுமார் ஒன் டவுன் வீரராக களமிறங்க, அதே வரிசையில் 2-வது டி20-ல் சாம்ஸன், 4-வது டி20-ல் துபே களமிறங்கினர். இதில் சஞ்சு 2 ரன்களுக்கு அவுட் ஆனதால், அடுத்த போட்டியில் டிராப் செய்யப்பட்டார். இப்படி செய்வது ஃபார்மில் இருக்கும் வீரர்களை பாதிக்கும் என்று ரசிகர்களும் தெரிவிக்கின்றனர்.

News November 8, 2025

பிக்பாஸ் ஒரு ஆபாசமான நிகழ்ச்சி: வேல்முருகன்

image

விஜய் சேதுபதி நடத்தும் பிக்பாஸ் தமிழை மிகவும் அருவருக்கத்தக்க, ஆபாசமான நிகழ்ச்சி என்று வேல்முருகன் விமர்சித்துள்ளார். இதில் விஜய் சேதுபதிக்கும் தனக்கு எந்தவித தகராறும் இல்லை என்றும், இது குடும்ப உறவுமுறையை சிதைக்கும் நிகழ்ச்சி எனவும் அவர் கூறியுள்ளார். இந்த விஷயத்தில் பொதுமக்களின் கருத்தை அறிந்த பிறகே நிகழ்ச்சிக்கு தடை கோரி போராட்டத்தை முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News November 8, 2025

தமிழை வைத்து தமிழர்களை சுரண்டும் திமுக: நயினார்

image

தேர்தல் வாக்குறுதிபடி காளை வளர்ப்போருக்கு மாதம் ₹1,000 ஊக்கத்தொகையை திமுக வழங்காதது ஏன் என நயினார் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழை வைத்து தமிழர்களைச் சுரண்டி திமுக ஆட்சியை பிடித்ததாக சாடியுள்ள அவர், CM ஸ்டாலினின் அரசு மாடுபிடி வீரர்களுக்கான பரிசுத் தொகையை நிறுத்திவிட்டதாகவும் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக, திமுக அரசு இன்றுவரை வாய்திறக்க மறுப்பதாகவும் நயினார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!